பளை – இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி பலிகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று (13) இடம் பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலுடன் கடமையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி மோதுண்டுள்ளது.

சம்பவத்தில் பளை – வண்ணாங்கேணி வடக்கு பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
சடலம் கொடிகாமம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவ தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.