புலம்பெயர்நாட்டிலுள்ளவர்களை வெளியில் கூறமுடியாத வலையில் சிக்கவைத்து அவர்கயிடமிருந்து போதைப்பொருளுக்கு அடிமையான கேங்ஸ்டர்கள் பணம் பறிக்கின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பெண்களையும், குறிப்பாக பாடசாலை மாணவிகளை பயன்படுத்தி இந்த வேலைகள் இடம்பெறுகின்றன.
பெண்கள் தவறான முடிவெடுப்பதற்கு பின்னர் இவ்வாறான காரணங்கள் இருக்கின்றது.
இந்த மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து எதிர்காலத்தில் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி…

