முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று (22.05.2025) மாலை மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவத்தில் இளம் குடும்பஸ்தரான 25 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கு பின்புற பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மர்மமான முறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.