
பாகம் மூன்றின் முதலாவது தொடர்
தலைமைப்பீடத்தின் கதை (CAPITAL OF STORY) இது அனைத்து விடுதலைப் புலிகள் சார்ந்த பதிவுகளில் இருந்தும் பெறப்பட்டது,
மட்டும் அல்லாமல் 2009 இறுதி யுத்தத்தில் உயிர் தப்பிய சுமார் 150 போராளிகளிடம் உன்மை நிலையான கருத்துக்கள் பெறப்பட்டு. K. நிமலேஸ்வரன் அல்லது வாமண்டபாட்ணர் அல்லது OSCAR என்பவரால் எழுதப்பட்டது இது தமிழீழ விடுதலைப் புலிகளின்வரலாற்று ஆவணத்தொகுப்பாகும் இதை 7 முதல்நிலைப் போராளிகள் சரிபார்த்துள்ளனர்,
உள்ளடக்கம், 1985 தொடக்கம் 1990 வரையான பிரத்தியேகமான வரலாற்றுக் கதையின் உள்ளடக்கம்,……….!
01– 09/01/1985 பண்டிதரின் வீரச்சாவிற்கு முன்னர் அனைத்து மாவட்டங்களிற்கும் கட்டளை அதிகாரியாக இருந்த தளபதிகிட்டு,….
02 — 1986 இந்தியாவில் நடந்த கடைசிப் பயிற்சிமுகாம்,…..
03– 1985 ஆண்டு முதல் பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை நடந்த சிறுசிறு தாக்குதல்கள்……
04– 1985 ஆண்டு காலப்பகுதியில் தளபதி குமரப்பா மட்டக் களப்பில் செய்த சிறந்த நடவடிக்கைகள்…..
05– 1986 ஆண்டு மாற்று இயக்கமான ரெலோவோடு சண்டையிட்டு வெற்றியீட்டினார் தளபதி கிட்டு…..
06– மட்டக்களப்பில் நடந்த ஆரம்பப் பயிற்சி தொடர்பாகப் போராளி ரெட்ணம்,…..
07– 12/10/1986 அடம்பன் நகருக்குள் முன்னேறிய இராணுவத்துடன் சண்டை…..
08– 30/03/1987 அன்று கிட்டு அவர்கள் கால் இழந்தமையால் மனநிலை பாதிக்கப்பட்ட அருணா அண்ணை,……
09–. 04/02/ 1987 பொன்னம்மான் வீரச்சாவு,…
10– 06/03 1987 யாழ் தொலைத்தொடர்பு நிலையம் மினி முகாம் தாக்குதல்….
11– 26/05/1987 ஒப்பரேசன், லிபரேசன் என்ற பேரில் சிங்களப் படையினர் வல்வெட்டித் துறை மீது பாரிய தாக்குதல்……
12– 05/06/1987வடமராட்சியில் அமைந்திருந்த முகாம் மீது தாக்குதல் நடத்த பயிற்சியை ஆரம்பித்த தலைவர், இதுதான் மில்லர் வரலாறு……
13– 29/07/1987 இந்திய, இலங்கை ஒப்பந்தம் நடந்தது என்ன……?
14– 04/08/1987 அன்றைய நாள் நடைபெற்ற இந்திய, இலங்கை ஒப்பந்தம் தொடர்பாகத் தமிழீழத் தேசியத்தலைவரால் முதல் சுதுமலைப் பிரகடனம்,…..
15– 14/09/1987 அன்று இரவு திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பம்….
16–. 05/10/1987குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வேங்கைகள் வீரச்சாவு…..
17–. 09/10/1987 விடுதலைப் புலிகள் மீது இந்திய இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது…….
18–. நேரடியாக் களத்தில் நின்ற தூயாமணி இது பற்றிக் குறிப்பிடுகையில்…..
19–. இவ்வாறு அந்தப் பக்கம் நடக்க தலைவருக்கு என்ன நடந்தது? என்பது பற்றி உடன் இருந்த போராளி ஜெயராஜ் குறிப்பிடுகையில்,…..
20– யாழில் நின்ற போராளிகளிற்கு என்ன நடந்தது? மீண்டும் தூயாமணி,…..
21–. தலைவர் மணலாறு சென்றதும் என்ன மாற்றங்களைக் கொண்டு வந்தார்……,
22–. இந்திய இராணுவத்தின் “ஒப்ரேசன் பவான்” நடவடிக்கை…….23–. பின்னர் அங்கே நடந்த சண்டை பற்றி போராளி காசன் குறிப்பிடுகையில்……
24– 02/12/1988 அன்று விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அதிபர் பிரேமதாசாவிற்கும் இடையில் ஏற்பட்ட புரிந்து உணர்வு ஒப்பந்தம்,…..
25– “ரின் பால்”ஒப்பரேசன் பற்றி…..
26–. கட்டுப்பாட்டை மீறியதற்காக இரு போராளிகளுக்குச் சாவொறுப்பு…..
27– 03/01/1989 ஆம் ஆண்டு வை.கோபால சாமியின் வன்னிப் பயணம்……
28–. “செக்மேற் 02” நடவடிக்கை தொடர்பாக போராளி கிறிஸ்தோபர் குறிப்பிடுகையில்…
29– இதுதான் கிட்டு அண்ணையின் கடைசி நடவடிக்கையாகவும், கடைசி திட்டமிடலாகவும் இருந்தது…..
30– 27/11/1989 ஆம் ஆண்டு முதலாவது மாவீரர் நாள் …….
31– இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் என்ன நடந்தது? என்பது பற்றி போராளி “பாலா” குறிப்பிடுகின்றார்……
32– பின்னர் அங்கே என்ன நடந்தது? எனப் போராளி “ஓஸ்க்கார்” குறிப்பிடுகையில்…..
33– இதே காலப் பகுதியில் யாழ்பாணத்தில் என்ன நடந்தது என்று போராளி “காமுறு” குறிப்பிடுகின்றார்…..
34– மகளிர் படையணியின் வீரமிக்க முதல் தளபதி மேஜர் சோதியா (வான்மதி) பற்றி……
09/01/1985 பண்டிதரின் வீரச்சாவிற்கு முன்னர் அனைத்து மாவட்டங்களிற்குமான கட்டளை அதிகாரியாக இருந்த கிட்டு விற்கு மேலும் ஒரு பதவி உயர்த்தப்பட்டது. அவர் யாழ் மாவட்டப் பொறுப்பாளராகத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.

கிட்டுவால் நடாத்தப்பட்ட சில தாக்குதல்களைப் பற்றிப் பார்ப்போம்.
தளபதி “கேணல் கிட்டு” அவர்கள் தாக்குதலிற்கு செல்வதற்கான காலம் நெருங்கிக் கொண்டேயிருந்தது.04/03/1983 அன்று போராளி அற்புதன் பொணம்மான் தலமையில் உமையாள்புரம் மீதான தாக்குதலிற்கு விடுதலைப் புலிகள் அணி ஒன்று செல்கின்றது……அதில் கேணல் கிட்டுவும் செல்கின்றார்……..தாக்குதலிற்கான திட்டம் தீர்மானிக்கப்படுகின்றது, அத்திட்டத்தின்படி வீதியில் நிலக்கண்ணி வெடிகளை தாட்டு விட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருகின்றார்கள் போராளிகள்
. கண்ணிவெடிகளை கையாளும் அனுபவம் இவர்களிற்கு போதியளவு இல்லாமல் இருந்தது. இராணுவ வாகனம் இலக்கை அண்மிக்கும் நேரத்தில் அதைக் கண்டு மிரண்டு ஒடிய ஆட்டுக் குட்டியின் கால்கள்பட்டு கண்ணி வெடி வெடிக்க அனைத்துப் போராளிகளும் நிலைகுலைந்து போகின்றார்கள்……..
இதை அவதானித்த இராணுவம் இரு கவச வாகனங்களில் இருந்து போராளிகளைச் சுட்டுக் கொண்டு வருகின்றார்கள்.
இவர்களிற்கு பின் வாங்குவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை; ஆனால் கிட்டு மட்டும் எதிரியின் பலத்தைக் கவனிக்காது, துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜீ3 துப்பாக்கியால் இராணுவக் கவச வாகனத்தை நோக்கிச் சுடுகின்றான்……..
அவனின் இலக்குத் தவறவில்லை, இராணுவச்சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகின்றது, இராணுவம் நிலை குலைந்த வேளையில் கிட்டுவின் தலைமையில் விடுதலைப் புலிகள் பாதுகாப்பாக பின்வாங்கிச் செல்கின்றார்கள், தொடர்ந்து 07/04/1983 தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக தலைவர் அவர்களால் நிலை உயர்த்தப்பட்டார்.
தொடர்ந்து அவர் பங்குபற்றிய தாக்குதல்கள், சிறிலங்கா அரசால் திணிக்கட்பட்ட உள்ளூர் ஆட்சித் தேர்தலை புறக்கணிக்கும் பொருட்டு கந்தர் மடத்தில் இராணுவம் மீதான தாக்குதல், திருநெல் வேலித்தாக்குதல் இந்தியாவிற்குப் பயிற்சிக்கு சென்ற போராளிகளுக்கான அணிக்கு இரண்டாவது பொறுப்பாக் கிட்டு நியமிக்கப் பட்டார்.
தொடர்ந்துபயிற்சியை முடித்து 02/03/1984 தமிழீழம் வந்த கிட்டு அதே மாதம் குருநகர் இராணுவ முகாம் மீதான தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் பங்கு பற்றினார். அதே நேரம் யாழ் மாவட்டத் தளபதியாகவிருந்த கப்டன். பண்டிதர் 09/01/1985 வீரச்சாவு அடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.
யாழ் மாவட்டத் தளபதி ஆனதும்
வடமாகாணத்திலே பெரிய காவல் நிலையமாக இருந்த முகாமைத் தாக்கி அங்கு இருந்த பெரும் தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றி விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தினார். கிட்டுவின் தொடர்ச்சியான தாக்குதலால், இராணுவம் நகர முடியாமல் கேம்பிற்குள்ளே முடங்கியது. முற்றுகையை உடைக்க பல முனைகளில் பல முறை முயன்ற சிறிலங்கா இராணுவத்திற்கு தகுந்த பதிலடிகொடுத்து, இம் முயற்சிகளை முறியடித்தவர் “தளபதி”
கேணல் கிட்டு மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்பட்டது. தமிழீழம் என்ற உயர் நிலையை அடைவதற்காக முதலாவது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை உருவாக்கினார் தளபதி கிட்டு. அடுத்து உற்பத்திக் குழுக்களை ஆரம்பித்து, அவர்கள் ஊடாக விவசாயம் மற்றும் வியாபாரம் என்பனவற்றைப் பெருக்கி மக்கள் மனங்களில் இடம் பிடித்த முதல் தளபதியாக கிட்டு கருதப்பட்டார்.
அவ்வேளை சிங்கள இராணுவத்திடம்மிருந்து மட்டுமல்ல, சமூக விரோதிகளிடமிருந்தும், தேசத்துரோகிகளிடமிருந்தும், தமிழீழ மண்ணையும், மக்களையும், பாதுகாத்தார் கிட்டு.
மற்றும் சட்டவிரோதச் செயல்கள்; சமூக ஒழுக்க மீறல்கள் சிறு பிணக்குகள்; என்பனவற்றைக் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர கிராமிய நீதிமன்றங்களை அமைத்தார்.
அதனூடாக மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார். கிட்டு எழுத்தாற்றல் மிக்கவர். அவர் பங்குபற்றிய சண்டைகளை நாவல்வடிவில் எழுதி மக்களிற்கு விடுதலைப் போராட்டத்தை தெளிவு படுத்தினார்.இது இப்படி இருக்க; அதே காலம் நடந்த
பயிற்சி முகாமைப் பற்றிப் பார்ப்போம்…!
1986 / 3 ஆம் மாதம் நடந்த விடுதலைப் புலிகளின் பத்தாவது பயிற்சி முகாம்… அதில் பயிற்சி எடுத்த போராளி குமார் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்

இதுதான் இந்தியாவில் நடந்த கடசிப் பயிற்சி முகாமாக இருந்தது.
அப்பொழுது தமிழீழத்தில் இருந்தும், அனைத்து மாவட்டங்களில் இருந்தும், போராளிகள் அவசர அவரமாக எடுக்கப்பட்டார்கள். அதனால் நாங்கள் பயிற்சி நடந்துகொண்டிருக்கும் போது தான் அங்கே வந்து அவர்களோடு இணைந்து கொண்டோம்.
எமத பயிற்சி முகாம் மணியண்ணையின் தோட்டமான கர்நாடக மாநில எல்லைப் பிரதேசமான மலைப் பிரதேசத்தை அண்டிய கும்பாரப்பிட்டி என்ற இடத்தில் அமைந்திருந்தது. எங்களின் பயிற்சி முகாம் மேலாளராக லெப்.கேணல் பொன்னம்மான் இருந்தார்.முகாம் பொறுப்பாளராக போராளி “றோய்” இருந்தார். எங்களிற்கான போராட்ட ரீதியான பாடங்களை, பொன்னம்மான், மனோ மாஸ்ற்றர், ஜெனகன் பிரதீப் மாஸ்ற்றர், இவர்கள் தந்தார்கள். எங்களிற்கான உடல் பயிற்சியை; றோய், சஸ்ரின், புரட்சி, இவர்கள் தந்தார்கள். இதில் முந்நூற்றுஐம்பத்தைந்து போராளிகள் பயிற்சி எடுத்தோம்.
இதில் வீரச்சாவு அடைந்தவர்களை அவர் குறிப்பிடும்போது, இந்தியாவில் இருந்து பயிற்சி முடித்து தமிழீழம் வரும் போது இலங்கை கடல் படையோடு ஏற்பட்ட மோதலில் வீரவேங்கை கில்மன், வீரவேங்கை ஜஸ்ரின், இவர்கள்வீரச்சாவு அடைந்தனர்.மற்றும் 2ஆம் லெப்.அகிலன் கோட்டையில் நடந்த சண்டையில் வீரச்சாவு அடைந்தார். இதில் பலர் உயிரோடு இருப்பதாகவும், அவர்களின் பெயர்களை அவர் எம்மிடம் சொன்னார். அவர்களின் அனுமதி இல்லாமல் இதில் பெயர்கள் குறிப்பிடவில்லை.இதில் குறிப்பிட்பட்ட ஜெனகன் மற்றும் பிரதிப் ஆசிரியர்கள் இருவரும் இப்புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடு இருந்துள்ளனர் ஏணையவர்கள் வீரச்சாவு அடைந்துள்ளனர்,
1985 முதல் பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரையான காலங்களில் விடுதலைப் புலிகளால் செய்யப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் பற்றிப் பார்ப்போம்!
30/01/1985 அன்று பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் முகாமை கவச வண்டிகள் சகிதம் சுற்றி வளைத்து நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள். ஐந்து மணித்தியாலம் நடந்த தாக்குதலில் இராணுவத்தின் முற்றுகையை முறியடித்ததோடு மட்டும் இன்றி ஒரு பவள் கவசவாகனம் அழிக்கப்பட்டது. இருபது இராணுவத்தின் உடல்களையும்; பெருமளவான ஆயுதங்களையும்; விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்.

13/02/1985 அன்று முல்லைத்தீவில் உள்ள கொக்குளாய் இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நூற்று ஆறு சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர். மற்றும் 25 பேர் காயம் அடைந்தனர், இதில்16 போராளிகள் வீரச்சாவு அடைந்தனர், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
13/03/1985 அன்று சிங்களப் பகுதியான வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மதவாச்சியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அப் பொலிஸ் நிலையம் அழிக்கப்பட்டதோடு ஒன்பது பொலிஸார் கொல்லப்பட்டனர்.
18/03/1985 அன்று நாகர்கோயிலில் கடலில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகு ஒன்றை இரண்டு கடல் விமானங்கள், இரண்டு ஹெலிக் கொப்டர்கள், இணைந்து தாக்குதல் நடத்தினர். அதில் விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் ஹெலிக்கொப்டர் ஒன்று சுட்டு வீழ்தப் பட்டது .
10/04/1985 அன்று ஒட்டிசுட்டானில் இராணுவம் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஏ. பி . சி கட்டிடத்தை விடுதலைப் புலிகள் குண்டு வைத்து தகர்தனர்.
10/04/1985 அன்று வட மாகாணத்தில் மிகப்பெரிய பொலிஸ் நிலையமான யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தை தாக்கினர். அப்பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான ஆயுதங்களையும் கைப்பற்றினர். இதில் பத்துப் பொலிஸார் கொல்லப்பட்டனர்.
11/04/1985 அன்று யாழ் பொலிஸ் நிலையத்தை அகற்ற படையினருக்கு உதவக் கொண்டு வந்த கிறேன் பாரஊர்தி விடுலைப் புலிகளால் பறித்துக் கொண்டு செல்லப்பட்டது.
21/04/1985 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டிசுட்டான் பாதையில் இராணுவத்தினரின் மினிபஸ்ஸை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் இருபது இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.
26/04/1985 அன்று வியாபாரி முலையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பன்னிரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒரு கவச வண்டியும் அழிக்கப்பட்டது . பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.
26/04/1985 அன்று மூதூர் கட்டைப் பறிச்சானில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஒரு இராணுவ ஜீப் வண்டி தகர்க்கப்பட்டது. இதில் லெப் .அமரியல் உட்பட ஏழு படையினர் கொல்லப்பட்டனர்.
28/04/1985 அன்று பருத்தித்துறையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
28/04/1985 அன்று யாழ் கரவெட்டியில் விடுதலைப்புலிகள் நடத்திய இரு கண்ணிவெடித் தாக்குதலில், பதினெட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒரு கவசவாகனம் அழிக்கப்பட்டது.
29/04/1985 அரியாலையில் விடுதலைப் புலிகள் நடாத்திய கண்ணி வெடித் தாக்குதலில் இரண்டு கவச வாகனங்கள் தகர்க்கப்பட்டதுடன்; அதில் பயணித்த பத்து இராணுவதினர் கொல்லப்பட்டனர்.
02/05/1985 அன்று மூதூரில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
04/05/1985 அன்று மன்னாரில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இரகசியப் பொலிஸார் கொல்லப்பட்டனர்.10/05/1985 அன்று மன்னாரில் அமைந்து இருந்த பொலிஸ் நிலையம் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் அங்கு இருந்த ஏழு கட்டிடங்களைத் தகர்த்ததோடு ஏராளமான ஆயுதங்களையும் கைப்பற்றினார்கள். இத்தாக்குதலின் போது இரண்டு பொலிஸார் உயிருடன் பிடிபட்டனர். சில காலங்கள் தடுப்பில் இருந்தவர்களை பின்நாளில் கிட்டு அன்னை விடுதலை செய்தார்.

12/05 /1985 அன்று உடுப்பிட்டி மண் நிலையம் ஒன்றினுள் இருந்த இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் கைக்குண்டு விசி நடத்திய தாக்குதலில் மேஐர் .சிறிலால் மெண்டிஸ் உட்ட ஐந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
13/05/1985 அன்று திருமலை குச்சவெளியில் விடுதலைப் புலிகள் நடாத்திய கண்ணி வெடித்தாக்குதலில், வானில் வந்த பல பொலிஸார் காயம் அடைந்தனர்.
13/05/1985 அன்று திருமலை சாம்பல்தீவு ஆறாம் கட்டைப் பகுதியில் விடுதலைப் புலிகள் வான் மீது நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் பல பொலிஸார் காயமுற்றனர்.
22/05/1985 அன்று திருமலைப்பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் பிராண்டிஸ் டிமேல் உயர் அதிகாரி உட்பட ஐந்து பொலிஸார் கொல்லப்பட்டனர்.
01/06/1985 அன்று விடுதலைப் புலிகள் திருமலை குச்சவெளி பொலிஸ் நிலையத்தை தாக்கி முற்றாக அழித்தனர். பத்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் முகாமை விட்டுத் தப்பி ஓடினர். அவ்முகாமில் இருந்த நூற்றுக் கணக்கான ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.
10/06/1985 அன்று குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த கடற் படை முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் உயர் அதிகாரி உட்ட முப்பது படையினர் கொல்லப்பட்டனர்.
11/06/1985 அன்று திருநெல்வேலியில் எழுபத்து இரண்டு அறைகளைக் கொண்ட இராணுவம் தங்கி இருந்த ஹோட்டல் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டது.
12/06/1985 அன்று திகிலவத்தையில் விடுதலைப் புலிகள் இராணுவம் மீது நடத்திய தாக்குதலில் ஒரு பொலிஸார் கொல்லப்பட்டார். ஏனையவர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களிடம் இருந்து ஐந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.
1985 /06ம் மாதம் வரை மட்டு, அம்பாறை பொறுப்பாளராக அருணா தலைவரால் நியமிக்கப்பட்டு இருந்தார். அக்காலத்தில் தாக்குதல் தளபதியாக குமரப்பா இருந்தார். அருணா பொறுப்பு மாறிச் சென்றதும் மட்டு, அம்பாறைப் பொறுப்பாளராக அங்கே குமரப்பா கடமையாற்றினார்.
இவரின் காலத்தில்தான் நிறையத் தாக்குதல்கள் மட்டு, அம்பாறையில் நடத்தப்பட்டது . குமரப்பா என்றால் சாதாரண போராளி தொடக்கம் அனைத்து பொதுமக்களிற்கும் அது தெரிந்த பெயராகவே இருக்கும்.
அனேகமான தாக்குதல்களை மட்டு, அம்பாறை மாவட்டங்களில் செய்து; எதிரிகள் படுவான் கரையான காட்டுப் பகுதிகளிற்குச் செல்வதற்கு பயந்த நிலையை உருவாக்கியவர் குமரப்பாதான். அம் மாவட்டத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில்தான் மட்டு மாவட்டத்தில் ஒரு பெண்ணைக் காதலித்தார். பின்னர் இதை தலைவருக்குத் தெரியப்படுத்த அவர் திருமணம் செய்வதற்கான அனுமதியை வழங்கினார். 1987 கடைசிப் பகுதியில் இந்திய உலங்கு வானூர்தியில் குமரப்பா பொறுப்பாளர்களை ஏற்றி இறக்கும் வேலையாக மட்டக்களப்பிற்குச் சென்று வந்த காலம் அது.அப்பொழுது தான் விரும்பிய பெண்ணையும்; மட்டக்களப்பில் இருந்து இந்திய உலங்கு வானூர்தியில் ஏற்றி யாழ்ப் பாணம் கொண்டு வந்தார்.
அடுத்து அவருடைய திருமணம் வல்வெட்டித்துறை அவரின் வீட்டில் நடைபெற்றது. தலைவர் உட்பட மூத்த போராளிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். ஆனால் திருமணம் ஆனாலும் அவர் அந்த வீட்டில் ஒரு கிழமை கூட இருக்கவில்லை. இயக்க வேலையாக தொடர்ந்து ஓடித்திரிந்து இறுதியில் அவரின் வீரச்சாவும் நடந்தது; என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
26/06/1985 அன்று சர்வதேச ரீதியில் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தவரும் அரசின் தீவிர ஆதரவாளரான யாழைச் சேர்ந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜனிற்கு விடுதலைப் புலிகள் சாவொறுப்பு வழங்கினார்கள்.
20/07/1985 அன்று விடுதலைப் புலிகள் யாழ் பொலிகண்டியில் இராணுவத்தை மறித்து தாக்கியதில் ஏழு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
10/08/1985 அன்று வவுனியாவில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸ் கொமாண்டோக்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பொலிஸ் கப்டன் உட்பட ஆறு படையினர் கொல்லப்பட்டனர்.
18/08/1985 அன்று வாகரையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத் தொடர் வாகன அணி மீது விடுதலைப் புலிகள் நடத்தியதாக்குதலில் இரு வண்டிகள் சேதம் அடைந்தன. மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் தப்பி ஓடினர். அவர்களிடம் இருந்து ஆயுதம் மற்றும் குண்டுகள் கைப்பற்றப்பட்டது.
23/08/1985 அன்று மட்டு வந்தாறுமுலையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

29/08/1985 அன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வினாயகபுரம் என்ற இடத்தில் இராணுவ டிரக் வாகனம் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய RPG தாக்குதலில் தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டனர். தளபதிஅருனா தலையில் அம்பாறை தம்பட்டை பகுதியில் வழமையாக ரோந்துவரும் ஒரு சிறிலாங்கா படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தீட்டம்பட்டது அதற்கு முதலாவது கட்டளையிடும் அதிகாரியாக தளபதி அருனா இரண்டாவது தலைவராக டேவிற் அவர்களும் சென்றார்கள்,
அச்சண்டையில் தளபதி சொர்ணம் RPG வைத்து இருந்தார், மொத்தம் 15 பேர் சென்றார்கள்அதில் ஒரு வவழும் ஒரு ஜீப்பும் முன்னால் வந்து கொண்டு இருந்தது RPG அடிக்குமாறு கட்டளை வழங்கிக்கொண்டுயிருந்தார் அருனா குறி தவறாமல்GRP உந்துகனை செலுத்தியால் அடித்தார் தளபதி சொர்ணம் அண்ணா ஆனால் அது வவழுக்கு பிடிக்கவில்லை பின்னால் வந்த ஜீப்பிற்குப்பிடித்து 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் மேலும் பலர்காயம் அடைந்தனர் சொர்ணம் அண்ணையின் வெற்றிகரத் தாக்குதலால் இராணுவம் நிலைகுலைந்து ஓடியது,
அதில்எமது தரப்பில் இண்டு போராளிகள் காயம் அடைந்தனர் தப்பட்டை இருந்து திருக் கொயில் வரை ஒரு நாள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் அப்பிரதேசம் இருந்தது இந்த வெற்றிகரத்தாக்குதலில் தளபதி சொர்ணம் அண்ணாவின் பங்கு பெரிதாகக் கருதப்பட்டது அன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வினாயகபுரம் என்ற இடத்தில் இராணுவ டிரக் வாகனம் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய கண்ணி வெடித் தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டனர்.

02/09/1985 அன்று மட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தை அடிப்பதற்கு விடுதலைப் புலிகள் திட்டம்யிட்டார்கள் அருனா மற்றும் குமரப்பா தலைலையில் அத்தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டது ஒன்று போராளி காந்தன் தலையில் ஈசன், கப்டன் பிரான்சிஸ், முத்தர் தவீம் மாத்தைத்தையா என 7 பேரும் அடுத்த அணியில் காக்கா அண்ணை தலைமையில் கடவுள், சொர்ணம், குமரப்பா கப்டன் ஜிங்கலி உட்பட 7 பேர் என மொத்த 15 பேர் அத்தாக்குதலிற்காகச் சென்றார்கள்,அதில் ஜிங்கலியோடு இரு போராளிகள் கும்புறு முலைப்பக்கம் இருந்து இராணுவம் வந்தால் அதைத் தடுப்பதற்காகக்காவலில் நின்றார்கள்,
முதலில் சலண்டர் அடையுமாறு ஏறாவூர் பொலிஸ்சாரிடம் கேட்டார்கள், அவர்கள் மறுத்தமையால் குமரப்பா , சொ6ர்ணம், தவீம் மூவரும் ஒரே நேரத்தில்RPG தாக்குதல் நடாத்தினார்கள் அதில் கட்டிடம் தரைமட்டமானது அதில் இருந்த ஒன்பது பொலிஸ்சார் கொல்லப்பட்டனர். அச்சண்டையில் பல பொலிஸார் காயம் அடைந்து ஓடித் தப்பினார்கள் அதில். ஏராளமான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது,அதில் எமது தரப்பில் மாத்தையா என்ற போராளி காயம் அடைந்தார்,இது வெற்றிகரத்தாக்குதலாகயிருந்தது இதில் தளபதி சொர்னம் மிகத்திறமையாகச் செயல்பட்டார் அதனால் சொர்ணத்தை உடனே தன்னிடம் அனுப்புமாறு தலைவர் சொன்னதற்கு அமைவாக அச்சண்டை முடிந்த கையோடுசொர்ணத்தையும் கூட்டிக்கொண்டு யாழ்பாணம் சென்றார் தளபதி அருனா அங்கேஇருந்து படகு மூலம் இந்திய சென்று தளபதி சொர்ணத்தை தலைவரிடம் ஒப்படைத்தார் அருணா

அங்கேசென்ற சொர்ணம் மீண்டும் தலைவரின் பாதுகாப்புக்கடமையைச் செய்து கொண்டிருந்தார்,அருணா திரும்பி தமிமீழம் வரும் போது அவருக்கு என்ன நடந்தது என பின்னர் விரிவாகப் பார்ப்போம்
04/09/1985 அன்று திருமலை கிண்ணியாவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவாகனங்களின் முன்னால் நடந்து வந்த இராணவம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இராணுவத்திற்கு வழி காட்டியாக வந்த பௌத்தபிக்கு உட்பட பதின் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.
12/09/1985 அன்று தமிழ் மக்களை வேட்டையாட வந்த சிங்கள இராணுவத்தினரின் நடமாட்டத்தை கட்டுப் படுத்துவதற்காக மட்டக்களப்பு வளையறவுப் பாலத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தகர்த்தனர். பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
13/09/1985 அன்று யாழ் கோட்டையில் இருந்து வெளியேற முற்பட்ட சிங்களப் படைகளை விடுதலைப் புலிகள் கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி முன்னேற்தைத் தடுத்து நிறுதினர்.
14/09/1985 அன்று விடுதலைப் புலிகளின் திருமலை முகாமை தாக்கச் சென்றஉலங்கு வானூர்தியை விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்தினார்கள்.
15/09/1985 அன்று திருமலை கன்னியாப் பகுதியில் ரோந்து வந்த இராணுவத் தொடர்வண்டிகள் மீது நடாத்திய கன்னி வெடித் தாக்குதலில் பதினைந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
16/09/1985 அன்று பருத்தித்துறை இராணுவமுகாமில் இருந்து ரோந்து செல்லப் புறப்பட்ட இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவ் நடவடிக்கையால் ரோந்து நடவடிக்கையைக் கைவிட்டு முகாமிற்குள் ஓடித் தப்பினர்.
20/09/1985 அன்று மட்டுக் கல்லடியில் ரோந்துவந்த இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இரு இராணுவத்தினர் அவ்விடத்திலே கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
07/11/1985 அன்று மட்டு வாகரையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஏழு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
14/11/1985 அன்று மன்னாரில் 14 வாகனத்தொடர் அணி மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு பலர் காயம் அடைந்தனர்.ஜீப் வண்டி ஒன்றும் முற்றாக அழிக்கப்பட்டது.
14/11/1985 அன்று முல்லை மாவட்ட நீராவிப்பிட்டியில் மூன்று வண்டிகளில் ரோந்து வந்த இராணுவத்தினர்மீது விடுதலைப் புலிகள் “ரொக்கேட்” தாக்குதல் நடத்தினர் அதில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.ஒரு இராணுவ வண்டி முற்றாக அழிக்கப்பட்டது.
25/11/1985 அன்று மட்டு கரடியன் ஆற்றுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், முன்னேற முடியாமல் இராணுவம் பின்வாங்கிச் சென்றது.
27/11/1985 அன்று திருமலை சம்பூரில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.
01/12/1985 அன்று அம்பாறை தம்பிலுவில் என்ற இடத்தில் இராணுவம் மீது விடுதலைப் புலிகள் “றொக்கேட்” தாக்குதல் நடத்தி ஒரு கவச வாகனம் அழிக்கப்பட்டது, பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
09/12/1985 அன்று நாவற்குழி இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்ட தோடு பலர் காயம் அடைந்தனர்.
19/12/1985 அன்று தொண்டமன் ஆற்றில் இருந்து ரோந்து சென்ற இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஆறு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்,
20/12/1985 அன்று யாழில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றை ஐந்து ஹெலிகொப்டர்கள் சகிதம் சுற்றி வளைத்த இராணுவத்தினருடன் விடுதலைப் புலிகள் கடுமையாகச் சண்டையிட்டபோது, ரெலோ, ஈபி.ஆர்.எல் உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளிற்கு ஆதரவாகச் சண்டையிட்டார்கள்.
கப்டன் பண்டிதர் 09/01/1985 அன்று முற்றுகையில் சிக்கி விரச்சாவு அடைந்த போது சின்ன லோவோடு எதிரியின் முற்றுகையை உடைத்து வெளியேறினான் மேஜர் அல்பேட் அதுவே அவனின் திறமைக்கு ஒரு முன் உதாரனமாக இருந்தது,

அவனின் திறமையை அறிந்த தேசியத் தலைவர் அவனைப் பாராட்டினார்., அது மட்டும் அல்ல பண்டிதர் செய்த வேலையான ஆயுதக் களஞ்சியப் பொறுப்பாராக அவன் நியமிக்கப்பட்டான்
தொடர்ந்து தனது பணியைப் பொறுப்பெடுத்த அல்பேட் பண்டிதர் மறைத்து வைத்து இருந்த ஆயுதம் பணம் அனைத்தையும் மீட்டு எடுத்து புதிய இடங்களில் அவைகளைப் பாதுகாத்து வந்தான். 21/12/1985 அன்று பண்டிர் வீரச்சாவு அடைந்து சரியாகப் பதினொரு மாதத்தால் அடுத்த ஒரு துன்பியல் சம்பவம் எமது இயக்கத்திற்கு ஏற்பட்டது அதாவது அதாவது 21/ 12/1985 அன்று காலை தளபதி கிட்டு அண்ணைக்கு தகவல் வருகின்றது அதாவது பண்டிதர் இருக்கும் சுதுமலை முகாமை சிங்களப் படையனரின் கொமாண்டோ படையனர் உலங்குவானூர்தியில் மூலம் தரையிறங்கி அல்பேட்டின் முகாமை அழிக்கப் போகின்றார்கள் என்பதே அந்தத்தகவல்,
இதை அறிந்ததும் தளபதி கிட்டு அண்ணா வல்வெட்டித்துறையில் இருந்து மோட்டார் சைக்கலில் வேகமாக சுதுமலை வந்து கொண்டிருக்கின்றார், ஆனால் கிட்டு அண்ணையையும் நோக்கி உலங்குவானுர்திகள் வேட்டுக்களைத் தீர்த்தவண்ணம் கலைக்கின்றது அவ் சூட்டுக்களில் இருந்து மயிரிளையில் தப்பி கிட்டு அண்ணை சுதுமலைக்கு வந்து சேர்ந்தார்,

ஆனால் மூன்று உலங்குவானூர்தியில் சுமார் 50 கொமாண்டோக்களை தரை இறக்கி விட்டு வானுர்திகள் பறந்து கொண்டுயிந்தன, ஆனால் பண்டிதரோடு நின்ற போராளிகள் தரையிறங்கிய கொமாண்டோக்களை ஒரு அடிகூட நகரவிடவில்லை கடுமையான சண்டை யில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் தளபதி கிட்டு அண்ணையும் கடுமையான கட்டளையை வழங்கிக் கொண்டியிருந்தார், இராணுவக் கொமாண்டோக்கள் நிலைகுலைந்து பின்வாங்கத் தொடங்கினார்கள் அவசர அவசரமாக உலங்குவார்திகள் தரையிறங்கி காயம் அடைந்தவர்களையும் உயிரோடு இருந்த கொமாண்டோக்கயும் ஏற்றிக்கொண்டு பின்வாங்கிச் சென்றனர் ஆனால் அவர்களை பின்வாங்க அல்பேட் விடவில்லை கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான்
கோமாண்டோக்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள் பின்புறத்தில் அவர்களை உலங்குவானூர்தியில் ஏறவிடாமல் செய்வதற்காக யமனைப் போல் நின்றுகொண்டிருந்தான் அல்பேட் அது அவர்களிற்குப் பெரிய பிரச்சனையா இருந்தது அதனால் சியாமாசட்டி என எம்மால் அழைக்கப்படும் பொம்பர் விமானத்தால் அல்பேட் குழுவை நோக்கி தாக்குதல் நடத்தியது பல வர்ணம் பூசப்பட்ட பெல் ஏ,பி, 412′ ரக ஹெலிகொப்டர்கள் மூன்றும் தம்முடைய எம் 60 ரக மெசின் கண்ணாலும் வட்டமிட்டுத் தொடர்ந்து தாக்குதலை நடாத்தின. அல்பேட் குழுவினரை நோக்கி வந்த மோட்டார் குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன.
திடீரென்று அல்பேட் சுருண்டு விழுந்தான். இடது கண்ணுக்கு கிழே பெரிய ஓட்டை அதிலிருந்து குருதி ஊற்றெடுத்துப் பாயும் நீர்த்தாரைகள் போல பாய்ந்தது. அல்பேட்டைத் தூக்கிக் கொண்டு சிலர் பின் விரைகின்றனர். அல்பேட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவன் தன் உயிரை இந்த மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்துவிட்டான்.
இந்த நடவடிக்கையில் இராணுவம் பாரிய தோல்வியோடு பின்வாங்கியது எமது தரப்பில் மேஜர் அல்பேட் உட்பட ஆறு போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்கல்வியங்காடு பகுதியில்
அவர்களின் விபரம்
01) வீரவேங்கை நேரு
இயற்பெயர்: செல்லையா தில்லைச்சந்திரன்
கச்சேரி யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 01.10.1964
வீரச்சாவு: 09.01.1985
02) வீரவேங்கை கராட்டி ரவி
இயற் பெயர் : சோமசுந்தரம் பிரதாபன்
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:03.01.1964
வீரச்சாவு09.01.1985
3) வீரவேங்கை சாமி
ஆறுமுகம் தவரத்தினம்
ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 06.12.1962
வீரச்சாவு: 09.01.1985
04) வீரவேங்கை தவம்
இயற் பெயர் : நடேசு தவராசா
அச்சுவேலி தெற்கு, ஆவரங்கால்
வீரப்பிறப்பு: 24.03.1962 வீரச்சாவு: 09.01.1985
05) வீரவேங்கை சிவா
இயற் பெயர் : சிவகுரு சிவேந்திரன்
அச்சுவேலி தெற்கு, ஆவரங்கால்
வீரப்பிறப்பு:01.01.1961. வீரச்சாவு:09.01.1985.
இவர்கள் அனைவரும் வீரமுடன் போராடி தாய் மண்ணிற்காகத் தங்களின் உயிரை அற்பணித்தனர்
அல்பேட் பற்றி கிட்டு அண்ணை எழுதிய விடயம்
நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம், என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து, எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிப்படுத்த முடியும்.
6 அடி 2 அங்குலமான உன் உயரமான (நீளமான) உடல் அசையாது கிடந்த நிலைகண்டு மக்கள் பதறியதை, உன் கிராமமே கலங்கியதைக் கண்டு உன்மரணம் தமிழ் மக்களை எந்த அளவுக்குப் பாதித்திருகின்றது என்பதை அறிந்து நாம் துடித்தோம்.
எம் முகாம்களில் ஒன்று இராணுவத்தினால் தாக்கப்படுகிறது என்பதை அறிந்து எம்மை விடுவிக்க விரைந்த நீ எம் அன்புப் பிணைப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டாய். கிராமச் சனங்களோடு பழகும் போது அந்தச் சனங்களோடேயே ஒன்றிப்போகும் உன் எளிமையான தோற்றம், எம்மை எல்லாம் பிரமிக்கச் செய்தது.
பண்டிதர் ஆயுதக் கிடங்குகளுக்குப் பொறுப்பாக இருந்து வேலை செய்த காலத்தில் பண்டிதருக்கு அடுத்தபடியாக இருந்து வேலை செய்து இயக்கத்தின் நன் மதிப்பைப் பெற்றவன், ‘கந்தையா’ என்று செல்லமாக பண்டிதரால் அழைக்கப்பட்டவன். அச்சுவேலியில் நடைபெற்ற எம் தளம் மீதான இராணுவ முற்றுகையில் தன்னுடைய துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தீரும்வரை போராடி வெற்றிகரமாக வெளியேறியவன். பண்டிதரைப் பலிகொண்ட அந்தப் பெரிய முற்றுகையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியதே அவனுடைய திறமைக்குச் சான்றாகும்.
பண்டிதரின் மறைவுக்குப் பின் ஆயுதக் கிடங்குகளின் பொறுப்பாளராகப் பணியாற்றி பண்டிதர் இழப்புக்கு ஈடு செய்தவன். 1982ம் ஆண்டு தொடக்கம் தன்னை எம் இன விடுதலைக்காக அர்பணித்துப் பணியாற்றியவன். அல்பேட்டை காணும் யாரும் போரிடுவதில் அனுபவம் மிக்கவன் என்பதை தவறின்றி ஊகிக்க முடியும். முதல் பார்வைக்கு அவன் வயது இருபதுக்கு மேல் இருபத்துநான்குக்கு உள்ளதாகவே இருக்கும் என்று தோன்றும். ஆனால் வெய்யிலிலும் காற்றிலும் அடிபட்டிருந்த அவன் முகத்தையும் கண்களின் அருகிலும் நெற்றியிலும், வாயின் பக்கங்களிலும் நுண்ணிய இழைகளாக விழுந்திருந்த சுருக்கங்களையும் சிந்தனையின் ஆழ்ந்தகளைத்த கருவிழிகளையும் உற்றுகவனித்த பின் அவன் வயதில் இன்னும் பத்து ஆண்டுகளைக் கூட்டலாம் போலிருக்கும்.
அல்பேட் கோபித்ததை, கோபப்பட்டதை நாம் காணவில்லை என்றே கூறலாம். ஏனோ தெரியவில்லை அவனுக்குக் கோபம் வருவதில்லை. நாம் சிலவேளைகளில் வேண்டுமென்றே சீண்டுவோம். அப்போதுகூட அவன் எருமை மாட்டில் மழைபெய்வது போல இருப்பான். அன்பினால் வழிநடத்தி, அரவணைப்பால் பாதுகாத்து, அவன் வளர்த்த அவனுடைய வீரர்கள், அல்பேட்டைப் போலவே உருவாகி இருப்பதைக் கண்டு வியப்புடன் அல்பேட்டுக்குத் தலை வணங்குகின்றோம்.
குழந்தைகள் என்றால் அல்பேட்டுக்கு அலாதி பிரியம். குழந்தைகளோடு பழகும்போது அவனும் ஒரு குழந்தையாகி மழலை மொழி பேசுவதைக் கண்டு நாம் சிரித்த பொழுதுகள் ஏராளம்.
எமது முகாம்களில் அல்பேட்டைச் சுற்றி ஒரு மழலைப்பட்டாளமே இருக்கும். அந்த சின்னஞ் சிறுசுகள், அல்பேட்டைக் காணாமல் தவித்த தவிப்புக்கள், அவர்களைப் பொறுத்த வரையில், அவன் கோவிலுக்குப் போய்விட்டான். கோவிலிலிருந்து வருவான். வரும்போது அவர்கள் அடிக்கடி கேட்ட, சொல்லிவிட்ட சாமான்கள் வேண்டி வருவான். அல்பேட் அவர்களை ‘குட்டிச் சாத்தான்’ என்று அழைப்பது வழக்கம் அந்தக் குட்டிச் சாத்தான்கள் அல்பேட் கோவிலுக்குப் போய்விட்டதை, போய்விட்ட செய்தியை மிகவும் சந்தோஷத்துடனும் மிகுந்த குதூகலத்துடனும் தமக்குள்ள பரிமாறிக்கொண்டார்கள்.
அவர்கள் அந்த மழலைகள், அல்பேட் கோவிலுக்குப் பொய் திரும்பி வருவான் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்….
யாழ் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது இராணுவத் தந்திரத்துக்கமைய கோட்டையில் இருந்து எதிரிகளை வெளியில் வராமல் தடுக்கும் பொறுப்பும் கோட்டை மீதான தொடர்ந்த தாக்குதலை நடத்தும் பொறுப்பும் அல்பேட்டிடம் கொடுக்கப்பட்டிருந்தது. தனது பணியைச் செவ்வனே செய்துமுடித்து எமது வெற்றிக்கு வழிவகுத்தவன்.
ஒருநாள் விடியற்காலை அல்பேட் தன் முகாமில் உள்ள தோழர்களை தினசரி காலைப்பயிற்சிக்குத் தயார் படுத்திக் கொண்டிருக்கையில், தொலைத்தொடர்பு சாதனம் (வோக்கி ரோக்கி) அலறியது. அவன் வோக்கியை இயக்கி அழைத்த இடத்துடன் தொடர்பை ஏற்படுத்தியபோது, சுதுமலையில் உள்ள எமது முகாம் ஒன்று இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டும் செய்தி கிடைத்தது. அல்பேட் தன் தோழர்களைப் பார்த்து உரக்க அழைத்து விரைந்து, ஆயுதங்களுடன் வானில் (வாகனம்) ஏறி விரைந்தான்.
வான் இணுவில் பகுதியால் சுதுமலையை அண்மித்தபோது மூன்று ‘பெல் ஏ,பி, 412′ ரக ஹெலிகாப்டர்கள் அப்பகுதியை சுற்றிச் சுற்றி மெசின் கண்ணினால் குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தது.
மேலே வானத்திலே வட்டமிட்டுக்கொண்டிருந்த அலுமினியப் பறவைகளில் ஒன்று உயரத்தில் இருந்து பாய்ந்து மலையில் வழுகி வருவது போல மிகமிக வேகமாக வாகனத்தை நோக்கிப் பாய்ந்து வந்து ’50 கலிபர் மெசின் கண்’ணினால் சுட்டுத் தள்ளியது. குண்டு வரிசைகள் வாகனத்திற்கு மிக அருகாக நிலத்திலே கோடிட்டுச் சென்றது. குறிதவறிவிட்டது. அல்பேட் தன் தோழர்களைப் பார்த்து ‘டே தும்பியில் இருந்து சுடுறாங்கள் கவனமாக இருங்கோ’
என்று கூறி முடிக்கவும், (பெல் ஏ,பி, 412 ஹெலிகாப்டர்களை நாங்கள் ‘தும்பிகள்’ என்று அழைப்பது வழக்கம்) உருமறைப்பு வர்ணம் பூசப்பட்ட இன்னொரு அலுமினியத் தும்பி பக்கவாட்டாக தாழப்பறந்து வந்தது. “சுடப்போறான், வானை எங்காவது ஒருபுறம் திருப்பி ஒதுக்கு” என்று கத்தினான் அல்பேட். வான் ஒதுங்க அல்பேட் தோழர்களுடன் கீழே பாய்ந்த போது விமான எஞ்சின் கடகடப்புச் சத்தத்துடன் மெசின் கண்ணின் இடைவிடாத குண்டுச்சத்தத்துடன் தும்பி தாழப்பறந்து சென்றது. வானுக்கு முன்பாக குறுக்குப்பாட்டாக குண்டு வரிசை மண்ணிலே கோடிட்டது. குறி தவறிவிட்டார்கள். மறுபடியும் இன்னும் அருகாக அல்பேட்டும், வானும், சேதமின்றித் தப்பித்துக்கொண்டது.
அல்பேட் தன் “வோக்கி ரோக்கியுடன்’ முகாமுக்குத் தொடர்பு கொண்டபோது, முகாமுக்கு பின்பாக ஹெலிகொப்டர்கள் இராணுவத்தினரை இறக்கிய தோட்டப்பகுதியான இடத்திற்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டது. குழு அவ்விடத்தை அணுகியபோது இராணுவக் கமாண்டோக்கள் தாம் இறங்கிய இடத்தில் சிலரை நிலைப்படுத்திவிட்டு, மற்றும் சிலர் முகாமை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அல்பேட் கிளர்ச்சியுற்றான். ஆனால் அது சாவு குறித்த அச்சமில்ல. மிக, மிக வீரமுள்ள பதற்றமற்ற மனிதர்களுக்க இயல்பான ஒன்று. ஆபத்து பற்றிய முன்னுணர்வு தானும் இல்லை இது. அவன் கவலைப்பட்டது கமாண்டோக்களை எப்படியாவது தடுக்க வேண்டும்.
தோட்டங்களில் சில சில இடங்களில் மரவள்ளிச் செடிகள் மிக அழகாக செழிப்பாக செறிவாக வளர்ந்திருந்தது. உயர்ந்து செழிப்பாக செறிவாக வளர்ந்திருந்த மரவள்ளிப் பற்றைகள் ஒளியைப் புகவிடாமல் இருட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தன.
அல்பேட் தனது குழுவினர் சகிதம் அவர்களைத் தாக்கத் தொடங்கினான். இராணுவத்தினர் 2 அங்குல சிறிய மோட்டார் சகிதம் எதிர்த்தாக்குதல் நடத்தினர். முன்னேறிய இராணுவக் கொமாண்டோக்கள் மீதும் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னேறியவர்கள் மீதும் தாக்குதல், நிலைகொண்டு காவல் செய்துகொண்டிருப்பவர்கள் மீதும் தாக்குதல், வானத்தில் சுற்றிக்கொண்டிருந்து இவர்களுக்கு காவல் செய்யும் அலுமினியப் பறவைக்கும் தாக்குதல். பலமணி நேரம் இடைவிடாத தாக்குதல்.தாக்குதலை அவன் செய்தான் அன்றுதான் அவன் எமது மண்ணை முத்தம் இட்டான்
நினைவுப்பகிர்வு:- கிட்டு.
26/12/1985 அன்று மன்னார் பரப்புக் கடந்தான், ஆட்காட்டிவெளி ஆகிய இடங்களில் ஹெலிகொப்டர்கள் சகிதம் ரோந்து வந்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பதினாறு இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள் . மூன்று றஇராணுவ வாகனங்களும் முற்றாக அழிக்கப்பட்டது.
30-04-1986 மாற்று இயக்கமான ரெலோவோடு சண்டையிட்டு வெற்றியீட்டினார் தளபதி கிட்டு .

1983 விடுதலை புலிகளால் நடத்தப்பட்ட திருநெல்வேலித் தாக்குதலின்போது விடுதலை புலிகள் வெற்றியீட்டினாலும் அதை அடுத்த நாட்களில் பல பொதுமக்கள் கொலை செய்யப்பட்டும் பல வர்த்தக நிலையங்கள் சிங்களக்காடையர்களால் எரிக்கப்பட்டது, அதை அவதானித்த ரொலோ குழுவினர் எஞ்ஜியிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது மட்டும் இன்றி பிரபல வர்த்தகரான மனோகரா தியட்டர் உருமையாழரிடமு மேலும் பலவர்த்தகர்களிடம் கம்பக் கேட்டுக் கொண்டுயிருந்தனர், சிங்களக்காடையர்கள் ஒரு பக்கம் இவர்களின் வண்முறை ஒருபக்கம் ரெலோமற்றும் இப்பி ஆர் எல்லப் குழுவினரின் வண் முறை ஒரு பக்கம் என மக்களிற்கு பாரிய பிரச்சனையாகயிருந்ததுஅக்,குழுவினர், அது மட்டும் அல்ல ஒரு அழகான பெண்ணைக் கண்டால் அவரை கடத்திக்கொண்டுபோய் பெற்ரோர்களிடம் கப்பம் கேட்டது கொடுக்காமல் விட்டால் தவறான வேலை செய்த பின் கொலை செய்வது இப்படியான இவர்களின் தவறான செயல்பாடுகளை மக்கள் தளபதிகிட்டு அனாவிடமே தெரியப்படுத்தி வந்தார்கள், அதனால்அக் குழுக்களை அழிப்பதற்கு யாழ்ப்பாண மக்களின் பூரண ஆதரவுவிடுதலைப் புலிகளிற்கு இருந்தது
இனிப் பிரச்சன உருவானதற்கான காரணத்தைப்பற்றிப் பார்ப்போம்
விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கத் திட்டமிட்டது ரெலோ. இதை முன்கூட்டியே அறிந்த கிட்டண்ணை முளையில் கிள்ளி எறிந்து விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாத்தார் கிட்டண்ணா29-04-1986 ஆம் ஆண்டு இக்காலப் பகுதியில் மாற்று இயக்கமான ரெலோ அமைப்பிற்கும், எமக்கும் இடையே சிறு சிறு முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.ஆனால் பெரிய பிரச்சனைகள் எதுவும் நடக்கவில்லை. இருந்தும்! இரண்டு அமைப்பினரும் தங்கள் தங்களின் போராளிகளைக் கட்டுப்படுத்தி வைத்து இருந்தார்கள்.அரியாலைப் பகுதியில் எமது உறுப்பினர்களும்; அவர்களின் உறுப்பினர்களும்; ரோந்து நடவடிக்கையில் திரியும்போது கைகலப்பு ஏற்பட்டு விட்டது. ஆனால் அதில் கடுமையாகக் காயப்பட்டது எமது உறுப்பினர்கள்தான்.அப்பொழுது அரியாலைப் பகுதியில் எமக்கு “நடா வீடு “என ஒரு முகாம் இருந்தது. அந்த வீட்டில் நடாதான் பொறுப்பாக இருந்தார்.
அப்பொழுது தாக்குதலிற்கு உள்ளான எமது உறுப்பினர்கள் அப் பிரச்சனையை நடா அவர்களுக்குத் தெரிவிக்கின்றார்கள் .உடனே நடா அவர்களின் இடத்திற்குச் செல்கின்றார். அங்கே வீதியில் நின்ற “ரெலோ” உறுப்பினர்களோடு கதைத்துக் கொண்டு இருந்த வேளை இவர்களைத் தாக்கியவர்கள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதும் “இவர்கள்தான் எங்களைத் தாக்கினார்கள்” என நடாவிடம் போராளிகள் சொன்னார்கள்.
நடா அவர்களை மறித்து இருவருக்கும் அடிபோட்டார். அடியை வேண்டிக்கொண்டு இருவரும் கள்ளியம் காட்டிற்கு ஓடிச் சென்று விட்டார்கள். அவர்களின் கோபம் விடுதலைப் புலிகளிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதாக இருந்தது.
இனிமேல் கள்ளியங் காட்டுப்பக்கம் யாராவது வந்தால் பிடிப்பது என ரெலோ திட்டமிட்டது. அதே நேரம் அந்த ஏரியாப் பகுதிக்குப் பொறுப்பாக லெப். கேணல் சரா அண்ணை இருந்தார்.
எனவே சரா அண்ணையைப் பிடிப்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் சரா அவர்கள் பற்றி அவர்களிற்கு எந்தந் தகவலும் தெரியாது . முன்னர் அருணாஅவர்கள் இந்தியா சென்றார் என குறிப்பிட்டேன்
மட்டக்களப்பு சண்டை முடிந்ததும் அங்கு இருந்து சொர்ணம் அண்ணாவை கூட்டிக்கொண்டு போய் இந்தியாவில் நின்ற தேசியத் தலைவரிடம் ஒப் டைத்துவிட்டு இந்தியாவில் இருந்து தமிழீழம் வந்து கொண்டிருந்தார், மூத்த உறுப்பினர் அருணா அவர்கள் இந்தியாவில் இருந்து தமிழீழம் வரும்போது சிறிலங்கா கடல் படையினர் தாக்கி அருணா வீரச்சாவு அடைந்து விட்டார்.
என தகவல் வந்தது. ஆனால் அருணா அன்று வீரச்சாவு அடையவில்லை. அவரின் படகு சிங்களப் படையால் மூழ்கடிக்கப்பட்டு அருணா அவர்கள் பலமான முறையில் காயப்பட்டு சிங்களப் கடல் படையால் கைது செய்யப்பட்டு கழுத்துறை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஆனால் அப்பொழுது விடுதலைப் புலிகளிற்கு இந்த உண்மை தெரியாமல் இருந்தது. ஒரு சில நாட்கள் கடந்த நிலையில் இந்த உண்மை முதலில் பிடிபட்டு சிறையில் இருந்த ரவி அண்ணா மூலம் அருணா உயிரோடு இருக்கின்றார் என்ற தகவல் காலம் கடந்து தளபதி கிட்டு அண்ணாவிற்கு வந்தது,
இதை அறிந்த கிட்டு அண்ணா உடனே பசீர்க்காக்கா மற்றும் சந்துரு இருவரும் போய் அருணா அவர்களின் படம் அடித்து நினைவு அஞ்சலி செய்வதற்காகக் கேணல் கிட்டு அண்ணையால் அனுப்பப் படுகின்றார்கள்; இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கள்ளிங் காட்டை நோக்கிப் போகின்றார்கள். அப்பொழுது “ரெலோ” உறுப்பினரான நித்தி என்பவர் இவர்கள் இருபரையும் மறித்து உங்களை விசாரிக்க வேண்டும்! “கேம்புக்குள்ளே “வாங்கோ..! என்று இவர்களிடம் சொல்கின்றார்.
அதற்கு காக்கா அண்ணை “உங்கட பிரச்சனையைதிலீபனிடம்போய்ச் சொல்லுங்கோ! நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது

“
என காக்கா அண்ணை பதில் அளிக்கின்றார். ஏனெனில் அக்காலப்குதியில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராகத் திலீபன் அவர்கள் இருந்தார்.
அதற்கு இறுக்கமான குரலில் “வாங்கடா! வாங்கடா ! “என நித்தி கத்திக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அங்கு இருந்து தப்புவது கடினமான விடயம் என்பதை காக்கா அண்ணை விளங்கிக் கொண்டார்.
அக்காலப் பகுதியில் காக்கா அண்ணை அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் அமைப்பில் மூன்றாவது திருமணமாகச் செய்து வைக்கப்பட்ட காலமது. திருமணம் செய்து ஆறேநாள் தான் ஆகியிருந்தது. அவரின் திருமணத்திற்கு சிறிசபாரெத்தினத்திற்கு அழைப்பிதல் கொடுத்தும் அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.”
எனது பெயர் பசீர்காக்கா என்று சிறியிடம் சொல்லுங்கோ!” என காக்கா அண்ணை தெரியப்படுத்த அவர்கள் அலட்சியமாகக் கேட்டுவிட்டு செல்கின்றார்கள்.ஆனால் இத்தகவலை எப்படியாவது கிட்டு அண்ணைக்கு தெரிவிக்க வேண்டும்என காக்கா அண்ணை நினைத்தார்,. அதனால் நித்தியிடம் நான் நிக்கின்றேன் இவர் அவசரமாகப் போகவேண்டும் என்று சொல்வி சந்துருவை காக்கா அண்ணை “நேராகப் போவதுபோல் வேகமாகப்போய் அரியாலை றோட்டால் திரும்பிப்போய் கிட்டுவிடம் தகவலை சொல் என அவர் சந்துருவைஅனுப்பி விடுகின்றார்.சந்துரு சொன்னது போல் கிட்டு அண்ணைக்கு தகவல் போய்விட்டது. காக்கா அண்ணை இவர்களிடம் கைதியாக இருக்கின்றார். அப்பொழுது காக்கா அண்ணை எனது பெயர் பசிர்காக்கா என்று சிறிசபாரத்தினத்திடம் சொல்லுமாறு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதற்கு இடையில் கிட்டண்ணைக்கு தகவல் கிடைத்ததும்; அவர் கடுமையான கோபம் அடைந்தார்.

தொடர்ந்து ரெலோ அமைப்பின் பொறுப்பாளர்களை தொடர்பு எடுத்த போதிலும் தொடர்பு கிடைக்கவில்லை. இதற்கு இடையில் போராளி முரளியையும் பிடித்து விட்டார்கள். அதனால் கள்ளியங்காட்டில் உள்ள ரெலோவின் “கட்டபராய் முகாமிற்கு” கிட்டு அண்ணையின் கட்டளைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது” இருவரையும் விடுதலை செய்யாமல் விட்டால் நேரடிமோதலை எதிர்கொள்ள வேண்டிவரும்” என கிட்டு அண்ணை அலுவலகத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது.
தகவலை அவர்கள்அறிந்ததும் “யாராவது வந்தால் சுடுங்கோ” என காவல் ஆளிடம் கட்டளை வழங்கி இருந்தான் ரெலோ தலைவன்.சிறிசபாரத்தினம்

29-04-1986அன்று காலை நடா தலைமையிலான விடுதலைப் புலிகளின் குழு அவர்களின் தலைவர்களோடு கதைப்பதற்குச் செல்கின்றது இவர்கள் அவர்களின் கள்ளியங்காட்டில் அமைந்து இருந்த “கட்டபராய்” முகாமிற்கு போராளி நடா தலைமையிலான குழு சென்று கொண்டிருக்கின்றார்கள் அங்கே சென்று காவல் அரனை அண்மித்ததும் இவர்களைக் கண்டதும் காவல் கடமையில் நின்றவன் இவர்களை நோக்கிச் சுட தொடங்கி விட்டான். எமது அமைப்பைச் சார்ந்த ஒரு போராளி அவ்விடத்திலேயே வீரச்சாவு அடைந்து விட்டார்.
நிலமை பதட்டமாக இருந்ததால் நடா தலமையிலான குழு அவர்களின் முகாமை நோக்கித்தாக்குதல் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
சண்டையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் காக்கா அண்ணையையும், முரளியையும் கூட்டிக்கொண்டு வேறு இடம் மாறிப் போய்க் கொண்டிருந்தார்கள். ரெலோ உறுப்பினர்கள் அவர்கள் ஓட ஓட கலைத்துக், கலைத்து தாக்குதல் நடத்தியது நடா தலைமையிலான எமது அணி. இருந்தும் இவர்களின் கண்களிற்குத் தெரியாமல் அவர்கள் மறைந்துவிட்டார்கள். அதை அடுத்து வீரச்சாவு அடைந்த போராளியையும் எடுத்துக் கொண்டு முகாம் திரும்பினார்கள் எம்மவர்கள்.

இதை அறிந்த தளபதி கிட்டு அண்ணா இந்திகாவில் இருந்த எமது தேசியத் தலைவருக்குப் பிரச்சனையைத் தெரிவிக்கின்றார் அதை அறிந்த தலைவர் மூத்த போராளி கப்டன் லிங்கத்தை அனுப்பி சிறிசவபாரத்தினத்தோடு நேரடியாக பேசி பிரச்சனையைத் தீர்க்குமாறு கிட்டு அண்ணாவிற்குத் தகவல் அனுப்புகின்றார்,உடனே கிட்டு அண்ணா29-04-1986 அன்று பிற்பகல்இரண்டு மணிக்கு கப்டன் லிங்கத்தை அனுப்பி சிறியோடு பேசிவிட்டு வா என அனுப்புகின்றார்அனுப்பி விட்டு பதிலை எதிர்பார்த்த வண்ணம் இருக்கிண்றார்

அப்போழுது மூத்த போராளி லங்கத்தோடு பத்திற்கு மேற்பட்ட போராளிகள் சென்றார்கள், ஆனால் இவர்கள் 200 மீற்றர் பின்னால் நின்று கொண்டு லிங்கத்தை மட்டும் அனுப்பினார்கள், காரணம் எல்லோரும் சென்றால் பயத்தில் காலையில் நடந்தது போல் சுடுவார்கள் என்பற்காகவே லிங்கம் அவர்களை மட்டும் நிராயுதபாணியாகவே அனுப்பினார்கள் ,அங்கே சென்றதும் ஒரு மணித்தியலாம் பேசிக் கொண்டிருந்தார்கள், சரியாக மூன்று மணிக்கு வெடி சத்தம் கேட்டது அவ்வீட்டில் இருந்து மூவர் ஓடுவதை அவதானித்தோம், அங்கே நாங்கள் வேகமாகச் சென்றாம் மூத்த போராளி லிங்கம் அண்ணாவின் கண்ணில் சுட்டு விட்டு ஓடி விட்டார்கள் அவரின் பின் பக்க மண்டை பிளந்து மூளைகள் அனைத்தும் வெளியே வந்து விட்டது, அவர் அவ்விடத்திலே இறந்து கிடந்தார்,நாங்கள் அவரின் உடலை தூக்கிக்கொண்டு கிட்டு அண்ணாவிடம் ஒப்படைத்தோம் கிட்டு அண்ணா அவரின் பொடியைப்பார்த்ததும் அழத்தொடங்கி விட்டார், எங்களோடு வந்த என்னமொரு மூத்த போராளிக்கு கிட்டு அண்ணா தடியை எடுத்துக்கொண்டு இரண்டு அடி கொடுத்தார், ஏன் அவனுகளை சுடவில்லை என்பதே அவரின் கேழ்வியாகயிந்தது,இது இப்படி பதட்டமான நிலையாக இங்கே இருக்க இது வரை விங்கத்தோடு இரு போராரிகளை ரெலோ சுட்ட விடயத்தை விரிவாக எழுதி அனுப்பினார் கிட்டு அண்ணா,தலைவருக்கு தகவலை அறிந்த தலைவர் ஒன்று ரெலோ இருக்க வேணும் அல்லது நாங்கள் இருக்க வேணும் அதற்கு உரியவாறு ஒழுங்குபடுத்தவும்என தலைவரின் பதில் வந்தது
இது இப்படி இருக்க முன்னர் ரெலொவால் பிடிக்கப்பட்ட காக்கா அண்ணையும் முரளியும் இவர்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு ஒரு விட்டிற்குள் அடைத்து வைத்திருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் அக்கதவை உடைத்துக் கொண்டுவேகமாக ஓடிபோய் நடந்த பிரச்சனையை கிட்டு அண்ணையிடம் சொல்லி விட்டார்கள்.
அதே காலம் பருத்தித்துறை சிங்களப் படை முகாம் அடிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பெரும் தொகையான போராளிகள் வந்து பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தகாலம்அது அதனால் எதற்கும் பயப்பிட வேண்டிய தேவை விடுதலைப் புலிகளிற்கு இருக்கவில்லை. தொடர்ந்து சிங்களப் படைமுகாம் தாக்குதலை நிறுத்தி யாழில் உள்ள அனைத்துரெலோ முகாம்களையும்;
அடுத்து. ஈபி .ஆர். எல்.எப் முகாம்களையும்; முற்றுகை இட்டார்கள் விடுதலைப் புலிகள்.
சரியாக 30-04-1986 காலை தளபதி கிட்டு அண்ணா தலைமையில்சண்டை தொடங்கி விட்டது..! வோக்கி அலர தொடங்கியது அடி ஓட விடாத துரத்தி துரத்திச்சுடு என கட்டளை வழங்கிக்கொண்டிருந்தார் கிட்டு அண்ணாஆனால் அவர்களும் விடவில்லை கடுமையான முறையல் எதிர்த்து நின்று சண்டையிட்டார்கள்,பிற்பகல் மூன்று மணிக்கு அவர்களின் சூடு குறைய ஆரம்பித்தது காரணம் அவர்களிடம் போதிய அளவு ரவையில்லை அனைத்தையும் முடித்து விட்டார்கள், ரெலோ உறுப்பினர்கள் பின்வாங்கி பொகிலைத் தொட்ட செடிகளிற்குள் மறைவதை அவதானிக்க முடிந்தது
திடிரேன புகையிலைத் தோட்டத்திற்குள் இறங்கிச்சுட்டுக்கொண்டு சென்றோம் அதில் எங்களிற்கும் காப்பு இல்லை அவர்களிற்கும் காப்பு இல்லை அதனால் அவர்களின் வெடிப்பட்டு எமது மூன்று போராளிகள் அவ்விடத்திலே வீரச்சாவு அடைந்தார்கள் தொடர்ந்து நாங்கள் அடித்துக்கொண்டு சென்றோம் சிறிசபாரத்தினம் உட்பட பத்துப்பேர் அவ்விடத்திலே கொல்லப்பட்டார்கள்,
சண்டை தொடர்ந்த வண்ணமே இருந்தது அதனால் அவர்களில் கனிசமானவர்கள் சரண்டர் அடைந்தார்கள் தொடர்ந்து இடங்களைக் துப்பரவு செய்தபோது அவர்களில் 22 பேர் கொல்லப்பட்டனர் எமது தரப்பில் முன்னர் அவர்களால் கொலை செய்யப்பட்ட இரு போராளிகள் உட்பட சண்டையில் பத்துப் போராளிகளும் மொத்தம் பன்னிரெண்டு போராளிகள் விரச்சாவு அடைந்தனர்
சண்டையின் போது சரண்டர் அடைந்த நெத்தி உட்ட 20 பேர் அவ்விடத்திலே விடுலை செய்யப்பட்டனர் ஏணையவர்கள் கைது செய்யப்பட்டு பொது மன்னிப்பு என்ற போர்வையில் சில குறிப்பிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.எதிர்த்து நின்று சண்டையிட்டவர்கள் அச் சண்டையின் போது கைது செய்யப்பட்டார்கள். இவர்களை யாழ் நல்லூர் பகுதியில் உள்ள கந்தன் கருணன் என்ற முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.இவர்களிற்கு என்ன நடந்தது என பிறகு பார்ப்போம், கல்வியங்காடு பகுதியில் ரெலோ கும்பலுடனான மோதலில் வீரச்சாவுஅடைந்த போராளிகளின் விபரம்
01) வீரவேங்கை ஜெயந்தன்
பொன்னையா அமிர்தலிங்கம்
சொந்த இடம் :- வற்றாப்பளை முல்லைத்தீவு
வீரப்பிறப்பு :- 22.11.1962 வீரச்சாவு :- 30.04.1986
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
02) வீரவேங்கை திலகன்
நாகராசா கிருஸ்ணானந்தன்
சொந்த இடம் :- குமுழமுனை, மணலாறு
வீரப்பிறப்பு :- 08.04.1968 வீரச்சாவு :- 30.04.1986
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
03 )வீரவேங்கை லோகன்
மு. லோகேஸ்வரன்
குமுழமுனை, மணலாறு
வீரப்பிறப்பு : -1986 வீரச்சாவு :- 30.04.1986
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
04) வீரவேங்கை நிமல்
தியாகராசா செல்வராசா
சொந்த இடம் : சிலாவத்தை முல்லைத்தீவு
வீரப்பிறப்பு:- 19.01.1963 வீரச்சாவு:- 30.04.1986:
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
05) வீரவேங்கை நாகேந்திரன்
நாகராசா சின்னத்தம்பி
சொந்த இடம்:வற்றாப்பளை முல்லைத்தீவு
வீரப்பிறப்பு :- 02.07.1966 வீரச்சாவு :- 30.04.1986
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
06) வீரவேங்கை வில்வன்
பொன்னுத்துரை சிவபாலசுப்பிரமணியராசா
முல்லைத்தீவு
வீரப்பிறப்பு :- 11.09.1954 வீரச்சாவு :- 30.04.1986
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
07) வீரவேங்கை சிவகுமார்:
இரத்தினசிங்கம் கேதீஸ்வரன்
சொந்த இடம் :- முள்ளியவளைமுல்லைத்தீவு
வீரப்பிறப்பு:- 23.02.1963 வீரச்சாவு :- 30.04.1986:
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
08) வீரவேங்கை இலங்கேஸ்
தம்பிராசா அன்ரன் இராசரத்தினம்
சொந்த இடம்:வற்றாப்பளை முல்லைத்தீவு
வீரப்பிறப்பு:- 28.05.1964 வீரச்சாவு :- 30.04.1986
ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு
09 )வீரவேங்கைஅலிஸ்ரன்
மதுரநாயகம் அலிஸ்ரன்
உடுவில் யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு :- 20.11.1964 வீரச்சாவு :- 30.04.1986
கல்வியங்காடு பகுதியில் ரெலோ கும்பலுடனான மோதலில்
10) வீரவேங்கை ரமேஸ்
யெராட் யோகராசா
சொந்த இடம் :- சில்லாலை தெற்கு, பண்டத்தரிப்பு
வீரப்பிறப்பு:- 05.05.1965வீரச்சாவு : – 30.04.1986
வீரச்சாவு நிகழ்வு விபரம்:
கல்வியங்காடு பகுதியில் ரெலோ கும்பலுடனான மோதலில் வீரச்சாவு.
இதே ஆண்டு கடைசிப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிய ரெலோ பொறுப்பாளராக சண்முகராஜா /sp என்பவர் தமிழீழ இசைக்குழுப் பொறுப்பாளர் இருந்தார். E. P R .L.F பொறுப்பாளராக தேவா இருந்தார். புளோட் பொறுப்பாளராக மாமா இருந்தார். இவ் மூன்று இயக்கங்களும் விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக அழிக்கப்பட்டது. SP போன்ற ஒரு சிலருக்கு கருணா பொது மன்னிப்பு வழங்கி எமது இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்
இது இப்படி இருக்க..!
அடுத்து மட்க்களப்பில் நடந்த சிறு சிறு தாக்குதல்களையும் அடம்பன் சண்டை பற்றியும் விரிவாகப் பார்ப்போம்
தொடரும்
அன்புடன் ஈழமதி

பாகம் 03 தமிழிழீழக்கதை (Tamil Eelam of story)
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு
பாகம் மூன்றின் இரண்டாவது தொடர்

இதே காலப் பகுதியில் மட்டக்களப்பில் நடந்த தனது ஆரம்பப்பயிற்சி பற்றியும், அங்கே நடந்த பதில் தாக்குதல் பற்றியும், போராளி இரட்ணம் குறிப்பிடுகையில்….! 1986- 5ம் மாதம் அளவில் இருநூற்று நாப்பது இளைஞர்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளிடம் பயிற்சிக்காகச் சென்றோம். அதில் நானும் ஒருவராகச் சென்றேன். மாவடி ஓடை மேற்பகுதி கெவர் மலைக் காட்டுப் பகுதியில் அப்பயிற்சி முகாம் அமைந்து இருந்தது.
அது மட்டு 7 ஆவது பயிற்சி முகாம் என எங்களிடம் சொல்லப்பட்டது. மெயின் பொறுப்பாக போராளி காந்தன் இருந்தார். பயிற்சி முகாம் பொறுப்பாக மேஜர் குலதீபன் இருந்தார். எமக்கான உடல் பயிற்சியை குலதீபன் செந்தில் இருவரும் தந்தார்கள். எங்களிற்கான போராட்டப் பாடங்களை காந்தன், குலதீபன் மற்றும் சர்வோதயன் மூவரும் மாறி, மாறித் தந்தார்கள். எங்களிற்கான சூட்டுப் பயிற்சியை மேஜர். குலதீபன் நேரடியாகக் கண்காணித்தார்.அதில் பயிற்சி எடுத்தவர்கள் அமிர் தவறுதலான வெடி விபத்தின் போது வீரச்சாவு அடைந்தார். அதில் பயிற்சி எடுத்த டக்ளஸ், லெப் நிவாஸ். இவர்கள் விரச்சாவு அடைந்தனர். மற்றும் மணலாற்றுக் காட்டிற்குள் நாப்பது அடிக் கிணறு கட்டிக்கொண்டு இருந்தவேளை அகற்ற முடியாத ஒரு கற்பாறை வந்தது. அதை அகற்றுவதற்காக வெடிமருந்து வைக்கப்பட்டது. அந்த வெடிமருந்து அவரைத் தாக்கி கடுமையான மூச்சுத் திணறலில் இருந்து அடுத்த நாள் வீரச்சாவு அடைந்தார். அதே பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த நிக்கிளஸ் அவார். இவரின் வித்துடல் உதைய பிடத்தில் விதைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாம் நடப்பதற்கு இரவு பகலாகத் தலையில் சாமான் சுமந்து இப்பயிற்சி நடப்பதற்கு கடுமையாக உழைத்தவர்களை அவர் குறிப்பிடும்போது கண் கலங்கி விட்டார். அவர்களின் பெயர் வேந்தன், ரமேஸ், உமேஸ், வசந்தன், இவர்களே! அப்பயிற்சி முகாமின் நிர்வாக வேலைகளைச் செய்துள்ளனர்.
அடுத்து அவர் பங்குபற்றிய சண்டை பற்றிக் குறிப்பிடுகையில்.
1986/ 6 மாதம்அகத்தி அண்ணையின் தலைமையில் முப்பது போராளிகளும், குலதீபனின் தலைமையில் பதினைந்து போராளிகளும், மொத்தம் 45 பேர் கொண்ட அணி தாக்குதலிக்காகச் சென்றது. அங்கே சென்று அம்பாறையில் கரும்புத் தோட்டத்தில் இருந்த இராணுவம் மற்றும் ஊர்காவல் படையினர் என இருவரும் நிலை கொண்டு இருந்த முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அது இரவு 1.30 மணியளவில் நடத்தப்பட்டது. அதில் 11 படை யினர் கொல்லப்பட்டனர். அதில் றிப்பீட்டர 3, 5 சொற்கண் என்பன எடுக்கப்பட்டது. அதில் எம்மவர்களிற்கு எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டார் .
1986 /10 மாதம் மேஜர் ௹பன் தலைமையில் பதினைந்து பேர் கொண்ட அணி சென்று மயிலவட்டுவான் சிவத்தப் பாலத்தில் ரோந்து சென்ற படையினருக்கு 7.30 காலை நடாத்திய தாக்குதலில் 3 இராணுத்தினர் கொல்லப் பட்டனர் . 3 T56 ஆயுதம் எடுக்கப்பட்டது. அதில் எமது தரப்பில் 3 போராளிகள் காயம் அடைத்தனர். விஜி, உமேஸ், அடுத்து. இன்னொரு போராளியும் வீரச்சாவு அடைந்தார்; என அதில் பங்குபற்றிய இரட்ணம் குறிப்பிட்டார். வடகிழக்கில் பல இடங்களில் இப்படியான தாக்குதல்கள் நடந்தன. இதே காலத்தில் தான் பெண்களிற்கான இரண்டாவது பயிற்சி முகாம் சாவகச் சேரிப்பகுதியில் நடந்தது. அதை போராளி தீபா தலைமை தாங்கி நடத்தினார்.

இந்தப் பயிற்சி முகாமில்தான் பொட்டு அம்மானின் சகோதரி இயக்கப் பெயர் கப்டன் அருந்ததி சொந்தப் பெயர் சிவரஞ்சினி சன்முகநாதன் நாயன்மார்க்கட் யாழ்ப்பாணம் என்ற இவரும் பயிற்சி எடுத்தார் பொட்டுஅம்மான் போன்று உயிரமான இவர் அகன்ற விளியும் பார்ப்பவரை கவரக்கூடிய உடலமைப்பைக் கொண்டவர், அதை விட சிறந்த பலசாலியும் ஆவர், அப்பயிற்சி முகாமில் திறமையான முறையில் பயிற்சி எடுத்து வெளியேறிய அருந்ததி இந்திய இராணுவத்தின் பல முற்றுகையில் இருந்து தனது திறமையான செயல்பாட்டால் வெளியேறி தன்னைப் பாதுகாத்துக்கொண்டவர், என்பதும் குறிப்பிடத்தக்கது அத்தோடு யாழில் நடைபெற்ற இந்திய இராணுவத்திற்கு எதிரான பல தாக்குதல்களிலும் பங்குபற்றியுள்ளார், பின்னர் இவருக்கு என்ன நடந்தது என விரிவாகப்பார்ப்போம்,
இதேகாலப்பகுதியில் ஆண் போராளிகளிற்கான “கலிபோனியா1/ 2” என பெயர் வைத்து கிட்டு அண்னையால் பல பயிற்சி முகாம்கள் வடக்கில் நடைபெற்றது. கலிபோனியா 01 தொடர்பாக அதின் நிர்வாக வேலைகளில் ஈடுபட்ட போராளி ரஞ்சித் குறிப்பிடுகையில் இப்பயிற்சி முகாம் தொண்டமணாற்றில் 82 போராளிகளேடு ஆரம்பம் ஆனது தளபதி கிட்டு அண்ணையின் ஒழுங்குபடுத்தலில் மேஜர் பசிலன் அவர்கள் பொறுப்பாக நின்றார், அவர்களின் உடல் பயிற்சிகளை போராளி(டம்டம் ) வழங்கினார் அவர்களிற்கான போராட்டக்கல்வியை தளபதி செல்வராசா மற்றும் கிட்டு அவர்களும் வழங்கினார்கள் ,
இதில் பயிற்சி எடுத்தவர்கள் கட்டச்சுவாகி, மதன், ரொபின், குட்டி உட்பட 82 போராளிகள் பயிற்சி எடுத்தார்கள் இது ஒரு இடத்தில் இல்லாமல் கிளாலி மற்றும் கிழமைக்கு கிழமை இடம் மாறி மாறி இப்பயிற்சி முகாம் நடைபெற்றது, இதில் பயிற்சி எடுத்த கனிசமான போராளிகள் இந்திய இராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டையில் வீரச்சாவு அடைந்துள்ளனர், என அவர் குறிப்பிட்டார், இருந்தும் பலர் வீரச்சாவு அடைந்தமையால் அத்தகவலைப் பெற முடியவில்லை. மட்டக்களப்புப் பகுதியில்1தொடக்கம் 6 ஆவதுபயிற்சி முகாம் வரை நடைபெற்றது. அடுத்து வவுனியா சேமமடுவிலும் பல பயிற்சி முகாம்கள் நடைபெற்றது.அடுத்து மன்னார் மற்றும் திருமலையிலும் சில பயிற்சி முகாம்கள் நடைபெற்றது. இது இப்படி இருக்க, கிட்டண்ணையின் காலத்தில் தான் லெப்.கேணல் விக்டர் தலைமையிலான குழு அடம்பனில் சண்டையிட்டது.
இதைப்பின்னர் பார்க்கலாம் என குறிப்பிட்டிருந்தேன் இனி விரிவாகப் பார்ப்போம்
12.10.1986 அடம்பன் நகருக்குள் முன்னேறிய இராணுவதுடன் தாக்குதல்.
விக்டரின் அஞ்சாமையையும், சீறிப்பாயும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நிதானமாக நகரும் அவனின் வேகத்தையும், அந்த நேரம் இருந்த போராளிகளுக்கு அடையாளம் காட்டியது திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தியில் 1983யூலை 23ல் சிங்கள இராணுவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும். எக்ஸ்புளோடருக்கு தொடர்பு கொடுக்கும் வேலையை செல்லிக்கிளி அம்மான், அப்பையா அண்ணை ஆகியோருடன் இணைந்து செய்து முடித்தவன் விக்டர்.விக்டர் அமைப்பில் இணைந்த பிறகு மன்னார் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் அநேகமாக அனைத்திலும் விக்டரின் நேரடி பங்களிப்பும் விக்டரின் எம்16 கிறனைற் செலுத்தியின் வெடிப்பும் இருந்தே இருக்கும்.
மன்னார் பொலிஸ்நிலையம் மீதான தாக்குதலில் விக்டருடன் குமரப்பா போன்றோர் இணைந்திருந்தாலும் கூட அந்த தாக்குதலுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு என அனைத்தையும் அற்புதமாக் கையாண்டவன் விக்டர்.விடுவிக்கப்பட்ட மன்னார் நிலப்பகுதியில் விக்டர் பயிற்சி முகாம்களையும் உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளைத் தாய் மண்ணிலேயே உருவாக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவன். அப்படியான ஒருபொழுதில் 12.10.1986 அன்று அதிகாலையில் அடம்பன் நகருக்குள் ராணுவம் நுழைந்துவிட்டதாக் கிடைத்த தகவலை அடுத்து கருக்காய்க் குளத்தினூடாகவும், ஆண்டான்குளப் பகுதியாலும், நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளத்தினூடாகவும் அடம்பனுக்குள் விக்டரின் தலைமையில் ஆண் போராளிகளுடன் முதல் முதலாக பெண் போராளிகளையும் கூட்டிக் கொண்டு விக்டர் வேகமாக களமுனைக்குப் செல்கின்றான்,
நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளம் கடந்து அடம்பனுக்குள் நுழைந்த சாஜகானின் அணியில் பெண்களிற்கான தலைமையாக ஜெனனி, வனிஐா உட்பட சுமார் 15 பெண் போராளிகள் அவரோடு சென்றார்கள்.

அடுத்த அணி சுமன் தலைமையில் அதில் பெண்களிற்கான தலைமையாக தீபா, மதி, ஜெயா, இவர்களின் தலைமையில் 15 பெண் போராளிகள் சென்றார்கள். அதில் விக்டரின் வழிகாட்டலில்தான் முதலில் பெண்புலிகள் எதிரிக்கு எதிரான சண்டையில் நின்றனர்.அவர்களின் முதலாவது சண்டையாக தமிழீழ வரலாற்றில் அது பதிவானது.சண்டை தொடங்கிவிட்டது விக்ரர் அவர்களின் கட்டளையால் வோக்கி அலறியது கெலியை இறக்கவிடாதே இறங்கிய கெலியை எழும்ப விடாதே சுட்டு விழுத்து என பலமான கட்டளையை விக்ரர் வழங்கிக் கொண்டிருந்தார், பெண் போராளிகள் மிக உச்சாயமாகச் சண்டையிட்டுக் கொண்டு சென்றார்கள், ஒன்பது இராணுவ வீரர்கள் விடுதலைப் புலி வீரர்களின் தாக்குதலில்அவ்விடத்திலே கொல்லப்பட்டார்கள், இரண்டு இராணுவச் சிப்பாய்கள் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டனர்
இது இப்படி பேரளிச்சியாக நடந்து கொண்டிருக்க செத்தவர்களையும் விட்டுக்கு இராணுவம் ஓட ஆரம்பித்துவிட்டது கள நிலவரம் வெற்றியீட்டிக் கொண்டு சென்றவேளையில் எங்கயோ இருந்து வந்த உலங்குவானூர்தியின் துப்பாக்கிச் சூடு விக்ரர் அவர்களின் நெஞ்சுப்பகுதியை துளை இட்டுச் சென்றதால்அந்த வீரனின் குரல் ஓய்ந்தது

அடுத்துகள முனையில் நின்ற விக்ரர் அவர்களிற்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகள் விக்ரர் அவர்களின் வித்துடல் மற்றும் களமுனையில் கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவச் சிப்பாய்கள் தொடர்ந்து ஒன்பது இராணுவத்தின் உடல்கள் சண்டையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் செல்கின்றார்கள் போராளிகள், அங்கே சென்றதும் அதைத் தளபதி கிட்டு அவர்களிடம் ஒப்படைக்கின்றார்கள்கள்
கிட்டு அவர்கள் நல்லூர் பின் விதியில் பெரிய கொட்டில் ஒன்று அடித்து அதில் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் ஒன்பது இராணுவத்தினரின் உடலங்களும் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கின்றார். புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்தினர் இருவரும் புலிகள் தங்களை கொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் அழுது குழறிக் கொண்டே இருக்கிறார்கள் இது இந்தப் பக்கம் நடக்க லெப்ரின் கேணல் விக்ரர் அவர்களின் வித்துடல் சேஜ்சில் மக்கள் பார்வைக்க வைக்கப்பட்டுள்ளது லட்சக்கணக்காண மக்கள் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் இளைஞர்கள் சேச்சிக்கு மேல் கூரையில் ஏறி ஓட்டைக் களட்டி அவரின் வித்துடலை பார்வையிடுகின்றார்கள், இது இப்படி மக்கள் எழுச்சியாக நடந்து கொண்டிருக்க சிங்களப் பெற்றோர்கள் என்ன மன நிலையில் இருப்பார்கள் என்பதை தளபதி கிட்டு அறியாதவர் அல்ல அதனால் எப்படியாவது இவர்களின் உடலை அவர்களின் பெற்ரோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிட்டு அண்ணை பல முயற்சிகளை மேற்கொள்கின்றார்,12 ஒக்டோ1986
அடம்பனில் எடுத்த இராணுவ வீரர்களின் பொடிக்கு என்ன நடந்தது அச்சண்டையில் சம்மந்தப்பட்ட போராளி குறிப்பிடுகையில்,
முதல் நடவடிக்கையாக யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் தளபதியான கப்டன் கொத்தலாவலவுக்கும், மும்மொழிகளிலும் பரிச்சயமான புலிகளின் இராணுவப் பேச்சாளர் ரஹீமிற்கும் இடையில் தொலைபேசி தொடர்பாடல்கள் இடைக்கிடையே இடம் பெற்றுக் கொண்டிருந்தன.
யாழ் வைமன் வீதியில் இருந்த டொக்டர் ஒருவரின் வீடு அப்போது புலிகளின் பாசறையாக இருந்தது. அந்த வீட்டில் இருந்த தொலைபேசியே இந்த சம்பாஷணைகளிற்குப் பயன்பட்டது. விடாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்த இரு சிங்கள இராணுவத்தினரின் ஆக்கினை தாங்க முடியாமல், அவர்களின் அழுகையை நிறுத்த, புலிகளின் ரஹீம் கப்டன் கொத்தலாவலவிற்கு நல்லூரடியில் இருந்த மூத்த அரசியல்வாதியொருவரின் சகோதரியின் வீட்டில் இருந்து தொலைபேசியில் அழைப்பெடுக்கிறார். கப்டன் கொத்தலாவல சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரஹீமிடம், கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் சடலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேச்சுவாக்கில் கேட்கின்றார்
.”உங்களுக்கு வேணும் எண்டா கொண்டு வந்து தாறன்” என்று ரஹீமும் சும்மா பகிடியாகவே சொல்ல, கப்டன் கொத்தலாவல சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய மேலதிகாரியை கேட்டு விட்டு வருகிறேன் என்கிறார். கப்டன் கொத்தலாவலவின் மேலதிகாரி கேணல் ஆனந்த வீரசேகர.விடம் கேட்ட பின்னர் அதைக் கோட்டைக்குள் கொண்டு வந்து தருமாறு கேட்கின்றார், அவரின் வேண்டுகோலை கிட்டு அண்ணையும் வர வேற்கின்றார் சரியாக பிற்பகல்ஆறுமணியளவில் சடலங்களை கோட்டை இராணுவ முகாம் வாசலில் கொண்டு வந்து தந்தால் தாங்கள் அவற்றை பொறுப்பேற்பதாக கப்டன் கொத்தலாவல ரஹீமுக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவிக்கிறார்.
கோட்டைக்கு சென்று சடலங்களை ஒப்படைப்பது தேவையில்லாத வேலை என்றும், இதில் நிறைய ஆபத்துக்கள் இருப்பதாக புலிகள் முதலில் கருதுகிறார்கள். புலிகளை கிட்ட அழைத்துக் கொலை செய்து பழி தீர்க்க இராணுவம் தீட்டியிருக்கும் சதித் திட்டமாகவே இதனை புலிகள் முதலில் நோக்குகிறார்கள். அப்படியானால் தான் தனி ஒருவனாகவே சென்று அந்த ஒன்பது சடலங்களையும் இராணுவத்திடம் ஒப்படைக்க முன்வருவதாக, ரஹீம் கிட்டுவி்ற்குத் தெரிவிக்கிறார்.அந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரச்சார முகமாக செயற்பட்ட ரஹீமை சிறைபிடிக்கும் இராணுவத்தின் சதித்திட்டமாக இந்த சடலங்கள் ஒப்படைப்பு அமைந்துவிடும் என்று புலிகளின் இளநிலைத் தலைவர்கள் தளபதி கிட்டுவை எச்சரிக்கிறார்கள்
.தளபதி கிட்டு ரஹீமிடம் மீண்டும் பேசுகிறார், இந்த முயற்சியில் இருக்கும் ஆபத்து கிட்டுவிற்கு நன்றாக புரிந்திருந்தது. ரஹீமோ மனிதாபிமான நோக்கத்துடன் எப்படியாவது சடலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டுவும் அரை மனதுடன் ரஹீமின் திட்டத்திற்கு சம்மதிக்கிறார்.ரஹீம் மீண்டும் கப்டன் கொத்தலாவலவை தொடர்பு கொண்டு சடலங்களை கையளிக்கத் தானே வருவதாக தெரிவித்து விட, இருவரும் சடலங்களை ஒப்படைப்பதற்கான ஒழுங்கு முறைகளை உறுதி செய்து கொள்கிறார்கள்.
ஆனால் அவர்களும் மறுப்பு தெரிவிக்கவில்லை அப்பொழுது…..!

ஒன்பது இராணுவத்தின் சடலங்களும் சவப்பெட்டிகளில் போடப்பட்டு, ஒரு சிறிய ட்ரக்கில் ஏற்றப்படுகிறது. இராணுவத்தின் சடலங்களை சுமந்த ட்ரக் பிரதான வீதி வழியாக கொண்டு வரப்பட்டு, யாழ் மத்திய கல்லூரி அருகாமையில் இருந்த புலிகளின் முன்னனி காவலரணிற்கு அருகாமையில் நிறுத்தப்படுகிறது. நேரம் பின்னேரம் ஆறு மணி இருக்கும்…பண்ணைக் கடலில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்க, யாழ் நகரை இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. யாழ் நகரில் அரங்கேறப் போகும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை காண வரலாற்றின் கண்கள் மட்டும் அந்த இருட்டும் வேளையிலும் விழித்திருந்தன.இராணுவத்தின் சடலங்கள் ஒப்படைப்பை ஆரம்பிக்கத் தாங்கள் தயாராகி விட்டதை கோட்டை இராணுவத்தினருக்கு அறிவிக்க, முன்னர் இணங்கியபடி, மத்திய கல்லூரி மைதானத்தில் இருந்து புலிகள் திட்டமிட்டாப்போல் ஒன்பது இராணுவத்தின் உடல்களையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ரஹீம் தயார் ஆனதும் பரா வெளிச்சம் ஒன்றை வானில் பாய்ச்சுகிறார்கள்.புலிகள் கோட்டைக்குள் இருந்து இராணுவமும், பதிலுக்கு ஒரு பரா வெளிச்சத்தை ஏவ விட்டு சடலங்களை ஏற்கத் தாங்களும் தயார் என்பதை புலிகளிற்கு அறிவிக்கிறார்கள்.
சடலங்களை சுமந்த ட்ரக்கை மத்திய கல்லூரியடியில் விட்டு விட்டு, தன்னிடம் இருந்த சயனைட் வில்லைக்கு மேலதிகமாக பக்கத்தில் நின்ற போராளியொருவரின் சயனைட் வில்லையையும் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு, சடலங்களை ஒப்படைப்பதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க, ரஹீம் தனியனாக கோட்டை வாசலை நோக்கி நடக்கத் தொடங்குகிறார்.இரண்டு சயனைட் வில்லைகள் கழுத்தைச் சுற்றியிருக்க, இடிந்தழிந்த யாழ் மாநகர சபைக் கட்டிடத்தையும், ஷெல்லடியிலும் சரியாமல் நின்ற தந்தை செல்வாவின் தூபியையும் தாண்டி, ரஹீம் கோட்டை வாசலை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருக்க, கோட்டை இராணுவ முகாமருகில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது,
ஆனால் புலிகளின் தாக்குதல் அணிகளோ அமைதி காக்கின்றன.புலிகள் சடல ஓப்படைப்பை தாக்குதல் திட்டமாக பயன்படுத்த போகிறார்களா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்துடனே இராணுவம் அந்த வெடிப்பை செய்திருக்கலாம் என்று ரஹீம் ஊகிக்கிறார்.கோட்டை முகாம் வாசலின் இராணுவ காவலரணை நெருங்கி விட்ட ரஹீம், தான் தனியவே வந்திருப்பதாக சத்தமிட்டு கத்துகிறார். இராணுவ முகாம் பக்கமிருந்து பதிலுக்கு கேணல் வீரசேகரவின் குரல் ஒலிக்கிறது.கோட்டை வாசலடியில் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கின் கீழ் தன்னை நிலைபடுத்தி, தான் நிராயுதபாணியாகவே வந்திருப்பதை கேணல் வீரசேகரவிற்கும் கப்டன் கொத்தலாவலவிற்கும் ரஹீம் தெரியப்படுத்துகிறார். ஒன்பது சடலங்களையும் தாங்கிய சவப்பெட்டிகள் ஒரு ட்ரக்கில் ஏற்றி கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக கொண்டு வந்து தரவா என்று முகாம் வாசலில் நின்றிருந்த இராணுவத் தளபதிகளிடம் ரஹீம் சத்தமாகவே கேட்கிறார். சடலங்களை ஒவ்வொன்றாக கொண்டுவரத் தேவையில்லை, சடலங்களைத் தாங்கியிருக்கும் ட்ரக்கை இராணுவ முகாமுக்கு அருகில் கொண்டு வருமாறு சற்றுத் தொலைவில் இருந்தே இராணுவத் தளபதிகளும் ரஹீமிற்கு சொல்கிறார்கள்.மீண்டும் நடந்து புலிகளின் பகுதிக்கு வரும் ரஹீம், இராணுவத்தினரின் சடலங்களைத் தாங்கிய ட்ரக்கை முகாம் அருகில் கொண்டு வருமாறு கேணல் வீரசேகர கூறியதை தளபதி கிட்டுவுக்கு கூறுகிறார். கிட்டுவிற்கு இராணுவத்தின் மீதிருந்த சந்தேகம் இன்னும் முற்றாக விலகவில்லை.ட்ரக்கை reverse இல் மெல்ல மெல்ல ஓட்டிச் செல்லுமாறும், தானும் புலிகளின் தாக்குதல் அணியொன்றும் சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்து இருப்பர் என்றும் ரஹீமிற்கு கிட்டரால் அறிவுறுத்தப்படுகிறது. இராணுவத்தினர் ரஹீமின் ட்ரக்கை தாக்கினால், புலிகளின் அணி திருப்பித் தாக்கத் தொடங்க, ரஹீம் ட்ரக்கைப் புலிகளின் பகுதிக்கு வேகமாக ஓட்டி வந்து விடலாம் என்பதே கிட்டரின் திட்டம்.ஒன்பது இராணுவத்தினரின் சடங்களை தாங்கிய வாகனம் பிரதான வீதி வழியாக மெது மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்குகிறது. கோட்டை முகாம் வாசலில் டரக்கின் நகர்வை இராணுவத்தினர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், இராணுவத்தின் அசைவுகளை சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த புலிகளும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.மெது மெதுவாக பின்னோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்த ட்ரக், கோட்டை இராணுவ முகாமின் முன்னரங்கில் இருந்த இரும்புக் கம்பித் தடுப்பில் மோதி நிறுத்தத்திற்கு வரவும், ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் திடீரென பாய்ந்தடித்து ஏறி, வாகனத்திற்குள் புலிகள் பதுங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்யவும் சரியாக இருக்கிறது. ட்ரக்கில் இருந்து இறங்கி வந்த ரஹீமை நோக்கி, கேணல் வீரசேகரவும் கப்டன் கொத்தலாவலவும் சிப்பாய்கள் சகிதம் இராணுவ முன்னரங்குகளைத் தாண்டி வருகிறார்கள். ரஹீம் தனது கழுத்தை சுற்றியிருந்த இரண்டு சயனைட் வில்லைகளை தடவிப் பார்த்துக் கொள்கிறார்.ரஹீமிற்கு அருகில் வந்ததும் கேணல் வீரசேகர ரஹீமிற்கு கைலாகு கொடுத்து விட்டு, கட்டியணைத்துக் கொள்கிறார். கோட்டை முகாமைச் சுற்றி யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தரப்புக்கள் இரண்டும், போரில் இறந்த இராணுவத்தினரின் சடலங்களை கையளிக்க பகைமையை சில கணங்கள் மறந்து விட, அந்தக் கணங்களில் மனிதாபிமானம் மேலோங்குகிறது. கைப்பற்றிய இராணுவத்தின் சடலங்களை கையளிக்க புலிகள் ஏன் முன்வந்தார்கள் என்று தனக்கிருந்த சந்தேகத்தை கேணல் வீரசேகர ரஹீமிடமே நேரடியாக கேட்கிறார். வீரமரணமடைந்த போராளிகளின் வித்துடல்களை களத்தில் விட்டு வராத தங்களின் மாண்பைச் சுட்டிக் காட்டி விட்டு, தான் இறந்தாலும் தனது வித்துடலை கடைசியாக பார்க்க எவ்வாறு தனது அம்மா ஆசைப்படுவாவோ, அதே போல தானே இறந்த இந்த இராணுவத்தினரின் தாய்மாரும் விருப்பப்படுவார்கள், அதனால் தான் இந்த சடலங்களை கையளிக்கத் தாங்கள் முன்வந்ததாக ரஹீம் மிடுக்காக பதிலளிக்கிறார். வீரசேகரவும் கொத்தலாவலவும் ரஹீமுடன் அளவளவாவிக் கொண்டிருக்க, வாகனத்தில் இருந்த ஒன்பது சவப்பெட்டிகளையும் இராணுவ சிப்பாய்கள் ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். இரவின் இருள் அந்தப் பிரதேசத்தை கவ்வத் தொடங்கி விட்டது. சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த தளபதி கிட்டு தலைமையிலான புலிகளின் அணி சடலங்களை ஒப்படைக்க சென்ற ரஹீம் இன்னும் திரும்பாததை எண்ணி கவலை கொள்ள ஆரம்பிக்கிறது. வோக்கி டோக்கியை கொண்டு வராமல் வந்திருந்த ரஹீமை, சுப்ரமணிய பூங்காவிற்குள் நின்றிருந்த புலிகள் சத்தமாக கத்தி கூப்பிடுவதை முன்னரங்கில் இருந்த இராணுவ வீரனொருவன் ஓடோடி வந்து தெரியப்படுத்துகிறான்.நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ரஹீம், புலிகளின் அணி நின்றிருந்த சுப்ரமணிய பூங்கா அருகில் சென்று, ஒரு பிரச்சினையும் இல்லை, தான் கெதியில் திரும்பி விடுவேன் என்று தனது தளபதிக்கு அறிவிக்கிறார்.பின்னர் இராணுவத் தளபதிகளுமனான தனது உரையாடல்களை முடித்து விட்டு, அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, சடலங்களை கொண்டு போன டரக்கில் ஏறி மீண்டும் புலிகளின் பகுதிக்கு வந்த ரஹீமை தளபதி கிட்டு ஆரத் தழுவி வரவேற்கிறார்.திட்டமிட்டாப் போல் இது வெற்றிகரமாக நடந்து முடிந்தது
விக்டர் தாயக மண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில் தான் இரண்டு இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு அங்கீகாரத்தையும், விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய எழுச்சியையும், இந்த இராணுவ வீரர்களின் கைதுகள் மூலம் உருவாக்கிச் சென்றிருந்தான்.சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு விக்டரின் அடம்பன் சண்டையில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் காரணமாக இருந்தனர்.அதனால் இரண்டு கைதிகளையும் தன்னிடம் எடுத்து கிட்டு அண்ணை கைதிகள் பரிமாற்றத்திற்கு தாங்கள் தயார் எனவும்; நீங்கள் விரும்பினால் வரலாம் என சிங்கள அரசிக்குச் சாவால் விடக்கூடிய நிலையை உருவாக்கியவன் விக்ரர்.

முதல் நாளிரவு கோட்டையடியில் நடந்த வரலாற்று சம்பவத்தைப் பற்றியறியாமல் உறங்கிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்து மக்கள், அடுத்த நாள் வெளியான உதயன் பத்திரிகையின், “யாழ்ப்பாண நகரில் புதிதாக புறநானூறு படைத்த விடுதலைப் புலிகள்” என்ற தலைப்புச் செய்தி நித்திரைப் பாயால் எழுப்புகிறது. விடுதலை புலிகள் போர்க்களத்தில் கடைப்பிடித்த விதிமுறைகளைப் பார்தீர்களா,?
அடுத்து கைதிகள் பரிமாற்றம் பற்றிப்பார்ப்போம்
சிங்களத் தளபதியாக இருந்த ஆனந்த வீரசேகர, கட்டன் கொத்தலாவை இருவரையும் துணிச்சலாக 15/10/1986 அன்று அழைத்து சந்தித்ததன் மூலம் சிங்களக் கைதிகளை அவர்களிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தார் கேணல் கிட்டு அவர்கள்.
அதற்குப்பதிலாக அவர்கள் சிங்கள தேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் அத்துலக் முதலியும், சிங்கள தேசத்தின் முப்படைகளின் தளபதியான சிறில் ரணதுங்கா, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நேரடியாக பலாலிக்குச் சென்று பலாலி வாசலில் வைத்து விடுதலைப் புலிகளின் கைதிகளாக தாங்கள் வைத்து இருந்த அருணாவையும், காமினியையும் கேணல் கிட்டு விடம் ஒப்படைத்தனர்.
அவர்களின் கைதிகளிற்குப் பதிலாக கேணல் கிட்டு அவர்களும் தங்களிடம் போர் கைதிகளாக முதன்முதலாக சிங்கள இராணுவத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு இருந்தவர்களான 2வது லெப்.அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார ஆகியோர் கேணல் கிட்டு அவர்களால் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர். ஆனால் 2வது லெப்.அஜித் சந்திரசிறீ அவர்கள் முகாமிற்கு மீண்டும் போவதை விரும்பவில்லை தான் யாழ்பாணத்தில் பொது மகனாக விடுதலை புலிகளின் பாதுகாப்பில் வாழப்போவதாக தெரிவித்தார். இது வந்த இராணுவ அதிகாரிகளிற்கு மிகவும் வெக்கக்கேடான செயலாகயிருந்தது. அவன் சொன்னதற்கு அவர்கள் எதுவும் பேசவில்லை அவனை விட்டு விட்டு ஒருதனைக் கூட்டிக்கொண்டு முகாமிற்கு சென்று விட்டார்கள். இதற்கு விடுதலைப் புலிகளின் அன்பும் பாசமும்தான் காரணமாக இருந்தது.பின்னர் இவர் யாழில் ஒரு தமிழ் பெண்ணைத் திருமணம் செய்து “அஜித் டொக்டர்” என்ற பேரில் அவர் ஒரு மருத்துவப் போராளியாக 2009 மட்டும் கடமையாற்றினார். என்பதை நாம் மறக்கமுடியாது. அதன் பின்னர் கப்டன் கொதலாவை ஊடாக சிங்கள மக்களிற்கு தகவல் போய் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் தளபதி கிட்டு அவர்களின் பெயர்தெரிய வந்தது.

அடுத்து கிட்டு அண்ணைக்கு நடந்த குண்டுத் தாக்குதலைப் பற்றிப் பார்ப்போம்
தொடரும்
அன்புடன் ஈழமதி
பாகம் 03 தமிழிழீழக்கதை (Tamil Eelam of story)
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

பாகம் மூன்றின் மூன்றாவது தொடர்
கிட்டு பற்றி தளபதி சொர்ணம் அண்ணை குறிப்பிடும்போது 1986 நடுப்பகுதியில் நாங்கள் கொக்குவில் பகுதியில் இருந்தோம். அப்பொழுது கிட்டு அண்ணை வெளியில் இருந்து முகாமிற்கு வரும் போது எவரும் முகாமில் இருக்கவில்லை. எல்லோரும் வெளியே சென்று விட்டார்கள். ஆனால் அங்கே நிறையே ஆயுதங்கள் இருந்தது. எவரும் பாதுகாப்பிற்கு விடப்படவில்லை.இதைப் பார்த்ததும் குழப்பம் அடைந்த கிட்டண்ணை தண்ணீர் கூட குடிக்கவில்லை வெளியே சென்றவர்களை பார்த்துக் கொண்டேயிருந்தார். அவர்கள் 3 சைக்கிளில் 6 பேர் வெளியே இருந்து வந்தார்கள். அவர்கள் வந்ததும் அவர்களிற்கு பேசவோ அடிக்கவோ இல்லை வீட்டிற்குள் சென்று கோடாரியை எடுத்துக் கொண்டு மூன்று சைக்கிளையும் கொத்தி துண்டுதுண்டாக ஆக்கினார். அத்தோடு அவரின் கோபம் முடிந்து விட்டது.அன்றில் இருந்து 24 மணித்தியாலமும் அம் முகாமைப் பாதுகாக்க போராளிகள் காவல் கடமையில் இருப்பார்கள். என தளபதி சொர்ணம் குறிப்பிட்டார்.தளபதி கிட்டு வாயால் சொல்லாமல் செயலால் செய்து காட்டி அவர்களின் மனங்களை மாற்றுவார்.
ரெலோ சண்டையில் பிடிபட்ட சில உறுப்பினர்கள் கந்தன் கருனன் முகாமில் அடைத்து வைக்கப்பட்டார்கள் என முன்னர் குறிப்பிட்டேன் அவர்களிற்கு என்ன நடந்தது என விரிவாகப்பார்ப்போம்
இது இப்டி இருக்க மூத்த உறுப்பினர் அருணா கைது பரிமாற்றத்தின் போது அவரை எடுத்த கிட்டு அண்ணை “கந்தன் கருணை”ஜெயில் முகாமிற்குப் பொறுப்பாக விட்டார். அங்கே முன்னர் கைது செயப்பட்ட ரெலோ, மற்றும் ஈபி. ஆர். எல்.எப் உறுப்பினர்களும் இருந்தார்கள். அவர்களிற்கு உணவு கொடுப்பதற்கு மூன்று போராளிகளும் வெளிப் பாதுகாப்பிற்கு சில குறிப்பிட்ட போராளிகளும் விடப்பட்டு இருந்தனர்.

,30/03/1987ம் ஆண்டு தளபதி கிட்டு அண்ணை சென்ற வாகனத்திற்கு கைக்குண்டு எறிகின்றார்கள் மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் . அதில் கிட்டு அண்ணையின் கால்தூண்டிக்கப்பட்டது. ஆனால் கிட்டு அண்ணை மீதும் தலைவர் மீதும் அதிக பாசம் கொண்டவர் அருணா அண்ணை.
இச்செய்தியை அறிந்து கடுமையான கோபமான மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறினார் அருணா அண்ணை. மிகவும் மனநிலை பாதிக்கப் பட்டவராகச் சென்ற அருணா அண்ணை அவர் சென்ற நேரம் அத் தடுப்பு முகாமில் சுமார் 35 ஈபி. ஆர் .எல் .எப் மற்றும் ரெலோ உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.
இவர் போகும் நேரம் எமது போராளிகள் மூவர் இரவு உணவு அவர்களுக்கு பரிமாறிக் கொண்டு இருந்தார்கள். திடீர் என்று இவர் போனதும் றைவுளை எடுத்து சுடத்தொடங்கினார்; அதில் ஈபி .ஆர் .எல்.எப் ரெலோ என மொத்தம் 13 உறுப்பினர்களும் உணவு பரிமாறிக் கொண்டிருந்த எமது உறுப்பினர்கள் 3என அந்தத் துன்பியல் சம்பவத்தில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். ஐந்து உறுப்பினர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
அதில் அருணா அண்ணையின் ஆயுதத்தைப் பறிக்கும் போது எமது உறுப்பினர் ஒருவரும் படுகாயம் அடைந்தார் . இதை அறிந்த தலைவர் உடனே அருணா அண்ணையை விசாரிக்குமாறு கிட்டு அண்ணைக்கு கட்டளை வழங்கினார்.
விசாரணையை மேற்கொண்டபோது அருணா அண்ணை சொன்ன விடயம் அந்நேரம் என்ன நடந்தது என்று எனக்கே தெரியாது, என்னை மன்னிக்க முடிந்தால் மன்னிக்கட்டாம் இல்லை எனில் சுட்டுக் கொல்லுமாறு தலைவரிடம் சொல்லுங்கோ..! என அருணா அவர்கள் கிட்டு அண்ணையிடம் சொன்னார், சொன்னார். இத்தகவல் கிட்டண்ணையூடாக தலைவருக்கு அனுப்பப்பட்டது.
அவரை வீட்டிற்குச்சென்று பொது வாழ்க்கையில் ஈடுபடுமாறும்; இல்லை அவர் இயக்கத்தில் இருக்க விரும்பினால் அவர் வீரச்சாவு அடையும்போது அவரை மாவீரர் பட்டியலில் இணைக்கமாட்டேன்! என்பதை அவருக்குச் சொல்லுமாறு தலைவர் கிட்டு அண்ணைக்கு செய்தி அனுப்பினார்.
அச்செய்தி அருணா அண்ணைக்குச் சொல்லப்பட்டது. அச்செய்தியை அறிந்ததும், 1988ம் ஆண்டு யாழில் நின்ற அனைத்துப் பேராளிகளையும் வன்னிக்கு வருமாறு இயக்கம் தெரிவித்த போதும் அருணா அண்ணை மட்டும் அங்கே சென்று தலைவரைப் பார்க்க விரும்பவில்லை. தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் நின்று இந்தியா இராணுவத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
அக்காலத்தில் இந்தியா இராணுவத்தின் சுற்றிவளைப்பின்போது சில குறிப்பிட்ட பொது மக்களோடு அருணா அண்ணையும் இந்தியா இராணுவத்தால் கைது செய்ப்பட்டார் . அவ்வேளை அனைவரையும் முட்டுக்காலில் வைத்தது இந்தியா இராணுவம், திடீரென அருணா அண்ணை எழும்பி முற்றுகையை உடைத்துக் கொண்டு மதிலால் பாய்ந்து ஓடும்போது இந்தியா இராணுவம் சுட்டு அருணா அண்ணை அவ்விடத்திலே கொல்லப்பட்டார்.
அருணா விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய உறுப்பினர் ஆவார். சீலன், ஆனந் இருவரையும் எதிரியிடம் உயிருடன் பிடிபடாமல் இருவரையும் சுட்டு விட்டு அவர்களின் ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு பாதுகாத்தது, மட்டும் அல்லாமல் மட்டு அம்பாறைப் பொறுப்பாளராக இருந்து கணிசமான போராளிகளை கிழக்கு மாகாணத்தில் இணைத்தவர். திருநெல்வேலித்தாக்குதல் உட்பட அனைத்து தாக்குதலிலும் பங்குபற்றிய ஒரு முக்கியதளபதி ஆவார். தலைவர் சொன்னது போல் அவரை மாவீரர் பட்டியலில் எடுக்கவும் இல்லை போராளிகள் கூட அவர் தொடர்பாக ஒரு வரலாறுகளையும் எழுத வில்லை. அனைவரும் தலைவரின் கட்டளையைப் பின்பற்றினார்கள்.அவரின் மனநிலை பாதிக்கப்பட்டமையால் எமது மூன்று போராளிகள் உட்பட சில சகோதரர்களையும் இழக்க வேண்டியிருந்தது. அமெரிக்காவில் பல தடவை இது நடத்தாலும் எமது விடுதலைப் போராட்டத்தில் ஒரு தடவை நடந்தாலும் இதற்காக மிகவும் கவலை அடைகின்றோம்.
14/02/1987 பொன்னம்மான் வீரச்சாவு
யாழ்பாணம் நாவக்குழியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு கிட்டுவும், அவர்கள் திட்டமிட்டார். அத்தாக்குதலை செய்வதற்கு பொன்னம்மான் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயர நிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.
எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.
1983ம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையில் பயிற்சி எடுத்துக் கொண்டு அதற்குப் பொறுப்பாகவும் இருந்தார் பொன்னம்மான். பயிற்சியின் போதே சகவீரர்களையும் எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கி எடுத்தார் பொன்னம்மான்.
இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்ரர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் பயிற்சி எடுத்தார்கள் பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் குறிப்பாக இந்தியாவில் நடந்த பயிற்சி முகாம்களான 01 மற்றும் 02 இதை இந்தியா மத்திய அரசு வழங்கியது அதில் பத்தாவது பயிற்சி முகாம்ககள்வரை விடுதலைப்புலிகளே தங்களின் சொந்தப் பணத்தில் நடத்தினார்கள் ,அப்பயிற்சி முகாம்களை தலைமை தாங்கி நடாத்தியவர் பொன்னம்மான் என்பதும் குறிப்பிடத்தக்கது தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை உருவாக்கினார் .
உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.

வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் உருவாக்கினார். போராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார்.
இந்தியாவில் 2000ற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார்.பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை.அப்பொழுது யாழ் மாவட்டத் தளபதியாகக் தளபதி கிட்டு இருந்தார், அக்கால பகுதியில் சிங்கள இராணுவத்தினர் முகாம்களிற்கு உள்ளே இருந்தவாறு மக்கள் குடியிருப்பை நோக்கி தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்த காலம் அது நாவற் குழி முகாமில் இருந்து அரியாலை மிக நெருங்கிய தூரத்தில் இருந்தது, அன்று அரியாலை கிராமத்தில் திருமண நிகழ்வு ஒன்று நடந்தது, மாப்பிள்ளையும் பெண்ணும் மோதிரம் மாத்திக் கொண்டிருந்த வேளை…!
நாவற்குழி முகாமில் இருந்த இராணுவத்தினர் 60 mm மோட்டார் எறிகணையை அக்கிராமத்தை நோக்கி வீசினார்கள். அச் செல் அவ் மணவறை வீட்டிற்கு மேலே விழுந்து வெடித்தது. ஸ்தலத்திலே மாப்பிள்ளையும் பெண்ணும் சாவடைந்தனர். மேலும் பல மக்கள் காயம் அடைத்தார்கள். இச்செய்தி கிட்டு அண்ணைக்குப் போனது ,செய்தியைக் கேட்டதும் கிட்டு அண்ணை கடுமையாகக் கோபம் அடைந்ததோடு மட்டும் அல்லாமல் அம் முகாமை அழிக்குமாறு பொன்னம்மானுக்குக் கட்டளை வழங்கினார். அப்பொழுது யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார்.இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கு மேலாக ஒரே வெளிப் பிரதேச வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது.இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியது எமது வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களைப் பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உட்புகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.
தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு; திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள்.புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.
இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள்.பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன்.மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்.

14/-02-1987 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கொரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டி விடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.
முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது.
அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.
கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்… மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி..!வியப்பு ! சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வோக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை.

பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்ததும் பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை. பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறறனார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது.பொன்னம்மானை அடையாளம் காணக்கூடிய வகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.
முகாம்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும்; அந்த மனிதன் இன்று இல்லை. ‘அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ” என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.
லெப்.கேணல் பொன்னம்மானுடன் வீரச்சாவடைந்த

போராளிகள்;
மேஜர் கேடில்ஸ்

கப்டன் வாசு

2ம்.லெப் பரன்

வீரவேங்கை,கவர்(நகுலேஸ்வரன்),

தேவன்(வசந்தகுமார்)

குமணன்(மோகனலிங்கம்),

யோகேஸ்(பாலன்),

(படம்லெப். சித்தாத்தர்)

( திலீபன்),சுதாகர்),
(வசீகரன்), 2ம்லெப். (அர்ச்சுணன்), வீரவேங்கைகளான அக்பர் (லோகநாதன்), குறித்த படைமுகாம் மீதான தாக்குதலுக்கு வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது.
படைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை தண்ணீர் தாங்கி ஊர்தி வெடித்துச் சிதறியது.
இதன்போது மேஜர் கேடில்சுடன் மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன்உட்பட ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இது நடந்து ஒரு மாதம் கழித்து இந்தத் தாக்குதலை செய்து கிட்டண்ணை பொன்னம்மானின் இழப்பை ஈடு செய்யத் திட்டமிட்டார்.
பொன்னம்மான் பற்றி தலைவர் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்
பயிற்சி முகாங்களைப் பொறுத்தவரையில் 01மற்றும்02 மட்டுமே இந்தியா மத்திய அரசால் வழங்கப்பட்டது
அதற்குப் பிறகு பயிற்சி முகாம் மூன்றில் இருந்து கிட்டத்தட்ட பயிற்சி முகாம் பத்து வரைக்கும் பொன்னம்மான் பொறுப்பு எடுத்து நடத்தியவர் ,முழுப் போராளிகளையும் அவர் தான் உருவாக்கினார், ஆரம்பகாலமான திருநெல்வேலி வங்கிக்கொள்ளை நடந்த காலமான 1980 களிலே அவர் எங்களோடு சேர்ந்து இயங்கத் தொடங்கி விட்டார், அந்தக் காலத்தில் இருந்து செயல்பட்டதால் இயக்கத்தினுடைய ஆரம்பகால கஸ்டங்கள் துன்பங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும், அதை அவர் பயிற்சி முகாம் போராளிகளிற்கு ஆரம்ப காலங்களில் எங்களிற்கு ஏற்பட்ட பிரச்சனைகளையும் இனி நாங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அவர்களிற்குத் தெளிவாகச் சொல்லிக் கொடுக்கக் கூடியவராக இருந்தார்,
இந்தப் பயிற்சிகளை அவர் திறமையாக நடத்துவதற்கான காரணம் அவர் யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் மாணவர்களிற்கான கிறிக்கேற் அணியில் கப்டனாகயிருந்தமையால் அவருக்கு தலைமை தாங்குகின்ற ஆற்றல் இருந்தது, அதை விட அவரின் தாயாரும் ஒரு நேர்மையானவர் அடிக்கடி இவருக்கு புத்திகள் ரீதியாகப் போதிப்பவர், இவர் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்திலே தாயாருக்குத்தெரியும், கிட்டத்தட்ட அவரின் மகன் போராட்டத்தில் ஈடுபடுவது அவருக்கு ஒரு பெருமைமாதிரி இருந்தது, அவர் எப்பொழுதும் இவருக்கு கடிதங்கள் எழுதும் போதும் கூட நல்லாயிருக்கவேணும் உன்மையாகயிருக்க வேணும் இயத்த்தை விட்டு விலகக் கூடாது என எழுதுவார்,
அக்கடிதங்களையும் எனக்கு அவர் காட்டுவார் அதை எடுத்து வைக்க வேணும் என முன்னரே நினைத்தேன் சிலவற்றை தவற விட்டுள்ளேன், அவர் அடிக்கடி எழுதும் கடிதர்களில் உனது கொள்கையில் உறுதியாகயிரு நேர்மையாகயிரு எப்பொழுதும் விட்டு விலகி வராதே அவருக்குத் தாய்யும் உந்துசக்தியாகயிருந்தவர், அவர் எங்களோடு நெருங்கிப்பழகியமையால் எனது சிந்தனையும் செயல்பாடும் அவருக்கு நன்கு தெரியும் அவர் என்னோடு நிறைய காலம் நின்றமையால் எனது எண்ணப்போக்கை விழங்கிக்கொண்டவர், அந்தப் பக்கங்கள் வரலாறுகளையும் போராளிகளிற்கு சொல்லி வளர்த்தார் மாற்று இயக்கங்களில் பயிற்சி முகாம்களிற்குப் போறுப்பாக விடப்பட்டவர்கள் பல குழப்பங்களை ஏற்படுத்தியதை நாங்கள் அறிந்துயிருக்கின்றோம்
என்னைப் பொறுத்தவரையில் அதை நான் சில நண்பர்களிற்ச் சொல்கின்றனான் கிட்டுவும் பொன்னம்மானும் விசுவாசமாகயிருந்தமையால் தான் அதாவது பயிற்சி முகாம்களை பொன்னம்மான் நடத்திக்கொண்டிருந்தார், அந்தப் பக்கத்தால் எனக்கு ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை அதைப்போல் யாழ்பாணத்தில் கிட்டு அணியை நடத்திக் கொண்டிருந்தமையால் இரண்டு பக்கத்தாலும் எனக்கு எந்தக் குழப்பங்களும் ஏற்படவில்லை, அந்த இரண்டு பேரின் விசுவாசத்தன்மையும் எனக்கு இரண்டு பக்கத்தாலும் எந்தச் சிக்கலும் ஏற்பட விடல்லை, ஒன்றும் இரண்டும் மத்திய அரசு தந்தமையால் மூன்றில் இருந்து பயிற்சி வழங்க எங்களால் முடியாமல் இருந்தது அக்காலத்தில் மாற்று இயக்கங்களிடம் கூட பணம் இருந்தது, ஆனால் எங்களிடம் பணக் கஸ்ட்டம் பெரிதாகயிருந்தது அப்பொழு உங்களிற்குத் தெரியும் இயக்கத்தினுடையே மூத்த உறுப்பினர் பேபி சுப்பிறமணியம் இவர் இந்தியாவில் இயக்கதிருடைய வரலாற்றை கண்காட்சியாக இந்திய மக்களிற்கு இதை காட்டும் வேலையை செய்து கொண்டிருந்தவர்கள்,

அப்பஅந்தக் கண்காட்சியை பார்த்த பின் இந்திய மக்கள் சிறு தொகை அன்பளிப்பை செய்து வந்தமையால் சிறிது பணம் சேரும் அப்ப நாங்கள் அந்தப் பணத்தை வைத்துத்தான் அப்பயிற்சி முகாம்களை நடத்திவந்தோம், அந்தக் காலங்களில் பொன்னம்மான் பணக் கஷ்டமான காலங்களில் அந்தக் கண்காட்ச்சி நடக்கும் இடங்களில் பொன்னம்மான் போய்?அந்த வாசலில் நிதிகள் சேருவதை பார்த்தக்கொண்டு இருப்பாராம், அந்த நீதிகள் சேர்ந்ததும் அதை அள்ளிக்கொண்டு பயிற்சி முகாமிற்கு வந்து விடுவார் வந்தவுடன் அதை அனுப்பி போராளிகளுக்கு பொருட்கள் வேண்டி உணவு சமைத்து அவர்களுக்குக் கொடுத்து பயிற்சி நடக்கும் ,அது மட்டும் அல்ல பொன்னம்மான் வெளியில் சென்று அரசியல்வாதிகளிடம் எமது போராட்டத்தை சொல்லி அவர்களிடம் இருந்தும் உதவியைப் பெற்றார், குறிப்பாக குளத்துர் மணி குப்பலக்சுமி அங்கா போன்ற ஏனையவர்களிடம் இருந்தும் உதவியை பெற்றார் ,குறிப்பாக அந்த அக்கா பயிற்சி முகாம் போராளிகற்கான முட்டையை அவர் தந்தார். அப்படி ஒவ்வொருவரிடமும் அவர் சென்று ஒருத்தரிடம் முட்டை ஒருத்தரிடம் அரிசி என வேண்டித்தான் அந்த முகாம்களை அவர் நடத்தினார். அதால அந்த அரசியல் தலைவர்களோடும் அவருக்கு நல்ல உறவு இருந்தது ,அதை விட நான் தேடப்படும் காலங்களில் அவர்களின் வீட்டிற்குச் சென்று பாதுகாப்பாகவிருந்து இருக்கின்றேன் நான் தேடப்படுபவர் என்பது அவர்களின் தாய்க்கும் தெரியும் ,அவர் எதுவும் என்னிடம் கேட்க மாட்டார் பொன்னம்மான் எங்களோடு இயங்குவதால் அவரும் எங்களிற்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்தார், அவர்களின் குடும்பம் எப்பொழுதும் இசையில் ஆர்பமானவர்கள் அவர்கள் தங்களின் வேலையைச் செய்வார்கள் இவருக்கு பின் பக்கம் ஒரு அறை கொடுக்கப்பட்டிருந்தது, இவர் ஒரு சுத்திலை வைத்து தட்டிக்கொண்டிருப்பார், இப்படி அங்கே கலகலப்பாக வேலைகள் நடந்துகொண்டுயிருக்கும் தாய் சங்கீதம் பாடிக்கொண்டு சமைத்தக் கொண்டிருப்பார் பொன்னம்மானின் அப்பாவிக்கு காது கேட்பது குறைவு அவர் சவுண்டாக பாட்டை கேட்டுக்கொண்டிருப்பார், இப்படி வீடுபுல்லா இவர்கள் செய்யும் வேலை சத்தம் கேட்டதால் பொன்னம்மான் அந்த வீட்டிலே வைத்து வெடிகுண்டு செய்வது அவருக்கு இ லகுவாகயிருந்தது எங்களின் படை முகாம் போன்ற அவர்களின் வீடு இருந்தது என தலைவவர் குறிப்பிட்டார்
அடுத்து இதற்குப்பதில் தாக்குதலாக கிட்டு அண்ணையால் நடத்தப்பட்ட யாழ் தொலைத்தொடர்பு நிலையம் மீதான தாக்குதலைப் பற்றிப் பார்ப்போம்

தொடரும்
அன்புடன் ஈழமதி

பாகம் 03 தமிழிழீழக்கதை (Tamil Eelam of story)
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு
பாகம் மூன்றின் நாலாவது தொடர்
06.03.1987 யாழ் தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம் தாக்குதல் !
06.03.1987அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்ட யாழ்தொலைத் தொடர்புநிலைய மினிமுகாம் தாக்குதலைக் குறிப்பிடலாம்.
யாழ்ப்பாணம் கோட்டை முகாமிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தில் முகாமிட்டனர் . அவ்வாறு முகாமிட்ட படையினர் அப்பகுதி மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை தொடர்ந்து நடாத்திக் கொண்டு வந்தனர். {எனவே இதை முற்றாக தாக்கி அழிக்க கிட்டண்ணை திட்டமிட்டார், அதாவது மோட்டார் மற்றும் இலகு ரக ஆயுதங்களைக் கொண்டு இந்தக் காவலரண்களை அழிக்க தளபதி கிட்டண்ணா அவர்கள் தலைவர் அவர்களின் கவனத்திற்க்குக் கொண்டுவந்தார் . அத்துடன் இம்முகாம் சம்பந்தமான வேவுத்தகவல்களையும் கொடுத்தார். இவைகள் அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள், உடனடியாக இம்மினி முகாமை தாக்கியழித்து மக்களைப் பாதுகாக்குமாறு பணித்ததுடன் யாழ்மாவட்ட தாக்குதலணிகளுடன் மேலதிகமாக மன்னார் மாவட்ட தாக்குதல் அணிகளையும் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்துமாறும் அத்துடன் தனது மெய்பாதுகாப்பாளர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார்.
அதற்கமைவாக இம்மினி முகாமைத் தாக்கியழிப்பதற்கான திட்டத்தை தளபதி கிட்டண்ணா அவர்கள் விளங்கப்படுத்தி இத்தாக்குதலுக்கான முக்கியத்துவத்தையும் தாக்குதலனிகளுக்குத் தெளிவுபடுத்தினார். அதற்கமைவாக தாக்குதலணிகள்
தளபதி கிட்டண்ணா அவர்களின் திட்டத்ததில் நடைபெற்றது, தாக்குதற் திட்டத்திற்கமைவாக ஒரு அதிவேக மின்னல் தாக்குதலை மேற்கொண்டனர் புலிகள். அதாவது 6 RPG யால் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி எதிரியைத் திணரடிக்கச் செய்து தாக்குதலை ஆரம்பித்தனர், குறிப்பிட்ட நிமிடத்தில் தாக்குதலின் பின் மினிமுகாம் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ்வந்தது. இவ்வெற்றிகர மினிமுகாம் தாக்குலில் பல படையினர் கொல்லப்பட்டும்; எட்டுப்படையினர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்தனர். மற்றும் பல அதிநவீன ஆயுதங்களும் வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன. இத்தாக்குதலில் ஐம்பது போராளிகள் பங்குபற்றியிருந்தனர். இத்தாக்குதல் மூலம் பொதுமக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய முகாம் முற்றுமுழுதாக கைப்பற்றி தொடர்ந்தும் தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இவ்வெற்றிகரத் தாக்குதலை தளபதி கிட்டண்ணா செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். கிட்டண்ணாவிற்கு உதவியாக அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதி ராதா அண்ணா அவர்களும் செவ்வனவே செயற்பட்டிருந்தார். இவ்வெற்றிகரத்தாக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர் .
அவர்களின்.. விபரம் வருமாறு.
கப்டன் நிக்சன்
கனகசபை முருகதாஸ்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:19.08.1967
வீரச்சாவு:06.03.1987
2ம் லெப். அசோக்.
வீரவேங்கை.ரதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். சிறு சிறு தாக்குதல்கள் மூலம் விடுதலைப் புலிகளின் கை ஓக்கிக்கொண்டியிருக்க, தொடர்ந்து முகாம்களை தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டது

சிங்கள அர படைகளிற்கு அத்தோடு முகாமில் இருந்து வெளியேற முடியாத நிலை கோட்டையில் உலங்குவானூர்திகளை இறக்க முடியாதநிலை ஏற்பட்டமையால் இராணுவம் உணவு இல்லாமல் தவிர்த்தது,இராணுவத்தின் தளபதி கப்டன் கொத்தலாவல. யாழ்ப்பாணம் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்திற்கு தலைமைதாங்கியவர்.
தளபதி கிட்டு தலைமையில்
யாழ் கோட்டை முற்றுகையிடப்பட்டது. கொத்தலாவல தலைமையிலான பல நூற்றுக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் கோட்டைக்குள் முடக்கப்பட்டனர். அவர்களுக்கான உணவு, தண்ணீர் என்பன தடைப்பட்டது. விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு பயந்து ஹெலிகாப்டர்கள் கோட்டையில் தரையிறங்குவதில்லை. கோட்டைக்குள்ளிருந்த இராணுவத்தினர் பசியில் வாடினர்.
கப்பன் கொத்தலாவலவிடமிருந்து தளபதி கேணல் கிட்டுவுக்கு வாக்கிடோக்கி மூலம் அழைப்பு வருகிறது. கொத்தலாவலயின் குரல் தழுதழுக்கிறது. “சாப்பாடு இல்லாமல் துடிக்கிறோம். தண்ணீரும் இல்லை. சமைப்பதற்கு விறகும் இல்லை. எங்களுக்கு சாப்பாடு தருவதற்கு எங்கள் ஹெலிகாப்டர்களை அனுமதிப்பீர்களா?”என்று கேட்கிறார்.
தளபதி கிட்டுவுக்கு நெஞ்சு கனத்தது. எதிரி என்றாலும் அவன் பஞ்சத்தில் வாடுவதை விரும்பாத தமிழன் அல்லவா. “உங்கள் ஹெலிகாப்டர்களுக்கு இங்கே அனுமதி இல்லை. வேண்டுமானால் நாங்கள் உங்களுக்கு சாப்பாடு தருகிறோம். ஒரு லாரியில் உணவுப் பொருட்களும் விறகும் அனுப்புகிறேன். உங்கள் உறுப்பினர்களை தாக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்” என்றார் தளபதி கிட்டு. கொத்தலாவல சம்மதித்தார்.
சற்று நேரத்தின்பின் தளபதி கிட்டு அனுப்பிய லாரி கோட்டைக்குள் சென்று உணவுகளை கொடுத்துவிட்டு வருகிறது. கப்டன் கொத்தலாவல நெகிழ்ச்சியோடு கிட்டுவுக்கு நன்றி கூறுகிறார். அதன் பின்னரும் அதே இடத்தில் சண்டை ஆரம்பிக்கிறது. சண்டை நடந்துகொண்டிருக்கும்போதே தளபதி கிட்டுவும் கொத்தலாவலவும் அடிக்கடி சண்டையை நிறுத்திவிட்டு நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். பல இடங்களிலும் சாவடைந்த இருதரப்பு சடலங்களும் இவர்களின் சந்திப்பினூடாக பரிமாறப்பட்டன.
பின் நாட்களில் கேணல் கிட்டு அவர்கள் இந்திய-இலங்கை கூட்டு இராணுவச் சதியில் அகப்பட்டு இயக்கத்தின் மரபிற்கமைய பத்து வேங்கைகளோடு வீரச்சாவைத் தழுவிக்கொள்கிறார். கப்டன் கொத்தலாவல விடுதலைப் புலிகளின் போராட்ட நியாயத்தை உணர்ந்து ஸ்ரீலங்கா இராணுவத்திலிருந்து விலகி வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்கிறார்.
போர்க்களத்தில் எதிரிக்கே உணவளித்த பெருமை விடுதலைப் புலிகளையே சாரும்!
26 /05/1987,ஒப்பரேசன் லிபரேசன் என்ற பேரில் சிங்களப் படையினர் யாழ் வல்வெட்டித்துறை மீது கடுமையான தாக்குதலை தொடங்கியது……..
தமிழீழப்போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் மீதான முதல் பாரிய இராணுவ நடவடிக்கை இதுவாகும் சிங்கள அரசால் ஒப்பரேசன் லிபரேசன் என பெயர் வைக்கப்பட்டு /26./05/1987 அன்று சிறிய நிலப் பரப்பைக் கொண்ட வடமராட்சிப் பிரதேசத்தில் 8000ற்கு மேற்பட்ட ராணுவத்தினரால் நூற்றுக்கு மேற்பட்ட கனரக ராணுவ வாகனங்களும் பல உலங்கு வானூர்திகளும் ,குண்டு வீச்சு விமானங்களும் சிறிலங்கா கடற்படையினரின் கடல்படை படகுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் சுற்றிவளைத்து கோரத் தாக்குதல் நடத்தினார்கள்.இதில் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். 15000 க்கு மேற்பட்ட மக்கள் இருப்பிடங்களை விட்டு ஏதிலிகள் ஆக்கப்பட்டனர். இத்தாக்குதலை முறியடிப்பதற்காக தேசிய தலைவர் அவர்களின் வழிகாட்டலில் 200 வரையிலான போராளிகள் எதிர்த்து நின்று கடுமையான சண்டையிட்டார்கள்.இதின் முதல் நாள் சமரில் 09 போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களின் விபரம்
உடுப்பிட்டி பகுதியில் ஒப்பரேசன் லிபரேசன் படை நடவடிக்கையின்போது சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் நடத்திய குண்டு வீச்சின்போது வீரச்சாவு
01) கப்டன் வீமன்
நவீனநாயகம் நாகராசா
நாகர்கோவில், வடமராட்சி கிழக்கு
வீரப்பிறப்பு: 26.12.1959
வீரச்சாவு: 26.05.1987
02) கப்டன்அலன்
நடனசிகாமணி பாக்கியலிங்கம்
வல்வெட்டித்துறை
வீரப்பிறப்பு: 06.05.1962
வீரச்சாவு: 26.05.1987:
03) 2ம் லெப்டினன்ட் ரம்போ (சிவா)
தங்கவடிவேல் சிவகுமாரன்
வல்வெட்டித்துறை
வீரப்பிறப்பு: 25.11.1968
வீரச்சாவு: 26.05.1987
04) 2ம் லெப்டினன்ட் நாகேந்திரன்
ச’மகேந்திரன்
மடு, மன்னார்
வீரச்சாவு:26.05.1987
05) வீரவேங்கை செட்டி
சுந்தரம் செல்வராசா
இமையாணன் மேற்கு, நாவலடி, உடுப்பிட்டி
வீரப்பிறப்பு: 07.05.1968
வீரச்சாவு: 26.05.1987
06) வீரவேங்கை ராஜன்
சங்கத்தானை, சாவகச்சேரி
வீரச்சாவு:26.05.1987
07) வீரவேங்கை நரேஸ்
கணேசரத்தினம் கிருபாகரன்
தொண்டமானாறு
வீரப்பிறப்பு: 05.07.1971
வீரச்சாவு: 26.05.1987
08) 2ம் லெப்டினன்ட் சேது
நடராசா சிவசேது
கொட்டடி-யாழ்
வீரப்பிறப்பு: 01.05.1966
வீரச்சாவு: 26.05.1987
09) வீரவேங்கை செட்டி சோட்
கணபதிப்பிள்ளை நந்தகுமார்
சண்டிலிப்பாய் யாழ்
வீரப்பிறப்பு: 02.05.1971
வீரச்சாவு: 26.05.198701.
இவர்கள் அச்சண்டையில் வீரச்சாவு அடைந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் உலங்குவானூர்தியின் தாக்குதலிலே கொல்லப்பட்டனர் அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிடம் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது,
அதில் சுமார் 60 திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் அடையாளம் தெரியாமல் சிதறுண்டு சதைத்துண்டுகளாகக் காணப்பட்டார்கள். இந்திய அரசாங்கம் தாக்குதலை நிறுத்தச் சொல்லியும் சிங்களப் படைகள் தாக்குதலை நிறுத்தவில்லை. தனது கட்டளையை இலங்கை அரசு ஏற்கவில்லை என்பதை புரிந்து கொண்ட இந்தியா அரசாங்கம் தனது விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களை வட பகுதி தமிழர்களிற்கு என வானத்தில் இருந்து போட்டது. இது எமது தலைவரிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எப்படியாவது இலங்கைப் படையினரிக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என முடிவு எடுத்தார்.
05/06/1987வடமராச்சியில் அமைந்திருந்த முகாம் மீது தாக்குதல் நடத்த தலைவர் திட்டமிட்டார்;
இதற்கான வேவு நடவடிக்கையை மேஐர் விசு மற்றும் மூத்த போராளி சுக்குளா தலைமையிலான போராளிகள் ஈடுபட்டனர். அப்பொழுது எமது அமைப்பில் இருந்த பிரபா என்பவர் நெல்லியடி சண்டைக்குப்பிறகு தலைவரால் அவருக்கு “சக்கைப்பிரிகேடியர் ” என பட்டப் பெயர் தலைவரால் வைக்கப்பட்டது. அப்படி மிகவும் திறமையானவராக பிரபா காணப்பட்டார். பிரபா அவர்களின் தலைமையில் நெல்லியடி சண்டைக்கான திட்டம் தலைவரால் தீட்டப்பட்டது.
அப்பொழுது தென்மராட்சி, வலிகாமம், வடமராட்சி அனைத்து பிரதேசங்களிலும் இருந்து சுமார் 120 போராளிகள் எடுக்கப்பட்டு பளையில் உள்ள வைரமாளிகை என்ற தென்னம் தோட்டத்தில் போராளிகளைகொண்டு போய் நெல்லியடி மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரைத் தாக்குவதற்கான மாதிரிப் பயிற்சி தேசியத்தலைவரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதற்கு மெயின் பொறுப்பாக மாத்தையாவை விட்டாலும் தலைவரே அப்பயிற்சியை நேரடியாக வழங்கிக்கொண்டுடிருந்தார்,
காலையிலே ஒரு டெலிக்கா வேனில் தலைவர் பயிற்சியை பாப்பதற்கு வந்து நிப்பார்.
அப்பொழுது போராளிகள் தென்னை ஓலைகளை வெட்டி அவரிடம் கொடுப்பார்கள். அதை அவர் நிலத்தில் போட்டு அதில் இருந்து பயிற்சியைப் பார்த்துக்கொண்டுயிருப்பார். அவரின் பாதுகாவலராக பிரிகேடியர் சொர்ணம் மற்றும் பிரிகேடியர் கடாபி இருவரும் நிப்பார்கள்
.
அதில் கலந்துகொண்ட முக்கிய போராளிகளான லெப் கேணல் செல்வராசா, பிரிகேடியர் ஜெயம், பிரிகேடியர் பானு, லெப் கேணல்.சூட்டி பிரிகேடியர் சூசை, கப்டன் மில்லர், போராளி அசோக் சுசிலன், மேஐர் விசு, போராளி சுக்குளா, போராளி ஜெயா மேஜர் கமல் போராளி தூயமணி உட்பட சுமார் 120 போராளிகள் பயிற்சி எடுத்தார்கள். ஒரு மாத காலம் இப்பயிற்சி நடைபெற்றது. இதில் பங்குபற்றிய தூயாமணி ஆகிய எங்களின் 15 பேருக்கு ஜெயம் பொறுப்பாகவும், எங்களின் இரண்டாவது பொறுப்பாக திரு அசோக் அவர்கள் இருந்தார்கள் . பதினைந்து பேராக எட்டு அணிகள் உருவாக்கப்பட்டு கடுமையான பயிற்சி நடைபெற்றது. அப்பயிற்சியை லெப் கேணல் செல்வராசா அவர்கள் வளங்கினார், எங்களின் திட்டம் இது தான் முதலில் பாணு அவர்கள் RPG ஆல் அடித்து சண்டையை ஆரம்பிக்க நாங்கள் அனைவரும் ஆயுதங்களால் ஒரு செறிவான தாக்குதலை நடத்துவோம்.
அந்த சத்தத்தில் இராணுவம் திகைத்து நிக்கும் வேளையில் 5/07/1987அன்று இரவு மில்லர் சக்கை வண்டியை உள்ளே கொண்டு போய் வெடிப்பார். அவர் வெடித்ததும் அடுத்து ராசிக் இரண்டாவது வாகனத்தை செலுத்தி வெடிப்பார். இது இப்படி நடக்க சுக்குளா அவர்களின் அணி ஒரு பக்கமும்; விசு அவர்களின் அணி ஒருபக்கமும் அடித்துக்கொண்டு உள்ளே இறங்குவார்கள்.
எங்களின் திட்டமாக இருந்தது
வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்படும் ,அதே நேரம் ஆறு மணிக்கு முன்னரே இதைச் செய்ய வேண்டும், காரணம் இரவு நேரங்களில் புலிகள் தாக்கலாம் என்ற அச்சத்தால் இராணுவம் இரவு நேரங்களில் மக்களின் பாழடைந்த வீடுகளிலே தங்கச் சென்று விடுவார்கள், எனவே அனைத்து விடயங்களைளிலும் கவனம் எடுத்து இந்தத் தாக்குலைச் செய்ய வேண்டும், இல்லையெனில் அது வெற்றி அழிக்காது இதுவே மிக முக்கியமான விடயமாகவிருந்தது,
திட்டமிட்டாப்போல் சண்டை ஆரம்பம் ஆனது. பிரிகேடியர் பானு அவர்கள் R.p.G ஆல் அடிக்க நாங்கள் எல்லோரும் காம்மை நோக்கிச் சரமாரியாகச் சுட்டோம். எதிர்பாராத தாக்குதலை கண்ட இராணுவத்தினர் அமைதியாக இருந்தனர். கப்டன் மில்லர் அவர்கள் சக்கை வாகனத்தை வேகமாகச் செலுத்தி உள்ளே வெடித்தார். ஆனால் நாங்கள் நினைத்த இடத்திற்கு அது போகவில்லை. அதனால் எங்களை சிறிது தூரம் பின்னால் வருமாறு கட்டளை வந்தது. தொடர்ந்து இரண்டாவது வாகனத்தை போராளி ராசிக் அவர்கள் உள்ளே வேகமாக செலுத்திச் சென்றார். ஆனால் அது இடையில் பிரண்டு விட்டது வாகனம் பிரண்டதும் அவர் பின்னால் வந்து விட்டார். இருந்தும் அவ்வாகனம் வெடித்துச் சிதறியது. பின்னர் நாங்கள் எல்லோரும் அடித்துக்கொண்டு உள்ளே சென்றோம்.
அனைத்து இராணுவத்திரின் உடல்களையும் பெரும் தொகையான ஆயுதங்களையும் எடுத்தோம். நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினரின் உடல்களை நாங்கள் எடுத்தோம். சண்டை மிகவும் வெற்றியாக அமைந்தது. மில்லர் என்ற மாபெரும் வீரனை இழந்த சோகத்தில் நாம் மீண்டும் எமது இடங்களிற்குச் சென்றோம்.பின்வருமாறு தூயாமணி தெரிவித்தார்,
இதில் வரும் பேர்களில் போராளிகளான பிரபா, தூயாமணி மற்றும் சுக்குளா இவர்கள் இப் புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடு இருந்துள்ளனர், ஏனையவர்கள் அனைவரும் தாய் மண்ணின் விடுதலைக்காக தங்களை அற்பணித்துள்ளனர்,
இனி மில்லறைப்பற்றி சுருக்குமாகப் பார்ப்போம் கப்டன் மில்லர் என அழைக்கப்படும் வல்லிபுரம் வசந்தன் (01/01 /1966 அன்று பிறந்தார்
யாழ்ப்பாணம், துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட வசந்தனுடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஆவர். தந்தை பருத்தித்துறை, இலங்கை வங்கிக் கிளையில் பணி புரிந்தவர். வசந்தன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றார். அதே காலப்பகுதியில் வல்வெட்டித்துறை சேர்ந்த நண்பர்களோடு பழகி வந்தமையால்1985 ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டார் மில்லர்
அவரை விடுதலை புலிகள் இந்தியாவில் நடந்த தங்களின் ஒன்பதாவது பயிற்சி முகாமிற்கு அனுப்பினார்கள் அங்கே சென்று ஆரம்பப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த மில்லர் பற்றி
அவரோடு பயிற்சி எடுத்த போராளி காசன் குறிப்பிடுகையில் மில்லர் அதிகமாகக் கதைக்க மாட்டான், என்னோடுதான் சேர்ந்து பழகுவான் பயிற்சி முடிந்ததும் விடுமுறையில் விடுவார்களா? என்று என்னிடம் கேட்டான் அதற்கு நான் ஓம் என்றேன் விடுமுறையில் சென்றபின்தான் நான் சண்டைக்குப் போவேன் என்றான் அதன் பொருள் சாவதற்கு முன்னர் அம்மாவை பார்க்க வேண்டும் என்பதே ஆகும்
அது போல் பயிற்கு முடிந்ததும் மில்லர் தமிழீழம் அனுப்பப்பட்டான் அவன் விரும்பியதுபோல் விடுமுறையில் அனுப்பப்பட்டான் விடுமுறை முடிந்தது மன்னார் மாவட்டம் அனுப்பப்பட்டான் அக்காலப்பகுதியில் பிரபா விக்ரர் அவர்களின் ஆழுகையின் கீழ் நின்று பல சண்டைகளை பிடித்துள்ளான்
தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் அவர்களோடு இணைந்து
பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.
இறுதியாக அடம்பன் சண்டையில் பங்கு பற்றி மிகத்திறமையாகச் செயல்பட்ட மில்லர் அது முடிந்ததும் யாழ்பாணம் வந்தான், வந்ததும் கிட்டு அண்ணையிடம் அனுமதி கேட்டு மீண்டும் விடுமுறையில் சென்றான்
விடுமுறை முடிந்து வந்தபின் பிரபாவின் அணியினரோடு சேர்ந்து வடமராச்சியை பிடிக்க விடாமல் சிங்களப்படைகளிற்கு எதிராக பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான்.
வடமராட்சி யில் நடந்த சண்டையில் 60ற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதை நேரடியாகப் பார்த்தபோதும் மில்லறின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது நெல்லியடியை தாக்குவதற்கான மாதிரிப்பயிற்சியை ஆரம்பித்ததும் தான் தற்கொலைத் தாக்குதல் மூலம் அவ் முகாமை அழிக்க விரும்புவதாகவும் தனக்கு அனுமதி தருமாறு கேட்டு பிரபா ஊடாக தகவலை தலைவருக்குத் தெரியப்படுத்தியிருந்தான்,
தலைவரும் எவ்விதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை அதைப் பார்த்ததும் அமைதியாகயிருந்தார், சண்டை ஆரம்பிக்க ஒரு சில நாட்களிற்கு முன் பிரபாவைக் கூப்பிட்ட்ட தலைவர் மில்லலர சக்கை அடைந்த வாகனம் ஒன்றை தயார்படுத்தி அதற்கு மில்லரையே விடுமாறு தெரியப்படுத்தினார்,
அவர் சொன்னது போல் பிரபாவும் தயார்படுத்திக் கொடுத்தார்
அவன் கரும்புலியாக செல்வதற்கு முன்னர் மூன்றாவது முறையும் அவன் விடுமுறையில் சென்று தாயோடு கதைத்த பின்னரே அவ்வேலையை செய்து தனது மாநிட வாழ்க்கையை முடித்துக் கொண்டான் இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் அவ் முகாமை இலகுவாகத் தாக்கி அழிப்பதற்காகத் தானே முதல் கரும்புலியாச் சென்று முகாமைத் தாக்கி அழித்தது மட்டும் அல்லாமல் கரும்புலி மறவர்களிற்கு வழிகாட்டியாகவும் இவரே இருந்தார் .இவரின் வழியை பின்தொடர்ந்து 500 றிற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கரும்புலியாகச் சென்று தங்களின் உயிரை தாய் மண்ணிக்காக அற்பணித்துள்ளார்கள்,
மில்லறின் அம்மா மில்லறைப் போன்று அவரும் ஒரு துணிச்சலான தாய் ஆவார், யுத்தம் நடந்த காலத்தில் ஊடங்களிற்குப் பேட்டி அழித்த அவர் எனது மகன் கரும்புலியாக சென்றதை எண்ணி நான் பெருமை அடைகின்றேன், எத்தனை குமரு குஞ்சுகளை கெடுத்து கொலை செய்த கொடிபவர்களை அழித்து எனது பிள்ளை சென்று விட்டான், யார் என்னைக் கண்டாலும் மில்லர் அம்மா என மக்கள் பெருமையாக என்னை அழைப்பது அதுவே போதும் என துணிச்சலாகப்பேட்டி கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அடுத்து இலங்கை இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி விரிவாகப் பார்ப்போம்
தொடரும் அன்புடன் ஈழமதி