அவ்வேளை இரண்டு தீவிரவாதிகள் உயர்ந்த கட்டிடத்தில் இருந்து மக்களை நோக்கி சரமாரியாகச் சுட்டதில் சுமார் 4 குழந்ததைகள் உட்பட 29 பேர் காயம் அடைந்தும் 16 பேர் கொல்லப்பட்டனர்
நேற்றைய தினம் குறித்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக குறித்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 12 பேர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அவர்களில் துப்பாக்கிதாரி ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மிக மோசமாக காயமநை்த நிலையில் நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்
துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றையவர் காவல்துறையின் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களைக் காட்டும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்த தாக்குதல் “சிட்னியின் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.யிருந்தாலும் இது உலகில் வாழும் கிறிஸ்தவ மக்கள் மீதான முஸ்ஸிலிம் தீவிரவாதிகளின் எதிர்காலத்தில் தொடர்ந்து நடக்கும் தாக்குதலாக கருதலாம் என புத்தி ஜீவிகள் கருதுகின்றனர்?
