சுவீடன் நாட்டின் பாதுகாப்பு சேவை அமைப்பு (SAPO), தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளே முதன்மையான அச்சுறுத்தல்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் உலகளாவிய பதற்றத்தை அதிகரித்துள்ள சூழலில், இந்த நாடுகள் சுவீடனின் உள்நாட்டு விவகாரங்களில் உளவு பார்ப்பது, சைபர் தாக்குதல்கள் நடத்துவது மற்றும் அரசியல் செல்வாக்கைச் செலுத்த முயல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுவீடன் நேட்டோ (NATO) அமைப்பில் இணைந்த பிறகு, இந்த நாடுகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் மிகவும் தீவிரமடைந்துள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

குற்றச்சாட்டு

சுவீடனின் உளவுத்துறை தகவல்களின்படி, ரஷ்யா தனது இராணுவ இரகசியங்களைத் திருட முயல்வதாகவும், சீனா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத் தரவுகளைக் குறிவைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தனது நாட்டு அதிருப்தியாளர்களை சுவீடனில் கண்காணிப்பதோடு, தற்போதைய போர்ச் சூழலில் ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாகவும் SAPO தலைவர் தெரிவித்துள்ளார்.

சுவீடனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் மீது உளவுத்துறை பகிரங்கக் குற்றச்சாட்டு | Threat To Sweden S Security China Russia

இந்த நாடுகளின் செயல்பாடுகள் சுவீடனின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் இறையாண்மைக்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, முக்கியமான உள்கட்டமைப்புகள் மற்றும் அரசுத் தரவுகளைப் பாதுகாப்பதில் சுவீடன் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments