ஜம்மு காஷ்மீரின் (jammu kashmir) பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மறுநாள் இந்திய இராணுவ வீரர்(india army) ஒருவரை பாகிஸ்தான் இராணுவம் (pakistan army) பிடித்துச் சென்றுள்ளமை மற்றொரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் – பாகிஸ்தான் எல்லையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எல்லையை தாண்டியதாக தெரிவித்து  கைது

பஞ்சாப் – பாகிஸ்தான் எல்லையை தாண்டியதாக தெரிவித்து இந்திய BSF வீரரை பாகிஸ்தான் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

மற்றுமொரு பதற்றம்: இந்திய இராணுவ வீரரை பிடித்துச் சென்றது பாகிஸ்தான் இராணுவம் | India Bsf Jawan Detained By Pakistan Rangers

இதேவேளை கடந்த 6 நாட்களாக அவரை மீட்பது குறித்த எந்த பேச்சுவார்த்தையும் நடத்த மோடி அரசு முனையவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

உச்சக்கட்ட முறுகல் – ஜம்மு – காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்களுக்கு பூட்டு

அரசு எடுத்த நடவடிக்கை என்ன..!

இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கோரா “BSF கான்ஸ்டபிள் பாகிஸ்தான் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டு 6 நாட்கள் ஆகின்றன.

அவரது குடும்பத்தினர் பதில்களுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அவரை மீட்டுக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *