ஈரானுடன் ஒரு புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கா மிகவும் நெருக்கமாக உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) முழுமையாக ஒப்படைப்பது உட்பட அமெரிக்காவின் கிட்டத்தட்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் தெஹ்ரான் இணங்கியுள்ளதாக அவர் உரிமை கோரியுள்ளார்.

இது பல வாரங்களாக நிலவி வந்த போர்ப் பதற்றத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

போர்நிறுத்தம் 

ஒருவேளை இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் அதன் கையெழுத்திடும் நிகழ்விற்காகத் தான் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு நேரில் செல்லக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்த அடுத்தகட்ட உயர்மட்டப் பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த ட்ரம்ப், தற்போதைய தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவடையும் ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு முன்னதாகவே இறுதி முடிவு எட்டப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனால் போர்நிறுத்தக் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments