பிரித்தானியாவில் இலங்கைத் தாய் ஒருவர் தனது புகலிடக் கோரல் வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டில் வெற்றி பெற்றுள்ளார்.

2021ஆம் ஆண்டு அவர் பிரித்தானியாவுக்கு வந்து, தாம் தனது குடும்பத்திற்கு தமிழீழ விடுதலை புலிகளுடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கையில் கைது செய்யப்படலாம் தெரிவித்தார்.

மேலும், அவரது மோசமான மனநலம் அவரைப் பயணம் செய்யத் தகுதியற்றவராக்குகிறது என்றும் அவர் வாதிட்டார்.

தீர்ப்பாயம் 

முந்தைய தீர்ப்பாயம் அவரது கூற்றை நிராகரித்தது. அவர் நம்பகமானவர் அல்ல என்றும், அவரது நான்கு மகள்களில் ஒருவருடன் அவர் பயணம் செய்யலாம் என்றும் கூறியது.

பிரித்தானியாவில் நடந்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த வெற்றி | Sri Lankan Woman Court Case Britian

ஆனால், மருத்துவ அறிக்கை அவருக்கு கடுமையான மனச்சோர்வு, பதற்றம் மற்றும் தவறான முடிவெடுக்கும் அபாயம் இருப்பதாகக் காட்டியது.

முதல் தீர்ப்பாயம் இந்த ஆதாரத்தை முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை என்று தீர்ப்பளித்த மேல் நிலை தீர்ப்பாயத்தின் நீதிபதி இந்த வழக்கை மீண்டும் முழுமையாக விசாரிக்க அனுமதித்தார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments