தையிட்டி போராட்டத்தின் போது வேலன்சுவாமிகளுக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மக்களுடைய காணிகளை மக்களுக்கே கொடுக்க வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் தமிழர்கள் ஒன்றிணைந்து பெருமளவான போராட்டங்களை செய்வதன் மூலமே காணிகளை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.
தேர்தல் பிரசாரங்ககளின் பின்னர் வீதிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இராணுவ வைத்தியசாலையொன்றும் கட்டப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் வழக்கு தொடுத்து குறித்த செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன என குறிப்பிட்டார்.
