யாழில் (Jaffna) தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக, திலீபன் தியாக தீபமாக ” எனும் தொனிப்பொருளுடன் இந்த ஆவணக் காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

பெற்றோர்கள் 

மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் நல்லூரில் திறக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம்! | Thileepan Memorial Archive Opens In Nallur

தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வரலாற்று ஆவணக் காட்சியகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

திருவுருவச் சிலை 

ஆவண காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை மூத்த போராளி பஷீர் காக்காவால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ் நல்லூரில் திறக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம்! | Thileepan Memorial Archive Opens In Nallur

தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் மற்றும் பத்திரிகை ஆவணங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments