மட்டக்களப்பு – நாவலடி பிரதேசத்தை அண்மித்த கொழும்பு பிரதான வீதியில் டிப்பர் வண்டி, உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
குறித்த சம்பவத்தில் உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்பாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், வாழைச்சேனை, மீராவோடையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், விபத்து சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.