ஈரானின் அண்மைய அமைதித் திட்டத்திற்கு அமெரிக்காவிடமிருந்து பதில் கிடைத்துள்ளதாக ஈரானின் அரசு சார்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் ஊடாக வழங்கப்பட்ட இந்த பதில் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்குப் பதிலளித்ததை அமெரிக்கா இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. சனிக்கிழமையன்று இது குறித்துப் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,

“ஈரான் எங்களுக்கு அனுப்பியுள்ள திட்டத்தை நான் விரைவில் பரிசீலிப்பேன், ஆனால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை” என்று கூறினார்.

 14 அம்சத் திட்டம்  

ஈரான் முன்வைத்துள்ள 14 அம்சத் திட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் போர்நிறுத்த முன்மொழிவுக்கு ட்ரம்பின் பதில்.. வெளியான பரபரப்பு தகவல் | Trump Response To Iran Ceasefire Proposal

ஈரான் எல்லைகளுக்கு அருகிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல்.

ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருதல்.

லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல் உட்பட அனைத்துப் பகைமை நடவடிக்கைகளையும் நிறுத்துதல்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே 30 நாட்களுக்குள் ஓர் உடன்படிக்கை எட்டப்பட வேண்டும் என்றும் அந்தத் திட்டம் கோருகிறது.

தற்போதுள்ள போர்நிறுத்தத்தை நீட்டிப்பதை விட, “போரை முடிவுக்குக் கொண்டு வருவதில்” இரு தரப்பும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.

இந்த முன்மொழிவு குறித்து சனிக்கிழமையன்று தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், “கடந்த 47 ஆண்டுகளில் மனிதகுலத்திற்கும் உலகிற்கும் அவர்கள் செய்த செயல்களுக்காக இன்னும் போதுமான விலையை அவர்கள் கொடுக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதே நாளில் புளோரிடாவின் பாம் பீச்சில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் திட்டத்தை தான் இன்னும் விரிவாகப் பார்க்கவில்லை என்றும் கூறினார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments