மூக வலைத்தளங்களில் ஒரு அமைப்பின் இலச்சினைகள் மற்றும் படங்களைப் போட முடியாது அது குறித்த காணொளிகளைப் பதிவேற்ற முடியாது என்ற கசப்பான ஒரு நிலை இருந்தாலும் ஈழத்தமிழர்களின் ஆயுதவழி அரசியல் போராட்டத்தின் முதன்மை இயந்திரம் இன்று மே ஐந்தில் தனது 50 ஆவது ஆண்டு நிறைவைக் கடக்கின்றது அந்த வரலாற்றுப் பதிவை யாரும் நீக்க முடியாது.
ஈழத்தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுக்கப் பல்லாயிரம் உயிர்கள் தியாகம் செய்யப்பட்ட ஒரு வரலாறு இருந்தாலும் பெண்ணுக்குத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சுடுவேன் நாயே என வீரதீர மிரட்டல்களை விடுத்த கிளேடியேற்றர்கள் எல்லாம், தமிழகத்திற்குக் கச்சத்தீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் கொடுத்துவிட்டால் அவர்கள் அதனை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள் என இன்றைய நாளில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முழங்கியதைக் காணும் கொடுமை எல்லாம் இந்த அரைநூற்றாண்டு நினைவு நாளில் தானா வரவேண்டும் ? ஆனால் வந்தது.
இந்த பின்னணியில் தமிழகத் தேர்தல் முடிவு அதிர்வுகள் உள்ளிட்ட விடயங்களைத் தாங்கி வருகிறது ஐபிசி தமிழின் செய்திவீச்சு…