அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த மூன்று நாட்களாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டு போர் நிகழும் என்று பாபா வாங்கா முன்பே கணித்தது தற்போது உண்மையாகிவிட்டதாக கூறப்படுகிறது.

ஒரு பெரிய போர் 

பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பாபா வாங்கா. உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசியாகக் கருதப்படும் இவர் 5079-ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகளைக் கணித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், 2026ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் நிகழக்கூடும் என்றும் அவர் கணித்துள்ளார்.

அதன்படி, 2026ஆம் ஆண்டு என்பது போர் மற்றும் அழிவின் ஆண்டு என்று அவர் கணித்திருந்தார். உலகின் கிழக்குப் பகுதியில் ஒரு பெரிய போர் வெடிக்கப் போகிறது என்றும், இது முழு உலகிற்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் பாபா வாங்கா ஏற்கனவே கணித்திருந்தாக தகவல்கள் வெளியாகின.

மார்ச் முதல் ஏப்ரல் 2026இல் ஒரு பயங்கரமான போர் வெடிக்கக்கூடும் என்று பாபா வாங்கா ஒரு வருடம் முன்பே கணித்திருந்தார். இதில், இரண்டு சக்திவாய்ந்த நாடுகள் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கக்கூடும் என்று அவர் கூறியிருந்தார்.

ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேலுக்கும் இடையே இப்போது போர் போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, பாபா வாங்காவின் கணிப்பு நிறைவேறியதாக நம்பப்படுகிறது. 

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004-ல் ஏற்பட்ட சுனாமி, ஒபாமா அமெரிக்க அதிபரானது ஆகியவற்றை, பாபா வாங்கா முன்கூட்டியே கணித்து கூறியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments