யாழில் பேருந்து நிலையத்தில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாவை கலட்டி, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை என்ற முகவரியைச் சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாசகம்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் அப்பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக யாசகம் பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில், நிலையில் நேற்று முன் தினம் (06) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
