இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

குறித்த கடிதத்தில், இனப்படுகொலை தொடர்பான சர்வதேச விசாரணைகள் மற்றும் ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு தமிழர் தாயகமான செம்மணியில் ஒரு வெகுஜன புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விடயத்தில் கவனம் செலுத்தியதாக குறித்த குழு தெரிவித்துள்ளது. 

 ரூபியோவுக்கு அனுப்பி வைப்பு 

மேலும், அங்கு குழந்தைகள் உட்பட சுமார் 240 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கண்டுபிடிப்பு இலங்கை அரசு செய்த குற்றங்களுக்கு சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான கோரிக்கைகளை மீண்டும் தூண்டியுள்ளது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈழத்தமிழரை நோக்கி ட்ரம்ப் நிர்வாகத்தின் பார்வை.. ரூபியோவுக்கு அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்! | Us Lawmakers Washington Eelam Tamils Genocide

இந்த முயற்சியை அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஹெர்ப் கோனவே இந்த வாரம் ஒரு பொது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 21, 2026 திகதியிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், “செம்மானியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி குறித்து ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்துகிறது.

போரின் அட்டூழியங்கள்

அந்த கடிதத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது நடந்த அட்டூழியங்களின் வலிமிகுந்த நினைவூட்டல் என விவரிக்கப்பட்டுள்ளது. 

ஈழத்தமிழரை நோக்கி ட்ரம்ப் நிர்வாகத்தின் பார்வை.. ரூபியோவுக்கு அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்! | Us Lawmakers Washington Eelam Tamils Genocide

இலங்கையில் நடந்த போர், பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் மரணம் மற்றும் காணாமல் போதல் உட்பட பரவலான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது என்று அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் குறிப்பிடுகின்றனர்.

போரின் இறுதி மாதங்களைக் குறிப்பிடுகையில், 70,000 முதல் 147,000 வரையிலான தமிழர்கள் கொல்லப்பட்டதாகக் கருதப்படுவதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments