புலம்பெயர் நாட்டில் உள்ள நண்பன் ஏமாற்றியதால், யாழில் , 4 கோடி ரூபாவை   இழந்த இளம் பொறியியலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் வசிக்கும் இளம் பொறியியலாளர் , புலம்பெயர் நாட்டில் உள்ள தனது நண்பனுடன் சேர்ந்து தொடர்மாடிக் குடியிருப்புக்கான பாரிய கட்டட நிர்மாணம் ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.

புலம்பெயர் நண்பன் செய்த துரோகம்; யாழில் இளம் பொறியியலாளர் விபரீத முயற்சி | Betrayal Friend Diaspora Jaffna Engineer Desperate

பெற்றோருக்கு சொந்தமான வீட்டை விற்ற 4 கோடி ரூபா

அதற்காக காணிக் கொள்வனவுக்காக தனது பெற்றோருக்கு சொந்தமான வீட்டை விற்று பணத்தை பெற்று குறித்த காணியை நண்பனின் பணத்துடன் சேர்த்து கொள்வனவு செய்ததாகவும் பல கோடி ரூபா மதிப்பான அந்தக் காணியை வரி விலக்குக்காக நிறுவனம் ஒன்றின் பெயரிலேயே பதிந்து தொடங்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

பொறியியலாளரின் நண்பன் நிறுவனப் பதிவினை தனது பெயருக்கு மாற்றியதாகவும் நம்பிககை காரணமாக பொறியியலாளரால் வைக்கப்பட்ட ஒரு கையெழுத்து குறித்த நிறுவனத்தை நண்பன் தனது பெயரில் மாற்றியதை அறிந்து தான் ஏமாற்றப்பட்டு விட்ட விரக்தியில் பொறியியலாளர் தனது வீட்டு வளவில் தற்கொலை முயற்சிக்கு துணிந்ததாக கூறப்படுகின்றது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments