மூடிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தை உலகின் அமைதிக்கு இரு நாடுகளுமே எதிர்ப்பாகத் தொடர்ந்து செயலபடுவது அக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ,அதில் கலந்து கொண்ட பெரும்பாண்மையானவர்கள் இதை உலகின் அமைதிக்கான கருனைக்கொலையாக துணிந்து செய்வதின் ஊடக உலகத்தை அமைதியான நாடாக மாற்ற முடியும் என தெரிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்,ஈரான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க அரசாங்கம் மிக முக்கியமான கலந்துரையாடல்களை மிக இரகசியமான முறையில் ஆரம்பித்து விட்டதாக அரசியல் விமர்சகர் டக்கர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த விடயத்திலே டொனால்ட் ட்ரம்ப் பிடிவாதத்தோடும், ஈடுபாட்டோடும் இருப்பதனை தங்களால் ஊகிக்க முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கின் அனைத்து இடங்களுமே ஈரானுக்கு ஆபத்தாக மாறிக் கொண்டு இருக்கின்றது.
இந்தநிலையிலே, ஈரான் போரை அருவருப்பானது மற்றும் தீமையானது என அவர் கடுமையாக விமர்சித்து இருக்கின்றார்.
மேலும், போர் என்பது ஒரு தேவையில்லாத விடயம் என அவர் நேரடியான ட்ரம்ப் நிர்வாகத்தோடு முரண்பட்டுக் கொண்டு இருக்கின்றார்.
அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்ல ட்ரம்பின் நட்பு வட்டத்தில் இருக்கக் கூடிய பலரும் இந்தப் போரின் பாதிப்பை உணர்ந்து வெளியேறி இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலை இருப்பதாக கூறப்படுகின்றது.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையே முற்றியுள்ள மோதல், இப்போது உலகத்தையே அச்சுறுத்தும் அணு ஆயுதப் போர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி மையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொள்ளும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) திட்டத்தின் பின்னணி என்ன என்பது குறித்து கழுகுப்பார்வை நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்.
