பாகம் மூன்றின் நாலாவது தொடர்

06.03.1987 யாழ் தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம் தாக்குதல் !

06.03.1987அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்ட  யாழ்தொலைத்  தொடர்புநிலைய மினிமுகாம் தாக்குதலைக்  குறிப்பிடலாம். 
யாழ்ப்பாணம் கோட்டை முகாமிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தில் முகாமிட்டனர் . அவ்வாறு முகாமிட்ட படையினர் அப்பகுதி மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை தொடர்ந்து நடாத்திக் கொண்டு  வந்தனர்.   {எனவே இதை முற்றாக தாக்கி அழிக்க கிட்டண்ணை திட்டமிட்டார், அதாவது மோட்டார் மற்றும் இலகு ரக ஆயுதங்களைக் கொண்டு இந்தக் காவலரண்களை அழிக்க தளபதி கிட்டண்ணா அவர்கள் தலைவர் அவர்களின் கவனத்திற்க்குக் கொண்டுவந்தார் . அத்துடன் இம்முகாம் சம்பந்தமான வேவுத்தகவல்களையும் கொடுத்தார். இவைகள் அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள்,  உடனடியாக இம்மினி  முகாமை தாக்கியழித்து மக்களைப்  பாதுகாக்குமாறு பணித்ததுடன் யாழ்மாவட்ட தாக்குதலணிகளுடன் மேலதிகமாக மன்னார் மாவட்ட  தாக்குதல் அணிகளையும்  இத்தாக்குதலுக்குப் பயன்படுத்துமாறும்  அத்துடன் தனது மெய்பாதுகாப்பாளர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார்.
அதற்கமைவாக இம்மினி  முகாமைத்  தாக்கியழிப்பதற்கான திட்டத்தை தளபதி கிட்டண்ணா அவர்கள் விளங்கப்படுத்தி இத்தாக்குதலுக்கான முக்கியத்துவத்தையும் தாக்குதலனிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.  அதற்கமைவாக தாக்குதலணிகள்

தளபதி கிட்டண்ணா அவர்களின் திட்டத்ததில் நடைபெற்றது, தாக்குதற் திட்டத்திற்கமைவாக ஒரு அதிவேக மின்னல் தாக்குதலை மேற்கொண்டனர் புலிகள்.  அதாவது 6 RPG யால் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி எதிரியைத்  திணரடிக்கச் செய்து தாக்குதலை ஆரம்பித்தனர், குறிப்பிட்ட நிமிடத்தில் தாக்குதலின் பின் மினிமுகாம் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ்வந்தது. இவ்வெற்றிகர மினிமுகாம் தாக்குலில் பல படையினர் கொல்லப்பட்டும்;  எட்டுப்படையினர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்தனர். மற்றும் பல அதிநவீன ஆயுதங்களும் வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன. இத்தாக்குதலில் ஐம்பது போராளிகள் பங்குபற்றியிருந்தனர். இத்தாக்குதல் மூலம்  பொதுமக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய முகாம்  முற்றுமுழுதாக கைப்பற்றி தொடர்ந்தும் தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள்  வைத்திருந்தனர். இவ்வெற்றிகரத்  தாக்குதலை தளபதி கிட்டண்ணா செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். கிட்டண்ணாவிற்கு உதவியாக அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதி ராதா அண்ணா அவர்களும் செவ்வனவே செயற்பட்டிருந்தார். இவ்வெற்றிகரத்தாக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர் .
அவர்களின்.. விபரம் வருமாறு.


கப்டன் நிக்சன்
கனகசபை முருகதாஸ்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:19.08.1967
வீரச்சாவு:06.03.1987


2ம் லெப். அசோக்.
வீரவேங்கை.ரதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். சிறு சிறு தாக்குதல்கள் மூலம் விடுதலைப் புலிகளின் கை ஓக்கிக்கொண்டியிருக்க, தொடர்ந்து முகாம்களை தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டது 

சிங்கள அர படைகளிற்கு அத்தோடு முகாமில் இருந்து வெளியேற முடியாத நிலை கோட்டையில் உலங்குவானூர்திகளை இறக்க முடியாதநிலை ஏற்பட்டமையால் இராணுவம் உணவு இல்லாமல் தவிர்த்தது,இராணுவத்தின் தளபதி கப்டன் கொத்தலாவல. யாழ்ப்பாணம் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்திற்கு தலைமைதாங்கியவர்.

தளபதி கிட்டு தலைமையில்
யாழ் கோட்டை முற்றுகையிடப்பட்டது. கொத்தலாவல தலைமையிலான பல நூற்றுக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் கோட்டைக்குள் முடக்கப்பட்டனர். அவர்களுக்கான உணவு, தண்ணீர் என்பன தடைப்பட்டது. விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு பயந்து ஹெலிகாப்டர்கள் கோட்டையில் தரையிறங்குவதில்லை. கோட்டைக்குள்ளிருந்த இராணுவத்தினர் பசியில் வாடினர்.

கப்பன் கொத்தலாவலவிடமிருந்து தளபதி கேணல் கிட்டுவுக்கு வாக்கிடோக்கி மூலம் அழைப்பு வருகிறது. கொத்தலாவலயின் குரல் தழுதழுக்கிறது. “சாப்பாடு இல்லாமல் துடிக்கிறோம். தண்ணீரும் இல்லை. சமைப்பதற்கு விறகும் இல்லை. எங்களுக்கு சாப்பாடு தருவதற்கு எங்கள் ஹெலிகாப்டர்களை அனுமதிப்பீர்களா?”என்று கேட்கிறார்.

தளபதி கிட்டுவுக்கு நெஞ்சு கனத்தது. எதிரி என்றாலும் அவன் பஞ்சத்தில் வாடுவதை விரும்பாத தமிழன் அல்லவா. “உங்கள் ஹெலிகாப்டர்களுக்கு இங்கே அனுமதி இல்லை. வேண்டுமானால் நாங்கள் உங்களுக்கு சாப்பாடு தருகிறோம். ஒரு லாரியில் உணவுப் பொருட்களும் விறகும் அனுப்புகிறேன். உங்கள் உறுப்பினர்களை தாக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்” என்றார் தளபதி கிட்டு. கொத்தலாவல சம்மதித்தார்.

சற்று நேரத்தின்பின் தளபதி கிட்டு அனுப்பிய லாரி கோட்டைக்குள் சென்று உணவுகளை கொடுத்துவிட்டு வருகிறது. கப்டன் கொத்தலாவல நெகிழ்ச்சியோடு கிட்டுவுக்கு நன்றி கூறுகிறார். அதன் பின்னரும் அதே இடத்தில் சண்டை ஆரம்பிக்கிறது. சண்டை நடந்துகொண்டிருக்கும்போதே தளபதி கிட்டுவும் கொத்தலாவலவும் அடிக்கடி சண்டையை நிறுத்திவிட்டு நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். பல இடங்களிலும் சாவடைந்த இருதரப்பு சடலங்களும் இவர்களின் சந்திப்பினூடாக பரிமாறப்பட்டன.

பின் நாட்களில் கேணல் கிட்டு அவர்கள் இந்திய-இலங்கை கூட்டு இராணுவச் சதியில் அகப்பட்டு இயக்கத்தின் மரபிற்கமைய பத்து வேங்கைகளோடு வீரச்சாவைத் தழுவிக்கொள்கிறார். கப்டன் கொத்தலாவல விடுதலைப் புலிகளின் போராட்ட நியாயத்தை உணர்ந்து ஸ்ரீலங்கா இராணுவத்திலிருந்து விலகி வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்கிறார்.

போர்க்களத்தில் எதிரிக்கே உணவளித்த பெருமை விடுதலைப் புலிகளையே சாரும்!

26 /05/1987,ஒப்பரேசன் லிபரேசன் என்ற பேரில் சிங்களப் படையினர் யாழ் வல்வெட்டித்துறை மீது கடுமையான தாக்குதலை தொடங்கியது……..


 

தமிழீழப்போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் மீதான முதல் பாரிய இராணுவ நடவடிக்கை இதுவாகும் சிங்கள அரசால் ஒப்பரேசன் லிபரேசன் என பெயர் வைக்கப்பட்டு  /26./05/1987 அன்று  சிறிய நிலப் பரப்பைக் கொண்ட வடமராட்சிப் பிரதேசத்தில் 8000ற்கு மேற்பட்ட ராணுவத்தினரால் நூற்றுக்கு மேற்பட்ட கனரக ராணுவ வாகனங்களும் பல உலங்கு வானூர்திகளும் ,குண்டு வீச்சு விமானங்களும் சிறிலங்கா கடற்படையினரின் கடல்படை படகுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் சுற்றிவளைத்து கோரத் தாக்குதல் நடத்தினார்கள்.இதில் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். 15000 க்கு மேற்பட்ட மக்கள் இருப்பிடங்களை விட்டு ஏதிலிகள் ஆக்கப்பட்டனர். இத்தாக்குதலை முறியடிப்பதற்காக தேசிய தலைவர் அவர்களின் வழிகாட்டலில் 200 வரையிலான போராளிகள் எதிர்த்து நின்று  கடுமையான சண்டையிட்டார்கள்.இதின் முதல் நாள் சமரில் 09 போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களின் விபரம்

உடுப்பிட்டி பகுதியில் ஒப்பரேசன் லிபரேசன் படை நடவடிக்கையின்போது சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் நடத்திய குண்டு வீச்சின்போது வீரச்சாவு

01) கப்டன் வீமன்
      நவீனநாயகம் நாகராசா
      நாகர்கோவில், வடமராட்சி கிழக்கு
      வீரப்பிறப்பு: 26.12.1959
      வீரச்சாவு: 26.05.1987

02) கப்டன்அலன்
        நடனசிகாமணி பாக்கியலிங்கம்
        வல்வெட்டித்துறை
         வீரப்பிறப்பு:  06.05.1962
         வீரச்சாவு: 26.05.1987:

03) 2ம் லெப்டினன்ட் ரம்போ (சிவா)
       தங்கவடிவேல் சிவகுமாரன்
       வல்வெட்டித்துறை
       வீரப்பிறப்பு: 25.11.1968
       வீரச்சாவு: 26.05.1987

04)  2ம் லெப்டினன்ட் நாகேந்திரன்
        ச’மகேந்திரன்
       மடு, மன்னார்
       வீரச்சாவு:26.05.1987

05)  வீரவேங்கை செட்டி
        சுந்தரம் செல்வராசா
        இமையாணன் மேற்கு, நாவலடி, உடுப்பிட்டி
        வீரப்பிறப்பு: 07.05.1968
         வீரச்சாவு: 26.05.1987

06) வீரவேங்கை ராஜன்
       சங்கத்தானை, சாவகச்சேரி
      வீரச்சாவு:26.05.1987

07) வீரவேங்கை நரேஸ்
       கணேசரத்தினம் கிருபாகரன்
       தொண்டமானாறு
       வீரப்பிறப்பு:  05.07.1971
        வீரச்சாவு:  26.05.1987

08)  2ம் லெப்டினன்ட் சேது
        நடராசா சிவசேது
        கொட்டடி-யாழ்
        வீரப்பிறப்பு: 01.05.1966
        வீரச்சாவு:  26.05.1987

09)  வீரவேங்கை செட்டி சோட்
        கணபதிப்பிள்ளை நந்தகுமார்
        சண்டிலிப்பாய் யாழ்
        வீரப்பிறப்பு: 02.05.1971
         வீரச்சாவு: 26.05.198701.

 இவர்கள் அச்சண்டையில் வீரச்சாவு அடைந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் உலங்குவானூர்தியின் தாக்குதலிலே கொல்லப்பட்டனர் அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிடம் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது,

 அதில் சுமார் 60 திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள்  அடையாளம் தெரியாமல்  சிதறுண்டு சதைத்துண்டுகளாகக் காணப்பட்டார்கள்.  இந்திய அரசாங்கம்  தாக்குதலை நிறுத்தச் சொல்லியும் சிங்களப் படைகள் தாக்குதலை நிறுத்தவில்லை. தனது கட்டளையை இலங்கை அரசு ஏற்கவில்லை என்பதை புரிந்து கொண்ட இந்தியா அரசாங்கம்  தனது விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களை வட பகுதி தமிழர்களிற்கு என வானத்தில் இருந்து போட்டது. இது எமது தலைவரிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எப்படியாவது  இலங்கைப் படையினரிக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என முடிவு எடுத்தார்.

05/06/1987வடமராச்சியில் அமைந்திருந்த முகாம் மீது தாக்குதல் நடத்த தலைவர் திட்டமிட்டார்;

இதற்கான வேவு நடவடிக்கையை மேஐர் விசு மற்றும்  மூத்த போராளி சுக்குளா தலைமையிலான போராளிகள் ஈடுபட்டனர். அப்பொழுது எமது அமைப்பில் இருந்த பிரபா என்பவர் நெல்லியடி சண்டைக்குப்பிறகு தலைவரால் அவருக்கு “சக்கைப்பிரிகேடியர் ” என பட்டப் பெயர் தலைவரால் வைக்கப்பட்டது.  அப்படி மிகவும் திறமையானவராக பிரபா காணப்பட்டார். பிரபா அவர்களின் தலைமையில் நெல்லியடி சண்டைக்கான திட்டம் தலைவரால் தீட்டப்பட்டது.
அப்பொழுது தென்மராட்சி, வலிகாமம், வடமராட்சி அனைத்து பிரதேசங்களிலும் இருந்து சுமார் 120 போராளிகள் எடுக்கப்பட்டு பளையில் உள்ள வைரமாளிகை என்ற தென்னம் தோட்டத்தில் போராளிகளைகொண்டு போய் நெல்லியடி மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரைத் தாக்குவதற்கான மாதிரிப் பயிற்சி தேசியத்தலைவரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதற்கு மெயின் பொறுப்பாக மாத்தையாவை விட்டாலும் தலைவரே அப்பயிற்சியை நேரடியாக வழங்கிக்கொண்டுடிருந்தார், 



காலையிலே  ஒரு டெலிக்கா வேனில் தலைவர் பயிற்சியை பாப்பதற்கு வந்து நிப்பார்.
அப்பொழுது போராளிகள் தென்னை ஓலைகளை வெட்டி அவரிடம் கொடுப்பார்கள். அதை அவர் நிலத்தில் போட்டு   அதில் இருந்து பயிற்சியைப்  பார்த்துக்கொண்டுயிருப்பார். அவரின்  பாதுகாவலராக பிரிகேடியர் சொர்ணம் மற்றும் பிரிகேடியர் கடாபி இருவரும் நிப்பார்கள்

.

 அதில் கலந்துகொண்ட முக்கிய போராளிகளான லெப் கேணல் செல்வராசா,  பிரிகேடியர் ஜெயம்,  பிரிகேடியர் பானு, லெப் கேணல்.சூட்டி பிரிகேடியர் சூசை, கப்டன் மில்லர், போராளி அசோக் சுசிலன், மேஐர் விசு,  போராளி சுக்குளா, போராளி ஜெயா மேஜர் கமல் போராளி தூயமணி உட்பட சுமார் 120 போராளிகள் பயிற்சி எடுத்தார்கள். ஒரு மாத காலம் இப்பயிற்சி நடைபெற்றது. இதில் பங்குபற்றிய தூயாமணி  ஆகிய எங்களின் 15 பேருக்கு ஜெயம் பொறுப்பாகவும், எங்களின் இரண்டாவது பொறுப்பாக திரு அசோக் அவர்கள் இருந்தார்கள் . பதினைந்து பேராக எட்டு அணிகள்  உருவாக்கப்பட்டு  கடுமையான பயிற்சி நடைபெற்றது.  அப்பயிற்சியை லெப் கேணல் செல்வராசா அவர்கள் வளங்கினார், எங்களின் திட்டம் இது தான் முதலில் பாணு அவர்கள் RPG ஆல் அடித்து சண்டையை ஆரம்பிக்க நாங்கள் அனைவரும் ஆயுதங்களால் ஒரு செறிவான தாக்குதலை நடத்துவோம்.

அந்த சத்தத்தில் இராணுவம் திகைத்து நிக்கும் வேளையில் 5/07/1987அன்று இரவு மில்லர் சக்கை வண்டியை உள்ளே கொண்டு போய் வெடிப்பார். அவர் வெடித்ததும் அடுத்து ராசிக் இரண்டாவது வாகனத்தை செலுத்தி வெடிப்பார். இது இப்படி நடக்க சுக்குளா அவர்களின் அணி ஒரு பக்கமும்; விசு அவர்களின் அணி ஒருபக்கமும் அடித்துக்கொண்டு உள்ளே இறங்குவார்கள்.
 எங்களின் திட்டமாக இருந்தது

வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்படும் ,அதே நேரம் ஆறு மணிக்கு முன்னரே இதைச் செய்ய வேண்டும், காரணம் இரவு நேரங்களில் புலிகள் தாக்கலாம் என்ற அச்சத்தால் இராணுவம் இரவு நேரங்களில் மக்களின் பாழடைந்த வீடுகளிலே தங்கச் சென்று விடுவார்கள், எனவே அனைத்து விடயங்களைளிலும் கவனம் எடுத்து இந்தத் தாக்குலைச் செய்ய வேண்டும், இல்லையெனில் அது வெற்றி அழிக்காது இதுவே மிக முக்கியமான விடயமாகவிருந்தது,

திட்டமிட்டாப்போல் சண்டை ஆரம்பம் ஆனது. பிரிகேடியர் பானு அவர்கள் R.p.G ஆல் அடிக்க நாங்கள் எல்லோரும் காம்மை நோக்கிச் சரமாரியாகச்  சுட்டோம். எதிர்பாராத  தாக்குதலை கண்ட இராணுவத்தினர் அமைதியாக இருந்தனர். கப்டன் மில்லர் அவர்கள் சக்கை வாகனத்தை வேகமாகச் செலுத்தி உள்ளே வெடித்தார்.  ஆனால் நாங்கள் நினைத்த இடத்திற்கு அது போகவில்லை. அதனால் எங்களை சிறிது தூரம் பின்னால் வருமாறு கட்டளை வந்தது. தொடர்ந்து இரண்டாவது வாகனத்தை போராளி ராசிக் அவர்கள் உள்ளே வேகமாக செலுத்திச் சென்றார். ஆனால் அது இடையில் பிரண்டு விட்டது வாகனம் பிரண்டதும் அவர் பின்னால் வந்து விட்டார். இருந்தும் அவ்வாகனம் வெடித்துச் சிதறியது. பின்னர் நாங்கள் எல்லோரும் அடித்துக்கொண்டு உள்ளே சென்றோம்.

அனைத்து இராணுவத்திரின் உடல்களையும் பெரும் தொகையான ஆயுதங்களையும் எடுத்தோம். நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினரின் உடல்களை நாங்கள் எடுத்தோம். சண்டை மிகவும் வெற்றியாக அமைந்தது. மில்லர் என்ற மாபெரும் வீரனை இழந்த சோகத்தில் நாம் மீண்டும் எமது இடங்களிற்குச் சென்றோம்.பின்வருமாறு தூயாமணி தெரிவித்தார்,

இதில் வரும் பேர்களில் போராளிகளான பிரபா, தூயாமணி மற்றும் சுக்குளா இவர்கள் இப் புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடு இருந்துள்ளனர், ஏனையவர்கள் அனைவரும் தாய் மண்ணின் விடுதலைக்காக தங்களை அற்பணித்துள்ளனர்,


இனி மில்லறைப்பற்றி சுருக்குமாகப் பார்ப்போம் கப்டன் மில்லர் என அழைக்கப்படும் வல்லிபுரம் வசந்தன் (01/01 /1966 அன்று பிறந்தார்
யாழ்ப்பாணம், துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட வசந்தனுடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஆவர். தந்தை பருத்தித்துறை, இலங்கை வங்கிக் கிளையில் பணி புரிந்தவர். வசந்தன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றார். அதே காலப்பகுதியில் வல்வெட்டித்துறை சேர்ந்த நண்பர்களோடு பழகி வந்தமையால்1985 ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டார் மில்லர்

அவரை விடுதலை புலிகள் இந்தியாவில் நடந்த தங்களின் ஒன்பதாவது பயிற்சி முகாமிற்கு அனுப்பினார்கள் அங்கே சென்று ஆரம்பப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த மில்லர் பற்றி

அவரோடு பயிற்சி எடுத்த போராளி காசன் குறிப்பிடுகையில் மில்லர் அதிகமாகக் கதைக்க மாட்டான், என்னோடுதான் சேர்ந்து பழகுவான் பயிற்சி முடிந்ததும் விடுமுறையில் விடுவார்களா? என்று என்னிடம் கேட்டான் அதற்கு நான் ஓம் என்றேன் விடுமுறையில் சென்றபின்தான் நான் சண்டைக்குப் போவேன் என்றான் அதன் பொருள் சாவதற்கு முன்னர் அம்மாவை பார்க்க வேண்டும் என்பதே ஆகும்

அது போல் பயிற்கு முடிந்ததும் மில்லர் தமிழீழம் அனுப்பப்பட்டான் அவன் விரும்பியதுபோல் விடுமுறையில் அனுப்பப்பட்டான் விடுமுறை முடிந்தது மன்னார் மாவட்டம் அனுப்பப்பட்டான் அக்காலப்பகுதியில் பிரபா விக்ரர் அவர்களின் ஆழுகையின் கீழ் நின்று பல சண்டைகளை பிடித்துள்ளான்

தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். பிரபா அவர்களோடு இணைந்து

பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான  துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.

இறுதியாக அடம்பன் சண்டையில் பங்கு பற்றி மிகத்திறமையாகச் செயல்பட்ட மில்லர் அது முடிந்ததும் யாழ்பாணம் வந்தான், வந்ததும் கிட்டு அண்ணையிடம் அனுமதி கேட்டு மீண்டும் விடுமுறையில் சென்றான்

விடுமுறை முடிந்து வந்தபின் பிரபாவின் அணியினரோடு சேர்ந்து வடமராச்சியை பிடிக்க விடாமல் சிங்களப்படைகளிற்கு எதிராக பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான்.

வடமராட்சி யில் நடந்த சண்டையில் 60ற்கு மேற்பட்ட  பொதுமக்கள் கொல்லப்பட்டதை நேரடியாகப் பார்த்தபோதும் மில்லறின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது நெல்லியடியை தாக்குவதற்கான மாதிரிப்பயிற்சியை ஆரம்பித்ததும் தான் தற்கொலைத் தாக்குதல் மூலம் அவ் முகாமை அழிக்க விரும்புவதாகவும் தனக்கு அனுமதி தருமாறு கேட்டு பிரபா ஊடாக தகவலை தலைவருக்குத் தெரியப்படுத்தியிருந்தான்,
தலைவரும் எவ்விதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை அதைப் பார்த்ததும் அமைதிஅழித்தார், சண்டை ஆரம்பிக்க ஒரு சில நாட்களிற்கு முன் பிரபாவைக் கூப்பிட்ட்ட தலைவர் மில்லலர சக்கை அடைந்த வாகனம் ஒன்றை தயார்படுத்தி அதற்கு மில்லரையே விடுமாறு தெரியப்படுத்தினார்,

அவர் சொன்னது போல் பிரபாவும் தயார்படுத்திக் கொடுத்தார்

அவன் கரும்புலியாக செல்வதற்கு முன்னர் மூன்றாவது முறையும் அவன் விடுமுறையில் சென்று தாயோடு கதைத்த பின்னரே அவ்வேலையை செய்து தனது மாநிட வாழ்க்கையை முடித்துக் கொண்டான் இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் அவ் முகாமை இலகுவாகத் தாக்கி அழிப்பதற்காகத் தானே முதல் கரும்புலியாச் சென்று முகாமைத் தாக்கி அழித்தது மட்டும் அல்லாமல் கரும்புலி மறவர்களிற்கு வழிகாட்டியாகவும் இவரே இருந்தார் .இவரின் வழியை பின்தொடர்ந்து 500 றிற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கரும்புலியாகச் சென்று தங்களின் உயிரை தாய் மண்ணிக்காக அற்பணித்துள்ளார்கள்,

மில்லறின் அம்மா மில்லறைப் போன்று அவரும் ஒரு துணிச்சலான தாய் ஆவார், யுத்தம் நடந்த காலத்தில் ஊடங்களிற்குப் பேட்டி அழித்த அவர் எனது மகன் கரும்புலியாக சென்றதை எண்ணி நான் பெருமை அடைகின்றேன், எத்தனை குமரு குஞ்சுகளை கெடுத்து கொலை செய்த கொடிபவர்களை அழித்து எனது பிள்ளை சென்று விட்டான், யார் என்னைக் கண்டாலும் மில்லர் அம்மா என மக்கள் பெருமையாக என்னை அழைப்பது அதுவே போதும் என துணிச்சலாகப்பேட்டி கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அடுத்து இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி விரிவாகப் பார்ப்போம்

தொடரும் அன்புடன் ஈழமதி

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *