மட்டக்களப்பு- ஜீவபுரத்தில் தொடருந்துடன் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று(6) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில், சந்திவெளி ஜீவநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வரதராஜா கிருஷ்ணகாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு 10.00 மணிக்கு மது போதையில் தண்டவாளத்தில் தலையினை வைத்து நித்திரையில் இருந்துள்ளார்.

மட்டக்களப்பில் தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு | Man Dies After Being Hit By Train In Batti

இந்தநிலையில் கடுகதி தொடருந்து மோதியதில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சடலத்தை மீட்டு ஏறாவூர் தொடருந்து நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு தொடருந்து சாரதி பிரயாணத்தை மேற்கோண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments