செம்மணி மனித புதைகுழிக்கு முழுமையான நீதியை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது யாழ். வருகையின்போது உறுதிமொழி வழங்கியுள்ளார்.
தமிழர் மனங்களை மிகப்பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ள இந்த செம்மணி படுகொலைக்கு பின்னால் எவர் உள்ளார்கள் என்ற விடயம் அனைவருக்கும் குறிப்பாக தமிழ் மக்கள் அறிந்த பரகசியம்.
இவ்வாறு இந்த செம்மணி படுகொலைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்களா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.
அத்துடன் இந்தோனேசியாவில் பாதாள உலகத்தைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பின்னால் மறைந்திருக்கும் கரங்கள் யாருடையவை என்ற விடயமும் அம்பலமாகப்போகின்றது.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழ் இன்றைய அதிர்வு…