பதுளையில் வயதான ஒரு பெண்ணுக்கு கிடைத்த லொட்டரி சீட்டு பணத்திலிருந்து ரூ. 96,298,759.58 தொகையை மோசடியாகப் பெற்றதற்காக சீட்டிழுப்பு விற்பனை முகவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒரு பெண்ணும் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வயயோதிப பெண்ணுக்கு கிடைத்த லொட்டரி பணத்தில் மோசடி | Elderly Woman Cheated On Lottery Money

செப்டம்பர் 18, 2024 அன்று, ஹப்புத்தளை பகுதியில் உள்ள ஒரு பெண், தொகுதி எண் 1630 இன் கீழ் தன நிதான லொட்டரி சீட்டில் மேற்படி பரிசை வென்றுள்ளார்.

மேலும் சந்தேகத்திற்குரிய லொட்டரி விற்பனை முகவரும் மற்ற இரண்டு சந்தேக நபர்களும் மேற்படி தொகையை மோசடியாகப் பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் இரண்டு சிறப்பு புலனாய்வுப் பிரிவுகளால் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments