இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அவரது காயங்களின் தீவிரம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையே தற்போதைய இந்தப் போரை ஈரானிய ஊடகங்கள் ரமலான் போர் எனக் குறிப்பிடுவதாகவும், ‘ஜன்பாஸ்’ என மொஜ்தபா கமேனியை அழைப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவெளியில் தோன்றவில்லை 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் ஈரானின் அடிப்படை அமைப்பை மொத்தமாக முடக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் காயம்...! இஸ்ரேல் ஊடகம் வெளியிட்ட தகவல் | Khameneis Son Injured In Israeli Attack

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில், கமேனியுடன் சேர்ந்து, அவரது மனைவி, மகள், மருமகன், மருமகள் மற்றும் குறைந்தது ஒரு பேரக்குழந்தை உட்பட பல குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நிலையில் தற்போது அவரது மகனுக்கு குறிவைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் உச்ச தலைவர் என அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை என்பதால் காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments