போர் பதற்றத்துக்கு மத்தியில்  இஸ்ரேலின் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் குறித்து தகவல்களைச் சேகரித்து இஸ்ரேலின் உளவாளிப் பிரிவான மொசாத் அமைப்பிடம் பகிர்ந்ததாக, கௌரௌஷ் கெய்வானி எனும் நபர் கைதுசெய்யப்பட்டார்.

6 ஐரோப்பிய நாடுகளில் உளவாளிக்கான பயிற்சி

கடந்த 2025 ஜூன் மாதம் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் நடைபெற்ற 12 நாள் போரின்போது கௌரௌஷ் கெய்வானி சிக்கியதாகவும், அவர் 6 ஐரோப்பிய நாடுகளில் உளவாளிக்கான பயிற்சிகளைப் பெற்றதாகவும் றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கௌரௌஷ் கெய்வானியின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, ஈரானின் அதிகாரிகள் இன்று (18) அறிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments