அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோ கென்ட் பதவி விலகியதை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி வரவேற்றுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஜோ கென்ட்டின் பதவி விலகல் கடிதத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
சர்வதேச சமூகம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், ஈரானுக்கு எதிரான போர் அநீதியானது என ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் அதிகரித்து வரும் குரல்களுக்கு இது ஒரு சான்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களும் இதேபோன்ற நிலைப்பாட்டினைப் பின்பற்ற வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் ஏற்படப்போகும் இத்தகைய மாற்றங்களின் அலை இப்போதுதான் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது செல்வம், நம்பிக்கை அல்லது இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.
தமது எதிரி ஒருவரே என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர், இந்தப் போர் நடவடிக்கைகளுக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு வலுப்பெற்று வருவதாகவும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
