c 788-தொடர்ந்து ஈழத் தமிழர்களை நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் இந்தியா தலைவர்கள்?இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த தமிழ் கட்சிகள்இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 மலையக தமிழ்க் கட்சிகளின் சார்பில் கலந்து கொண்டவர்கள்

அதேநேரம் மலையக தமிழ்க் கட்சிகளின் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் டித்வா புயலுக்கு பிந்தைய மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிப் பொதிக்கும், காலப்போக்கில் வழங்கப்பட்ட ஏனைய நிவாரண நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்குத் தமிழ்க் கட்சிகளின் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments