விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக த.வெ.கவின் தலைவர் விஜய் நாளையதினம் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக 108 ஆசனங்களை தவெக பெற்றிருந்தது. இதன்படி, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி இரண்டு முறை ஆளுநரை சந்தித்து விஜய் அனுமதி கோரிய போதிலும் பெரும்பான்மை இல்லாததால் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆட்சியமைப்பதற்கு 118 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில், ஏனைய கட்சிகளுடன் கூட்டணிக்குச் சென்ற நிலையில் விஜய் நாளை காலை 11.00 மணிக்கு பதவியேற்கவுள்ளதுடன், த.வெ.க ஆட்சியமைக்கவுள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சட்ட மன்ற தேர்தலில் பெற்ற 108 என்ற ஆசனங்களுக்கு மேலதிகமாக காங்கிரஸ் 5, கமினியூட்ஸ் கட்சிகள் 4, முஸ்லிம் லீக் கட்சி 2 மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 என மொத்தம் 121 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இரண்டாம் இணைப்பு
காதர் மொஹிதீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயுஎம்எல்) உயர்மட்டக் குழு அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்து, வந்த நிலையில் குறித்த கட்சியும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி தற்போது திருமாவளவனின் கட்சி ஆதரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி தற்போது 117 என இருந்த கட்சியின் ஆதரவு தற்போது 119 ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கும் நகர்வை தமிழக வெற்றி கழகம் பெற்றுள்ளது.
மேலும் விடுதலை சிறுத்ததைகள் கட்சிகளும் இணையும் பட்சத்தில் ஆச பங்கீடு 121 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
தமிழக வெற்றி கழகத்திற்கான ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக இன்று உறுதிப்படுத்தியுள்ளன.
இதன்படி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் 108 தொகுதிகளை பெற்றிருந்த அக்கட்சியின் மொத்த ஆசனம் 117 ஆக உயர்ந்துள்ளது.
த.வெ.கவிற்கான ஆதரவுக்கடிதம் அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமாரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதனை அக்கட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆசனப்பட்டியல்
முன்னதாக 108 என இருந்த ஆசனப்பட்டியல் ஆட்சி அமைக்க போதாத நிலையில் காங்கிரஸ் கட்சி தான் தேர்தலில் பெற்ற 5 ஆசனங்களுடன் ஆதரவுக்கான அறிவிப்பை த.வெ.க வுக்கு வழங்கியிருந்தது.
இருந்தும் 113 என்ற ஆசனம் 118 என்ற ஆட்சி அமைக்கும் ஆசன பங்கீட்டுக்கு போதாத நிலையில் பெரும் இழுப்பறியை த.வெ.க கடந்த இரு தினங்களாக எதிர்கொண்டிருந்தது.

இதன் பின்னணியில் சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் ஆதரவு கோரிவந்திருந்தது.
இந்த கோரிக்கைக்கு அமைய தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை வழங்கிய நிலையில் அக்கட்சியின் ஆசன எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு த.வெ.க தலைவர் விஜய், ஆளுநர் ஆர்லேகரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
