அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட பெரிய அளவிலான குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராகாச்சி நிராகரித்துள்ளார்.

எங்களுக்கு தற்காப்பு செய்ய உரிமை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

எங்கள் மக்களை பாதுகாக்க வேண்டுமானால் எதை வேண்டுமானாலும் செய்வோம் எனவும் தற்காப்பு செய்வதில் எங்களுக்கு எந்த எல்லையும் இல்லை,” எனவும் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் எச்சரிக்கையை நிராகரித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் | Iran Insists No Limit To Self Defence

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அராகாச்சி இந்தவ விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும், “அமெரிக்கா மேற்கொள்வது தாக்குதல் நடவடிக்கை. ஆனால் நாங்கள் செய்வது தற்காப்பு நடவடிக்கை. இந்த இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது,” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம், அமெரிக்க எச்சரிக்கையை மீறியும் ஈரான் தன்னுடைய பதிலடி நடவடிக்கைகளைத் தொடரும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments