ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் இருந்து உக்ரைனை பாதுகாக்க தேவையான ஆயுதங்களின் பற்றாக்குறை குறித்து ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கவலை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, மக்களைப் பாதுகாப்பதற்கான தேவையை உற்பத்தித் துறையால் பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பது அபத்தமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

“நவீன உலகில், பாலிஸ்டிக் பயங்கரவாதத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க உண்மையில் தேவைப்படும் அளவிற்கு உற்பத்தி இன்னும் அதிகரிக்கப்படாமல் இருப்பது முற்றிலும் அபத்தமானது,” என்று அவர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைனின் தொழிநுட்ப அறிவு

எனினும், இத்தகைய ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப அறிவு உக்ரைனிடம் ஏற்கனவே உள்ளது என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

ஆயுத பற்றாக்குறையால் திணறும் உக்ரைன்! ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள தகவல் | Zelensky Expressed Regret Over Shortage Of Weapons

Image Credit: Le Monde

Advertisement

அதன்படி, அமெரிக்காவின் பேட்ரியாட் (Patriot) பாதுகாப்பு அமைப்புகளைத் தயாரிப்பதற்கான உரிமங்களை அமெரிக்காவிடமிருந்து உக்ரைன் பெற்றால், தங்களின் உற்பத்தித் திறன் உக்ரைனைப் பாதுகாக்க உதவுவது மட்டுமின்றி, அவை தேவைப்படும் தங்களது கூட்டாளி நாடுகளுக்கு ஆதரவளிக்கவும் போதுமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments