உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்த கேள்விகள் அரசாங்கங்கள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் இன்றும் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன.

இதன் தாக்கங்கள் சர்வதேச அளவில் எதிரொலித்திருந்தாலும், அதற்கான தீர்ப்பைத் தேடும் முயற்சி நீதியை பெற்றுத்தருவதாக கூறிய அநுர ஆட்சியிலும் இன்றளவும் நிறைவேறாமல் உள்ளது.

இந்த நிலையே இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திற்கான நீதித் தேடலிலும் காணப்படுகிறது.

தமிழர்கள் மீதான இனவழிப்பு செயற்பாடுகள் என சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்படும் பிரேரணைகளும் காலப்போக்கில் மறைக்கப்படுகின்றன.

இவ்வாறான கேள்விகளுக்கு மத்தியில் ஐபிசி தமிழ் ஊடகத்தின் நேர்காணலில் இணைந்திருந்த முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி பல விளக்கங்களை வழங்கியிருந்தார்.

குறிப்பாக காணாமலாக்கப்பட்டோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பில், தென் இந்தியாவுக்கான இலங்கை பிரதியுயர்ஸ்தானிகராக செயல்பட்ட வடிவேல் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து அதிக முன்னேற்றங்களைப் பெற்றதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய அரசாங்கம் அந்த விடயத்தை புறக்கணித்து வருவதாக அவர் தொடர்ந்து வரும் காணொளியில் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments