சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் இரு நாடுகளின் தலைவர்களும் தமக்கு இது குறித்து உறுதியளித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் இது குறித்து அவர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பெய்ஜிங்கில் நடைபெற்ற எங்களது சமீபத்திய சந்திப்பின் போது எக்காரணம் கொண்டும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ மாட்டேன் என ஜனாதிபதி ஷி ஜின்பிங் என்னிடம் உறுதியளித்தார்.
மோசமான விளைவுகள்
அதில் சீன நிறுவனங்களும் அடங்கும்.
எங்களது உறவைக் கருத்தில் கொண்டு அவரது வார்த்தையை நான் நம்புகிறேன்
