கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் வேடம் தரித்திருந்த ஆண் ஒருவரை, பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதோடு, சம்பவம் குறித்து உண்மையை உறுதிப்படுத்திய பின், பிரதேச மக்கள் உரிய முறையில் சந்தேகநபரை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் குறித்த நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
