பஹ்ரைன் தலைநகரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வெளியேறுமாறு மனாமாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.
ஈரானிய தாக்குதல்களின் போது கிரவுன் பிளாசா தாக்கப்பட்ட பின்னர் பஹ்ரைன் தலைநகரில் உள்ள ஹோட்டல்கள் சாத்தியமான இலக்குகளாக மாறக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் வெளியான உத்தியோகபூர்வ எக்ஸ் தள பதிவில், “பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று மனாமாவில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டல் தாக்கப்பட்டு காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகளை கண்காணித்து வருகிறது.
பாதுகாப்பு உறுதி..
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு ஹோட்டல்கள் எதிர்கால தாக்குதல்களுக்கு இலக்காக இருக்கலாம் என்றும், அமெரிக்க குடிமக்கள் மனாமாவில் உள்ள ஹோட்டல்களைத் தவிர்க்க ஊக்குவிக்க வேண்டும் என்றும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்.