காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்களின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் போன ஆட்களை பதிவு செய்வதற்கான பிராந்திய அலுவலகத்தில் இன்று(24-04-2026) இந்த பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன.
வாக்குமூலங்கள்
குறித்த அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் இதுவரை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை விசாரணை இடம்பெறாதவர்களுக்கான விசாரணைகள் இன்றையதினம் நடைபெற்றுள்ளன.

ஏற்கனவே பதிவுகளை மேற்கொண்டவர்களில் நூறு பேர் வரையில் அழைக்கப்பட்டு இன்று காலை முதல் அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


