யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று  (8) மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அச்சுவேலியில் பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் மாணவியின் மரணத்தால் பெரும் சோகம் ; அதிர்ச்சி கொடுத்த உடற்கூற்று பரிசோதனை | Jaffna Girl S Death Brings Grief

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்தனர்.

வைத்தியசாலையில் சேர்ப்பித்து சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார். தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments