பாகம் மூன்றின் மூன்றாவது தொடர்

கிட்டு பற்றி தளபதி சொர்ணம் அண்ணை  குறிப்பிடும்போது  1986 நடுப்பகுதியில்  நாங்கள் கொக்குவில்  பகுதியில் இருந்தோம்.  அப்பொழுது கிட்டு அண்ணை வெளியில் இருந்து முகாமிற்கு வரும் போது எவரும் முகாமில் இருக்கவில்லை. எல்லோரும் வெளியே சென்று விட்டார்கள். ஆனால் அங்கே நிறையே ஆயுதங்கள் இருந்தது. எவரும் பாதுகாப்பிற்கு விடப்படவில்லை.இதைப் பார்த்ததும் குழப்பம் அடைந்த கிட்டண்ணை தண்ணீர் கூட குடிக்கவில்லை வெளியே சென்றவர்களை பார்த்துக் கொண்டேயிருந்தார். அவர்கள்  3 சைக்கிளில் 6 பேர் வெளியே இருந்து வந்தார்கள். அவர்கள் வந்ததும் அவர்களிற்கு பேசவோ அடிக்கவோ இல்லை வீட்டிற்குள் சென்று கோடாரியை எடுத்துக் கொண்டு மூன்று சைக்கிளையும்  கொத்தி துண்டுதுண்டாக ஆக்கினார். அத்தோடு அவரின் கோபம் முடிந்து விட்டது.அன்றில் இருந்து 24 மணித்தியாலமும்   அம்  முகாமைப் பாதுகாக்க போராளிகள் காவல் கடமையில் இருப்பார்கள். என தளபதி சொர்ணம் குறிப்பிட்டார்.தளபதி கிட்டு வாயால் சொல்லாமல் செயலால் செய்து காட்டி அவர்களின் மனங்களை மாற்றுவார்.

ரெலோ சண்டையில் பிடிபட்ட சில உறுப்பினர்கள் கந்தன் கருனன் முகாமில் அடைத்து வைக்கப்பட்டார்கள் என முன்னர் குறிப்பிட்டேன் அவர்களிற்கு என்ன நடந்தது என விரிவாகப்பார்ப்போம்


இது இப்டி இருக்க மூத்த உறுப்பினர் அருணா கைது பரிமாற்றத்தின் போது அவரை எடுத்த கிட்டு அண்ணை “கந்தன் கருணை”ஜெயில் முகாமிற்குப் பொறுப்பாக விட்டார். அங்கே முன்னர் கைது செயப்பட்ட ரெலோ, மற்றும் ஈபி. ஆர். எல்.எப் உறுப்பினர்களும் இருந்தார்கள்.  அவர்களிற்கு உணவு கொடுப்பதற்கு மூன்று போராளிகளும் வெளிப் பாதுகாப்பிற்கு சில குறிப்பிட்ட போராளிகளும் விடப்பட்டு இருந்தனர்.

,30/03/1987ம் ஆண்டு  தளபதி கிட்டு அண்ணை சென்ற வாகனத்திற்கு  கைக்குண்டு எறிகின்றார்கள் மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் . அதில் கிட்டு அண்ணையின் கால்தூண்டிக்கப்பட்டது. ஆனால் கிட்டு அண்ணை மீதும் தலைவர் மீதும் அதிக பாசம் கொண்டவர் அருணா அண்ணை.
இச்செய்தியை அறிந்து கடுமையான கோபமான மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறினார் அருணா அண்ணை. மிகவும் மனநிலை பாதிக்கப் பட்டவராகச்  சென்ற அருணா அண்ணை அவர் சென்ற நேரம் அத் தடுப்பு முகாமில் சுமார் 35 ஈபி. ஆர் .எல் .எப் மற்றும் ரெலோ உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.
இவர் போகும் நேரம் எமது போராளிகள் மூவர் இரவு உணவு    அவர்களுக்கு பரிமாறிக்   கொண்டு இருந்தார்கள்.  திடீர் என்று இவர் போனதும் றைவுளை எடுத்து சுடத்தொடங்கினார்; அதில் ஈபி .ஆர் .எல்.எப் ரெலோ என மொத்தம் 13 உறுப்பினர்களும் உணவு பரிமாறிக் கொண்டிருந்த எமது உறுப்பினர்கள் 3என அந்தத் துன்பியல் சம்பவத்தில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். ஐந்து உறுப்பினர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

அதில் அருணா அண்ணையின் ஆயுதத்தைப் பறிக்கும் போது எமது உறுப்பினர் ஒருவரும் படுகாயம் அடைந்தார் . இதை அறிந்த தலைவர்  உடனே அருணா  அண்ணையை விசாரிக்குமாறு கிட்டு அண்ணைக்கு கட்டளை வழங்கினார்.

 விசாரணையை மேற்கொண்டபோது அருணா அண்ணை சொன்ன விடயம் அந்நேரம் என்ன நடந்தது என்று எனக்கே தெரியாது, என்னை மன்னிக்க முடிந்தால் மன்னிக்கட்டாம் இல்லை எனில் சுட்டுக் கொல்லுமாறு தலைவரிடம் சொல்லுங்கோ..! என அருணா அவர்கள் கிட்டு அண்ணையிடம் சொன்னார், சொன்னார். இத்தகவல் கிட்டண்ணையூடாக தலைவருக்கு அனுப்பப்பட்டது.
அவரை வீட்டிற்குச்சென்று  பொது வாழ்க்கையில் ஈடுபடுமாறும்;  இல்லை அவர் இயக்கத்தில் இருக்க விரும்பினால் அவர் வீரச்சாவு அடையும்போது அவரை மாவீரர் பட்டியலில் இணைக்கமாட்டேன்! என்பதை அவருக்குச் சொல்லுமாறு  தலைவர் கிட்டு அண்ணைக்கு செய்தி அனுப்பினார். 

 அச்செய்தி அருணா அண்ணைக்குச் சொல்லப்பட்டது. அச்செய்தியை அறிந்ததும், 1988ம் ஆண்டு யாழில் நின்ற அனைத்துப் பேராளிகளையும் வன்னிக்கு வருமாறு இயக்கம் தெரிவித்த போதும் அருணா அண்ணை மட்டும் அங்கே சென்று தலைவரைப்  பார்க்க விரும்பவில்லை. தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் நின்று இந்தியா இராணுவத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
அக்காலத்தில் இந்தியா இராணுவத்தின் சுற்றிவளைப்பின்போது சில குறிப்பிட்ட  பொது மக்களோடு அருணா அண்ணையும் இந்தியா இராணுவத்தால் கைது செய்ப்பட்டார் . அவ்வேளை அனைவரையும் முட்டுக்காலில் வைத்தது இந்தியா இராணுவம், திடீரென அருணா அண்ணை எழும்பி முற்றுகையை உடைத்துக் கொண்டு மதிலால் பாய்ந்து ஓடும்போது இந்தியா இராணுவம் சுட்டு அருணா அண்ணை அவ்விடத்திலே கொல்லப்பட்டார்.


அருணா விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய உறுப்பினர் ஆவார். சீலன், ஆனந் இருவரையும் எதிரியிடம் உயிருடன் பிடிபடாமல் இருவரையும் சுட்டு விட்டு அவர்களின் ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு பாதுகாத்தது, மட்டும் அல்லாமல் மட்டு அம்பாறைப் பொறுப்பாளராக இருந்து கணிசமான போராளிகளை கிழக்கு மாகாணத்தில் இணைத்தவர்.   திருநெல்வேலித்தாக்குதல் உட்பட அனைத்து தாக்குதலிலும் பங்குபற்றிய ஒரு முக்கியதளபதி ஆவார். தலைவர் சொன்னது போல் அவரை மாவீரர் பட்டியலில் எடுக்கவும் இல்லை போராளிகள் கூட அவர் தொடர்பாக ஒரு வரலாறுகளையும்  எழுத வில்லை. அனைவரும் தலைவரின் கட்டளையைப் பின்பற்றினார்கள்.அவரின் மனநிலை பாதிக்கப்பட்டமையால் எமது மூன்று  போராளிகள் உட்பட சில சகோதரர்களையும் இழக்க  வேண்டியிருந்தது. அமெரிக்காவில்  பல தடவை இது நடத்தாலும் எமது விடுதலைப் போராட்டத்தில் ஒரு தடவை  நடந்தாலும் இதற்காக மிகவும் கவலை அடைகின்றோம்.

14/02/1987 பொன்னம்மான் வீரச்சாவு
யாழ்பாணம் நாவக்குழியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு கிட்டுவும்,  அவர்கள் திட்டமிட்டார். அத்தாக்குதலை செய்வதற்கு பொன்னம்மான் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

 

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்.  அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயர நிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.

எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

1983ம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையில் பயிற்சி எடுத்துக் கொண்டு அதற்குப் பொறுப்பாகவும் இருந்தார் பொன்னம்மான்.  பயிற்சியின் போதே சகவீரர்களையும் எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கி எடுத்தார் பொன்னம்மான்.


 இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்ரர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் பயிற்சி எடுத்தார்கள் பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் குறிப்பாக இந்தியாவில் நடந்த பயிற்சி முகாம்களான 01 மற்றும் 02 இதை இந்தியா மத்திய அரசு வழங்கியது அதில் பத்தாவது பயிற்சி முகாம்ககள்வரை விடுதலைப்புலிகளே தங்களின் சொந்தப் பணத்தில் நடத்தினார்கள் ,அப்பயிற்சி முகாம்களை தலைமை தாங்கி நடாத்தியவர் பொன்னம்மான் என்பதும் குறிப்பிடத்தக்கது தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை உருவாக்கினார் .

உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.




வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் உருவாக்கினார்.  போராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார்.
 இந்தியாவில் 2000ற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார்.பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை.அப்பொழுது யாழ் மாவட்டத் தளபதியாகக் தளபதி கிட்டு இருந்தார், அக்கால பகுதியில் சிங்கள இராணுவத்தினர் முகாம்களிற்கு உள்ளே இருந்தவாறு மக்கள் குடியிருப்பை நோக்கி  தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்த காலம் அது நாவற் குழி முகாமில் இருந்து அரியாலை மிக நெருங்கிய தூரத்தில் இருந்தது, அன்று அரியாலை  கிராமத்தில் திருமண நிகழ்வு ஒன்று நடந்தது, மாப்பிள்ளையும்  பெண்ணும் மோதிரம் மாத்திக் கொண்டிருந்த வேளை…!



நாவற்குழி முகாமில் இருந்த  இராணுவத்தினர் 60 mm மோட்டார் எறிகணையை அக்கிராமத்தை நோக்கி வீசினார்கள்.  அச் செல் அவ் மணவறை வீட்டிற்கு மேலே விழுந்து வெடித்தது. ஸ்தலத்திலே மாப்பிள்ளையும் பெண்ணும் சாவடைந்தனர். மேலும் பல மக்கள் காயம் அடைத்தார்கள்.  இச்செய்தி கிட்டு அண்ணைக்குப் போனது ,செய்தியைக் கேட்டதும் கிட்டு அண்ணை கடுமையாகக் கோபம் அடைந்ததோடு மட்டும் அல்லாமல் அம் முகாமை அழிக்குமாறு பொன்னம்மானுக்குக் கட்டளை வழங்கினார். அப்பொழுது  யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார்.இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கு மேலாக ஒரே வெளிப் பிரதேச வெட்டை வெளி.  சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது.இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியது  எமது  வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களைப் பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உட்புகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.


தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி  சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு; திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள்.புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.
இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள்.பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன்.மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்.



14/-02-1987 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கொரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டி விடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.
முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது.

அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.

கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்… மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி..!வியப்பு !  சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வோக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. 


பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்ததும் பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை. பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறறனார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது.பொன்னம்மானை அடையாளம் காணக்கூடிய வகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.
முகாம்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும்;  அந்த மனிதன் இன்று இல்லை. ‘அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ” என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.
லெப்.கேணல் பொன்னம்மானுடன் வீரச்சாவடைந்த

போராளிகள்;
மேஜர் கேடில்ஸ்

கப்டன் வாசு

2ம்.லெப் பரன்

வீரவேங்கை,கவர்(நகுலேஸ்வரன்),

தேவன்(வசந்தகுமார்)

குமணன்(மோகனலிங்கம்),

யோகேஸ்(பாலன்),

(படம்லெப். சித்தாத்தர்)

( திலீபன்),சுதாகர்),
 (வசீகரன்), 2ம்லெப். (அர்ச்சுணன்), வீரவேங்கைகளான அக்பர் (லோகநாதன்), குறித்த படைமுகாம் மீதான தாக்குதலுக்கு வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது.

படைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை தண்ணீர் தாங்கி ஊர்தி வெடித்துச் சிதறியது.
இதன்போது மேஜர் கேடில்சுடன் மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன்உட்பட ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இது நடந்து ஒரு மாதம் கழித்து இந்தத் தாக்குதலை செய்து கிட்டண்ணை பொன்னம்மானின் இழப்பை ஈடு செய்யத் திட்டமிட்டார். 

பொன்னம்மான் பற்றி தலைவர் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்


பயிற்சி முகாங்களைப் பொறுத்தவரையில் 01மற்றும்02 மட்டுமே இந்தியா மத்திய அரசால் வழங்கப்பட்டது
அதற்குப் பிறகு பயிற்சி முகாம் மூன்றில் இருந்து கிட்டத்தட்ட பயிற்சி முகாம் பத்து வரைக்கும் பொன்னம்மான் பொறுப்பு எடுத்து நடத்தியவர் ,முழுப் போராளிகளையும் அவர் தான் உருவாக்கினார், ஆரம்பகாலமான திருநெல்வேலி வங்கிக்கொள்ளை நடந்த காலமான 1980 களிலே அவர் எங்களோடு சேர்ந்து இயங்கத் தொடங்கி விட்டார், அந்தக் காலத்தில் இருந்து செயல்பட்டதால் இயக்கத்தினுடைய ஆரம்பகால கஸ்டங்கள் துன்பங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும், அதை அவர் பயிற்சி முகாம் போராளிகளிற்கு ஆரம்ப காலங்களில் எங்களிற்கு ஏற்பட்ட பிரச்சனைகளையும் இனி நாங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அவர்களிற்குத் தெளிவாகச் சொல்லிக் கொடுக்கக் கூடியவராக இருந்தார்,

இந்தப் பயிற்சிகளை அவர் திறமையாக நடத்துவதற்கான காரணம் அவர் யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் மாணவர்களிற்கான கிறிக்கேற் அணியில் கப்டனாகயிருந்தமையால் அவருக்கு தலைமை தாங்குகின்ற ஆற்றல் இருந்தது, அதை விட அவரின் தாயாரும் ஒரு நேர்மையானவர் அடிக்கடி இவருக்கு புத்திகள் ரீதியாகப் போதிப்பவர், இவர் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்திலே தாயாருக்குத்தெரியும், கிட்டத்தட்ட அவரின் மகன் போராட்டத்தில் ஈடுபடுவது அவருக்கு ஒரு பெருமைமாதிரி இருந்தது, அவர் எப்பொழுதும் இவருக்கு கடிதங்கள் எழுதும் போதும் கூட நல்லாயிருக்கவேணும் உன்மையாகயிருக்க வேணும் இயத்த்தை விட்டு விலகக் கூடாது என எழுதுவார்,

அக்கடிதங்களையும் எனக்கு அவர் காட்டுவார் அதை எடுத்து வைக்க வேணும் என முன்னரே நினைத்தேன் சிலவற்றை தவற விட்டுள்ளேன், அவர் அடிக்கடி எழுதும் கடிதர்களில் உனது கொள்கையில் உறுதியாகயிரு நேர்மையாகயிரு எப்பொழுதும் விட்டு விலகி வராதே அவருக்குத் தாய்யும் உந்துசக்தியாகயிருந்தவர், அவர் எங்களோடு நெருங்கிப்பழகியமையால் எனது சிந்தனையும் செயல்பாடும் அவருக்கு நன்கு தெரியும் அவர் என்னோடு நிறைய காலம் நின்றமையால் எனது எண்ணப்போக்கை விழங்கிக்கொண்டவர், அந்தப் பக்கங்கள் வரலாறுகளையும் போராளிகளிற்கு சொல்லி வளர்த்தார் மாற்று இயக்கங்களில் பயிற்சி முகாம்களிற்குப் போறுப்பாக விடப்பட்டவர்கள் பல குழப்பங்களை ஏற்படுத்தியதை நாங்கள் அறிந்துயிருக்கின்றோம்

என்னைப் பொறுத்தவரையில் அதை நான் சில நண்பர்களிற்ச் சொல்கின்றனான் கிட்டுவும் பொன்னம்மானும் விசுவாசமாகயிருந்தமையால் தான் அதாவது பயிற்சி முகாம்களை பொன்னம்மான் நடத்திக்கொண்டிருந்தார், அந்தப் பக்கத்தால் எனக்கு ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை அதைப்போல் யாழ்பாணத்தில் கிட்டு அணியை நடத்திக் கொண்டிருந்தமையால் இரண்டு பக்கத்தாலும் எனக்கு எந்தக் குழப்பங்களும் ஏற்படவில்லை, அந்த இரண்டு பேரின் விசுவாசத்தன்மையும் எனக்கு இரண்டு பக்கத்தாலும் எந்தச் சிக்கலும் ஏற்பட விடல்லை, ஒன்றும் இரண்டும் மத்திய அரசு தந்தமையால் மூன்றில் இருந்து பயிற்சி வழங்க எங்களால் முடியாமல் இருந்தது அக்காலத்தில் மாற்று இயக்கங்களிடம் கூட பணம் இருந்தது, ஆனால் எங்களிடம் பணக் கஸ்ட்டம் பெரிதாகயிருந்தது அப்பொழு உங்களிற்குத் தெரியும் இயக்கத்தினுடையே மூத்த உறுப்பினர் பேபி சுப்பிறமணியம் இவர் இந்தியாவில் இயக்கதிருடைய வரலாற்றை கண்காட்சியாக இந்திய மக்களிற்கு இதை காட்டும் வேலையை செய்து கொண்டிருந்தவர்கள்,

அப்பஅந்தக் கண்காட்சியை பார்த்த பின் இந்திய மக்கள் சிறு தொகை அன்பளிப்பை செய்து வந்தமையால் சிறிது பணம் சேரும் அப்ப நாங்கள் அந்தப் பணத்தை வைத்துத்தான் அப்பயிற்சி முகாம்களை நடத்திவந்தோம், அந்தக் காலங்களில் பொன்னம்மான் பணக் கஷ்டமான காலங்களில் அந்தக் கண்காட்ச்சி நடக்கும் இடங்களில் பொன்னம்மான் போய்?அந்த வாசலில் நிதிகள் சேருவதை பார்த்தக்கொண்டு இருப்பாராம், அந்த நீதிகள் சேர்ந்ததும் அதை அள்ளிக்கொண்டு பயிற்சி முகாமிற்கு வந்து விடுவார் வந்தவுடன் அதை அனுப்பி போராளிகளுக்கு பொருட்கள் வேண்டி உணவு சமைத்து அவர்களுக்குக் கொடுத்து பயிற்சி நடக்கும் ,அது மட்டும் அல்ல பொன்னம்மான் வெளியில் சென்று அரசியல்வாதிகளிடம் எமது போராட்டத்தை சொல்லி அவர்களிடம் இருந்தும் உதவியைப் பெற்றார், குறிப்பாக குளத்துர் மணி குப்பலக்சுமி அங்கா போன்ற ஏனையவர்களிடம் இருந்தும் உதவியை பெற்றார் ,குறிப்பாக அந்த அக்கா பயிற்சி முகாம் போராளிகற்கான முட்டையை அவர் தந்தார். அப்படி ஒவ்வொருவரிடமும் அவர் சென்று ஒருத்தரிடம் முட்டை ஒருத்தரிடம் அரிசி என வேண்டித்தான் அந்த முகாம்களை அவர் நடத்தினார். அதால அந்த அரசியல் தலைவர்களோடும் அவருக்கு நல்ல உறவு இருந்தது ,அதை விட நான் தேடப்படும் காலங்களில் அவர்களின் வீட்டிற்குச் சென்று பாதுகாப்பாகவிருந்து இருக்கின்றேன் நான் தேடப்படுபவர் என்பது அவர்களின் தாய்க்கும் தெரியும் ,அவர் எதுவும் என்னிடம் கேட்க மாட்டார் பொன்னம்மான் எங்களோடு இயங்குவதால் அவரும் எங்களிற்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்தார், அவர்களின் குடும்பம் எப்பொழுதும் இசையில் ஆர்பமானவர்கள் அவர்கள் தங்களின் வேலையைச் செய்வார்கள் இவருக்கு பின் பக்கம் ஒரு அறை கொடுக்கப்பட்டிருந்தது, இவர் ஒரு சுத்திலை வைத்து தட்டிக்கொண்டிருப்பார், இப்படி அங்கே கலகலப்பாக வேலைகள் நடந்துகொண்டுயிருக்கும் தாய் சங்கீதம் பாடிக்கொண்டு சமைத்தக் கொண்டிருப்பார் பொன்னம்மானின் அப்பாவிக்கு காது கேட்பது குறைவு அவர் சவுண்டாக பாட்டை கேட்டுக்கொண்டிருப்பார், இப்படி வீடுபுல்லா இவர்கள் செய்யும் வேலை சத்தம் கேட்டதால் பொன்னம்மான் அந்த வீட்டிலே வைத்து வெடிகுண்டு செய்வது அவருக்கு இ லகுவாகயிருந்தது எங்களின் படை முகாம் போன்ற அவர்களின் வீடு இருந்தது என தலைவவர் குறிப்பிட்டார்

அடுத்து இதற்குப்பதில் தாக்குதலாக கிட்டு அண்ணையால் நடத்தப்பட்ட யாழ் தொலைத்தொடர்பு நிலையம் மீதான தாக்குதலைப் பற்றிப் பார்ப்போம்

தொடரும்
அன்புடன் ஈழமதி

Share:

1 thought on “a 960பாகம் 03 தமிழிழீழக்கதை (Tamil Eelam of story)தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு”

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *