- இரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 40 நாட்கள் நீடித்த போரின் விளைவாக, ஓர் ஆச்சரியமளிக்கும் விஷயம் வெளிப்பட்டுள்ளது.
அதாவது, இரானின் மிகச்சிறந்த பலம் அதன் அணுசக்தித் திறனில் இல்லை, மாறாக ஹோர்மூஸ் நீரிணை போக்குவரத்தை துண்டிப்பதில்தான் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
தொடக்கத்திலிருந்தே, முக்கிய இடங்கள் மற்றும் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கடுமையான குண்டுவீச்சுகள் மூலம் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியாகவே இந்தப் போர் பரவலாகப் பார்க்கப்பட்டது.
இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியது.
ஆனால், மோதல் தீவிரமடைந்ததால், பாரசீக வளைகுடாவை உலகச் சந்தைகளுடன் இணைக்கும் குறுகிய நீர்வழிப் பாதையில் கடல்சார் போக்குவரத்தைத் துண்டிப்பதில் இரான் தனது கவனத்தைத் திருப்பியது.
இந்த நடவடிக்கை, ஹோர்மூஸ் நீரிணை வழியாகத் தடையின்றி எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை நம்பியிருக்கும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு உடனடியாகப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது.
வழக்கமான ராணுவ மோதல்களை விட, இந்த முக்கியப் பாதையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அதிக உத்தி ரீதியிலான நன்மையை அளிக்கும் என்பதை இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) அதிகாரிகள் உணர்ந்துள்ளனர்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை அச்சுறுத்துவதன் மூலம், தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய அமெரிக்காவை இரான் கட்டாயப்படுத்தியது.
