1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கறுப்பு ஜூலை இனக் கலவரத்தின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொண்ட கொடூரமான படுகொலை சம்பவத்தை அங்கிருந்து உயிர்தப்பிய ஒருவர் விவரித்துள்ளார்.
சிறையில் உள்ள பிற கைதிகள், தமிழ் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த இடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதையும், அதில் குட்டிமணி மற்றும் தங்கத்துரை உள்ளிட்ட 35 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அதன்போது அவர் எடுத்துரைத்துள்ளார்.
இதேவேளை, உயிருக்குப் போராடிய கைதிகள், தங்களுக்கு இருந்த குறைந்தபட்ச வசதிகளைப் பயன்படுத்தி எப்படி தற்காப்பு அரண்களை உருவாக்கினார்கள் என்பதையும், தாக்குதல் நடத்தியவர்களின் பயம் தங்களை எப்படி காப்பாற்றியது என்பதையும் அவர் பின்வருமாறு ஐபிசி தமிழுக்கு விளக்கியுள்ளார்,