குயின்ஸ்லாந்து மாநிலத்தில்TCC தமிழீழ மாவீரர் செயல்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனவளிப்பு நாள் நோத்பகுதியில் 18/05/2025 அன்று நடைபெற்றது

அதில் கலந்துகொண்ட சாந்தன் அவர்களின் முள்ளிவாய்க்கால்தொடர்பான உரை இது தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவு நாளிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது முதல் கண்வணத்தை தெரிவித்துக் கொண்டு ஆரம்ப காலம் தொட்டு முள்ளிவாய்க்கால் வரை நடந்தவற்றை தெளிவுபடுத்துகின்றேன்

1970 இருந்து இலங்கையில் வாழும்பூர்வீகக்குடிகளான தமிழர்கள் மீது இந்தியாவில் இருந்து வந்தேறு குடிகளான விஜயனினின் அடி தோன்றல்களான சிங்களவர்கள் இலங்கையைப்பற்றி பெரிதாக அக்கரை கொள்ளவில்லை உதாரணம், பெரும்பாண்மையாகயிருந்த தமிழர்கள் போர்த்துக்கையர் 1505ம் ஆண்டு வந்து 153 வருடம் இலங்கையை ஆட்சி செய்தார்கள் அவர்களோடும் தமிழர்படை சண்டையிட்டு கனிசமான தமிழர்கள்கள் கொல்லப்பட்டார்கள், அடுத்து1658ம் ஆண்டு ஒல்லாந்தர்கள் இலங்கையைப்பிடித்து 138 வருடம் அவர்களின் ஆதிக்கம் இருந்தது அவர்களோடும் தமிழர் படை சண்டையிட்டது, அதிலும் கனிசமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், அடுத்து1796ம் ஆண்டு பிரிட்டீஸ் இலங்கையைப்பிடித்தது அவர்கள் 152 வருடம் இலங்கையை ஆட்சி செய்தார்கள், அவர்களோடும் பட்டாரவன்னியன் சங்கிலியன் மன்னன் இரு மன்னர்களின் வழி நடத்தலில் ஆங்கிலப் படைகளோடு கடுமையான சண்டை நடந்தது மாறி மாறி 443 வருடம் அன்னியப் படைகளோடு சண்டையிட்டதால் தமிழர்களின் பெரும்பாண்மை முற்றாக அன்னியப் படைகளால் அழிக்கப்பட்டது,

ஆனால் வந்தேறு குடிகளான விஜயனின் அடித்தோன்றல்கள் இந்த 443 வருட அன்னியர்களோடு நடந்த சண்டையில் பங்குபற்றிய வரலாறே இல்லை,
தமிழர்கள் சண்டையிட அவர்களின் இரத்தத்தில் குளிர் காயந்தவர்கள் தான் இலங்கையில் வாழும் சிங்களவர்கள், ஆனால் ஆங்கிலேயர்கள் வெளியேறும்போது தங்களோடு சண்டையிட்ட இந்திய வீரரான சந்திரபோசிடம் நாட்டை கொடுக்காமல் காந்தியிடம் கொடுத்தார்கள், அதுபோல் தங்களோடு சண்டையிட்ட தமிழர்களிடம் நாட்டைகொடுக்காமல் சிங்களவர்களிடம் நாட்டை கொடுத்து விட்டுச் சென்றார்கள்,

அன்றிலிருந்து இருந்து இவர்களின் இன ரீதியாக பாகுபாடான, கல்வி தரைப்படுத்தல் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ,வட கிழக்கில் மற்றும் தென்னிலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகள் ,அதிகரித்தமையால் சொந்த நாட்டில் வாழும் சிங்களவர்களோடு போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு வடகிழக்கு தமிழ் இளைஞர் யுவதிகள் தள்ளப்பட்டார்கள்,

1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள்தென்னிலங்கையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள், அதை அறிந்த இந்திய அதிபரான இந்திரகாந்தி அம்மையார் பிரபாகரன் தலைமையிலான தமிழ் இளைஞர் யுவதிகளிற்கும் ஆயுதப்பயிற்சி தர முன்வந்தார்கள் ,அன்றில் இருந்து சிங்கள அரசுக்கு எதிரான தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைந்தது ,

1987ம் ஆண்டு கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலில் இலங்கையில் நாங்கள் வாழ முடியாது எங்களைப் பாதுகாருங்கள் என இந்தியாவின் காலில் விழுந்தார்கள் இலங்கை அதிபர் ஜேவர்த்தன, அவரின் கதையைக் கேட்டு விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு 3 வருடமாக இந்தியப் படைகள் விடுதலைப்புலிகளோடு கடுமையான சண்டையில் ஈடுபட்டனர், மூன்று வருட யுத்தில் 600 விடுலைப் புலிகளும் 1200 இந்தியப்படையினரும் கொல்லப்பட்டனர்,

இது இப்படிஇருக்க இலங்கை தேர்தலில் புதிய அதிபராக பிரேமதாசா பதவி ஏற்றார், இந்தியாவின் நயவஞ்சகப் போக்கை துல்லியமாக அறிந்த பிரேமதாச இங்கே நடப்பது ஒரு தாய் பிள்ளைகளின் பிரச்சனை அதை நாங்கள் கதைத்து தீர்ப்போம் இந்தியப் படைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கட்டளை வழங்கினார்
அதனால் இந்தியப் படைகள் வெளியேறியது அதே நேரம் மூன்று வருடமாக ஒரு சிறிய குழுவோடு சண்டையிட்டும் வெல்ல முடியவில்லையே என்ற தோல்வி மன நிலையில் வெளியே சென்றது இந்தியா இராணும்

அவர்கள் வெளியேறியதும் மீண்டும் விடுதலைப் புலிகளிற்கும் இலங்கைப் படையனருக்கும் சண்டை நடந்து கொண்டேயிருந்தது ஆனால் ஒரு நிணல் அரசாங்கம் போன்ற தமிழர்கள் வாழ்ந்தார்கள்,அவர்களிற்கு என்று தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழீழம் இருந்தது. அதனால் அவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார்கள்,

எமது வழர்ச்சியைக்கண்டு அயல் நாடான இந்திய மீண்டும் அச்சம் கொள்ள ஆரம்பித்தது, அதாவது இதை இப்படிய விட்டால் ஒரு வேளை இவர்களிற்குத் தமிழீழம் கிடைத்தால், இவர்களும் தமிழர்கள் தமிழகத்தில் வாழுபவர்களும் தமிழர்கள், அவர்களும் தமிழகத்தை பிரிக்கப் போராடலாம்அப்படி போராடினால் தமிழீழம் அவர்களிற்கு உதவும் என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது, அதனால் இலங்கை தமிழர்களின் போராட்டத்தையும் அதை தலைமை தாங்கி நாடாத்தும் தேசியத் தலைவரையும் முற்றாக அழிக்க வேண்டும் என இந்திய திட்டமிட்டது ,அதற்கு அமைவாக சிங்களப் படைகளின் தீச்சுவாலை நடவடிக்கை தோற்றபின் விடுதலைப் புலிகளை சமாதான பேச்சுவார்த்துக்குச் செல்லுமாறு இந்திய அமெரிக்கா போன்ற நாடுகள் அழுத்தம் கொடுத்தமையால் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைக்குச் சென்றார்கள்,

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் 12 ஆயுதக் கப்பல்களை இந்திய கடல் படையனர் கடலில் வைத்து அழித்தனர் நிராயுதபாணிகளாகவிருந்தாலும் தங்களின் கொள்கையில் தலைவரும் அவரோடு நின்ற போராளிகள் மற்றும் 4 லட்சம் மக்களும் உறுதியாக இருந்தமையால் இறுதி முள்ளிவாய்க்கால் நெருங்கிய போது அவர்களிடம் மன உறுதி மட்டுமே இருந்தது ,

கப்பலை அழித்ததோடு இந்திய நின்று விடவில்லை நிராயுதபாணிகளான விடுதலைப்புலிகளையும் அவர்களோடு நின்ற 4 லட்சம் மக்களையும் அழிக்கவென இந்தியாவில் இருந்து 5000 இந்தியப் படையினர் திருமலை புல்மோட்டையில் வந்து இறங்கி இலங்கைப் படையினரோடு இணைந்து முள்ளிவாய்க்கால் சண்டையில் ஈடுபட்டர்கள், இரு நாட்டுப்படைகளும் உலக நாடுகளின் ஆதரவும் எதிரிக்கு இருந்தமையால் கடுமையான மானப்போர் அந்த மண்ணில் நடந்தது நாள் ஒன்றிற்கு ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டும் பலர் காயம் அடைந்தும் கொண்டு இருந்தார்கள், ஆனால் காயப்பட்டவர்களிற்கு மருந்தோ ஏனையவர்கற்கு உணவோ இல்லாத மிகவும் பரிதாபமான நிலை அங்கே காணப்பட்டது ,மே 14-15 அன்றைய நாள் கடலில் இருந்து ஆகாயத்தில் இருந்து தரையில் இருந்து எறிகணைகளையும் T56 டாங்கியால் நேரடிச்சூடு மற்றும் கணோன் ஆயுதங்களாலும் நேரச் சூடுஇரு நாள் நடந்த தாக்குதலில் மட்டும் 50000 ஐம்பதினாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்,

இறந்த தாயிடம் பால் குடித்த குழந்தையும் கெற்பத்தில் இருந்த குழந்தை செல் பட்டு வெளியே வந்து துடித்த கதையேன தமிழர்கள் துடிக்க கொல்லப்பட்டார்கள்,ஆனந்தபுரம் மற்றும் தேவிபுரம் இரு இடங்களிற்கும் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட நச்சிக்குண்டுகளை இலங்கை அரசு பயன்படுத்தியது அதில் ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டார்கள்,
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த தமிழினப் படுகொலையில் மொத்தம் 146,679 ஈழத்தமிழர்கள், சிறிலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டனர் என்ற துல்லியக்கணக்கை உலகின் முன்வைத்த வண.பிதா இராயப்பு யோசேப் ஆண்டகை என்பதும் குறிப்பிடத்தக்கது

Share:

1 thought on “b22குயின்ஸ்லாந்து மாநிலத்தில்TCC தமிழீழ மாவீரர் செயல்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனவளிப்பு நாள் நோத்பகுதியில் 18/05/2025 அன்று நடைபெற்றது”

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *