அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அடுத்த உச்ச தலைவரைத் தேர்வு செய்யும் செயல்முறையில் தாம் பங்கேற்க விரும்புவதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சனிக்கிழமை Air Force One விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுடன் மீண்டும் மீண்டும் மோதல்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படக் கூடாது எனக் கூறியுள்ளார்.

அடுத்த தலைவர்

“ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் அல்லது பத்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை மீண்டும் வந்து இதையே செய்ய வேண்டிய நிலை வேண்டாம். அவர்களின் நாட்டை போர் நிலைக்கு இட்டுச் செல்லாத ஒரு தலைவரை நாம் தேர்வு செய்ய விரும்புகிறோம்,” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாகவே இந்த வார தொடக்கத்தில், ஈரானின் அடுத்த தலைவரை நியமிக்கும் செயல்முறையில் தாம் நிச்சயமாக ஈடுபட வேண்டும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

மேலும், ஈரானில் மதத் தலைவராக இருக்கும் ஒருவரும் அடுத்த தலைவராக வருவதற்கு தாம் எதிர்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஈரானின் அரசியல் எதிர்காலம்

இதுகுறித்து அளித்த பேட்டியில், “அந்த நபர் யார் என்பதையே அது பொறுத்தது. நான் மதத் தலைவர்களை விரும்பாதவன் அல்ல. பல மதத் தலைவர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன்; அவர்கள் சிறப்பானவர்கள்,” என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் புதிய உச்ச தலைவரை நியமிக்க ஆவலில் ட்ரம்ப்! மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு | Trump Wants Role In Iran Leader Choice

Image Credit: CityNews Halifax

ட்ரம்பின் இந்த கருத்துகள், ஈரானின் அரசியல் எதிர்காலம் குறித்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments