பாகம் மூன்றின் ஏளாவதுதொடர்

14/09/1987  அன்று இரவு திலீபன்அவர்கள் தலைவரைச் சந்திக்க வந்திருந்தார். அப்பொழுது திலீபன் தேசியத் தலைவரோடு சாப்பிட்ட உணவே இறுதி உணவாகயிருக்கும் என நினைக்கின்றேன்.

நல்லிரவு நெருக்கிய வேளை திலீபன் விடை பெற்றுச் செல்ல அதனைத் தொடர்ந்து தலைவர் அவர்களும் மற்றையவர்களும் மன்மதன் இல்லத்தை விட்டு புறப்பட்டுச் சென்றனர், அதற்கு முன்னர் தலைவர் என்னை அழைத்து அண்ணை நேரத்தோடு வெளிக்கிட்டுப் போய்யிடுங்கோ நீங்கள் திலீபனிற்குப் பக்கத்திலே இருக்க வேண்டும்.
நான் இரவு நேரங்களில் தான் அங்கே வருவேன். கவனமாகப் பாத்துக் கொள்ளுங்கோ என ஒரு பெரிய பொறுப்பை என்னிடம் தலைவர் ஒப்படைத்தார், மறுநாள் காலை நான் சென்று விட்டேன், அங்கு போராளி ராஜன் சோட் முரளி பலர் பந்தல் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள், திலீபன் உண்ணா நோன்பு இருந்த 12 நாட்களும் அவன் கூடவே இருந்தேன். இரவு வேளைகளில் மட்டும் அலுவலகம் சென்று தலைவரை சந்திப்பது எனது கடமைகளை செய்வது என எனது காலம் கடந்தது, அக்டோபர் மாதம் 9.10 ஆகிய நாட்கள் இந்தியாப்படைகள் இயக்கம் மீது தாக்குதல் தொடுக்கும்வரை மன்மதன் இல்லம் துடிப்புடன் செயல்பட்டுக்கொண்டுயிருந்தது, 

திலீபன் முன் வைத்த கோரிக்கைகள்

01 . பயங்கரவாதத் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும். 

இதன்காரணம் ஆயிரக்கணக்கான  தமிழ்  இளைஞர்கள் சிங்கள படைகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஒழுங்கான உணவு இன்றி வாடிக்கொண்டு இருந்தார்கள்.


02. புனர்வாழ்வு  என்ற  பெயரில்  தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும்  சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 

திருமலை, மணலாறு, மற்றும் மட்டக்களப்பு பிரதேங்களில் மிகவேகமாக சிங்களக் குடியேற்றங்கள் நடந்துகொண்டியருந்தது.


03.  இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.


04.  வட கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காரணம் பல பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.


05 . இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ் கிராமங்கள் பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவம் காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

இதன் காரணம் விடுதலைப் புலிகளிற்கு எதிரான இயக்கங்களை இணைத்து வரதராஜப் பெருமாளின் தலைமையில் அவர்களிற்கு இந்தியா அரசு ஆயுதங்கள் வழங்கியதால், நிராயுத பாணிகளாகயிருத்த  விடுதலைப் புலிகளை அவர்கள் இலகுவான முறையில் வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள்.


அடுத்து இந்தியாவிலிருந்து வந்த அமைதிப்படையினர், வடகிழக்கில் இருந்த பாடசாலைகளில் இருந்தமையால் பாடசாலைகளை நடத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையில் மக்கள் இருந்தார்கள். திலீபனின் கோரிக்கையை இந்தியா நிறைவேற்றும் என தலைவர் உட்பட நாங்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தோம்.

  இந்தியா அதிகாரிகள் வேண்டும் என்றே காலத்தை இழுத்து திலீபனின் சாவிற்குக் காரணமாக இருந்தார்கள். என உடன் இருந்த தேவர் தெரிவித்தார்.
 ஏனெனில் 1947ம் ஆண்டு காந்தி அகிம்சை வழியில் போராடி இங்கிலாந்து அரசிடம் இருந்து இந்தியாவிற்கு சுகந்திரம்   பெற்றுக் கொடுத்தார்.  என்பதை நாம் அறிந்தவர்கள் அதனால் எமது இயக்கம் சார்பாக லெப் கேணல். திலீபனை  நிறுத்தினோம். திலீபன் மிகவும் திறமையானவர்.  அதை விட உயர் கல்வி கற்றுக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஆவார். தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த திலீபன் அவரின் பேச்சுத் திறமை காரணமாக அக்காலத்தில் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளராக  தலைவரால் நியமிக்கப் பட்டிருந்தார்.


அதனால்தான்  அவ்வுண்ணா விரதப் போராட்டம் செய்ய விரும்புவதாகத் தேசியத் தலைவருக்குத் தனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தார்.  திலீபன் உண்ணா விரதத்தை ஆரம்பித்த 12 நாட்களும் இலட்சக்கணக்காக மக்கள்  திலீபனைச்  சுற்றி இருந்தார்கள்.  அதை விட  கவிஞர் காசி ஆனந்தன்,

கப்டன் வானதி, தமிழீழப் பெண்கள் என அனைத்து  கவிஞர்களும் கண்ணீர் மல்க  கவிதைகளை பொழிந்த வண்ணம் இருந்தார்கள். அனைத்து தமிழ்த்  தாய்மார்களும் கண்ணீர் சிந்திய வண்ணம் இருந்தார்கள்.  திலீபன் இறுதி மூச்சு நிக்கும் வரை தனது கருத்துக்களை மக்களிற்கு விதைத்த வண்ணம் இருந்தான்.  தான் செத்த பின்னர் தனது உடலை பல்கலைக்கழக மாணவர்கள் ஆராட்சி மற்றும் படிப்புக்காக வழங்குமாறு கட்டளை வழங்கினான்.

தொடர்ந்து 12 நாட்களின் பின் அவனின் உயிர் பிரிந்தது.இந்த உண்ணா விரதத்தை இந்திய அரச தலைவர் ராஜீவ்காந்தி சிறிதளவும்  மதிக்கவில்லை. மாறாக ஆயுத வன்முறையூடாகத் தமிழ் ஓட்டுக்குழுக்களின் உதவியோடு வன்முறைகளைப் பயன்படுத்தியது இந்திய  இராணுவம்.  திலீபனை அவ்விடத்தில் இருந்து கலைப்பதற்கு பல நடவடிக்கைகளைச் செய்தது இந்திய இராணுவம், ஆனால் திலீபனைச் சுற்றி லட்சக்கணக்கில் மக்கள் கூடியிருந்த காரணத்தால் அவர்களால் எதையும் செய்ய முடியாமல்போனது.  ஆனால் திலீபனின் உண்ணாவிரதப்  போராட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.  இந்தியாவின் கபட நாடகத்தை தமிழர்களிற்கு வெளிப்படுத்திய பெரும் தியாகியாக திலீபன் தமிழர்களால் மதிக்கப்படுகின்றான்.
அவர் இறுதியாகச் சொன்ன வசனம் இவைதான் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்,  சுதந்திர தமிழீழம் மலரட்டும், அதை 621 மாவீரர்களோடு தானும் ஒருத்தனாக  வானத்தில் இருந்து பார்ப்பதாகச் சொல்லி பன்னிரு நாட்கள் நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து 27/09/1987 வீரச்சாவு அடைந்தார்.

அவரின் கொள்கையை ஏற்றுக்கொண்டு அவரின் கனவை நனவாக்க சுமார் ஐம்பதினாயிரம் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் போராடி வீரச்சாவு அடைந்தார்கள்.  என்பதை நாம் மறந்து விட முடியாது.
நல்லூர் வீதியிலே பல லட்சக்கணக்கான தமிழ் மக்களின் கண்ணீருடன் திலீபன் முன்வைத்த எவ்விதமான நிபந்தனையும் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் திலிபனின் உயிர் பிரிந்தது,


திலீபனின் மரணத்திற்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் இந்திய இராணுவத்துடன் போராடுவது என முடிவு எடுத்தார். அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த கணிசமான போராளிகள் “நாம் இந்தியா இராணுவத்துடன் போராடி வெல்ல முடியாது;  நாம் முழுமையாக அழிந்து விடுவோம் “என தலைவருக்கு ஆலோசனை வழங்கினார்கள்.  இதைத்  தலைவர் மறுத்தமையால்  தங்களால் முடியாதுது எனச் சொல்லி அமைப்பில் இருந்து விலகி   வெளிநாடுகளிற்குச் சென்றார்கள்,

இவர்களின்   உறுதியில்லாத   மனநிலையைப் பார்த்து பெரும் கவலையும்  ஏமாற்றமும் தான் அடைந்ததாகவும் திலீபனின் கனவை நனவாக்க தான் மட்டுவாவது போராடி வீரச்சாவு அடைவது என  முடிவு எடுத்ததாகவும், போறவர்களெல்லாம்  போகட்டும் உறுதியாகப்   போராடக்கூடிய  பத்துப்பேர்  இருந்தால் காணும் என்று தான் வெளிப்படையாகச் சொன்னதாக தலைவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

 05/10/1987குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள் வீரச்சாவு

   இத்துரோகத்தோடு  இந்திய  அரசின் நடவடிக்கைகள் நின்று விடவில்லை.  02/10/1987 அன்று இயக்கத்தின் மூத்த தளபதிகள் லெப்.  கேணல் குமரப்பா லெப்.  கேணல் புலேந்திரன் உட்பட 17 போராளிகள் தமிழ் நாட்டில் செய்ய வேண்டிய பணிகள் நிமித்தம் படகேறி தமிழகம் சென்றார்கள்.  அங்கே  வேலைகளை முடித்து விட்டு மீண்டும் தமிழீழம் வந்து கொண்டிருந்த வேளை நடந்த சம்பவம்……
இந்திய  இலங்கை ஒப்பந்தப்படி  விடுதலைப் புலிகளை இலங்கைப் படைகள் கைது செய்யக் கூடாது, ஆனால் ஒப்பந்தத்தை மீறி சிறிலங்காப் கடற் படையினர்  பருத்தித் துறை கடற்பரப்பில் வைத்து நமது போராளிகளை கைது செய்தது.  அவர்களை கைது செய்து மிகுந்த பாதுகாப்பிடமான பலாவி விமானத் தளப் பகுதியில் அமைந்திருந்த இராணுவப் பகுதிக்குக்   கொண்டு சென்றார்கள்.
தகவல் அறிந்ததும் தலைவர் அவர்கள் அப்போது இந்தியத்  தரப்போடு தொடர்பு கொள்ளும் புலிகளின் இணைப்பாளராகச் செயற் பட்டுக் கொண்டிருந்த கேணல்.  சங்கரை இந்தியா அதிகாரிகளோடு பேசி அவங்களை மீட்குமாறு அனுப்பி வைத்தார். இந்தியா அதிகாரிகள் அவர்களை விரைவில் விட நடவடிக்கை எடுப்பதாக சங்கரிடம் தெரியப்படுத்தினர். 
ஆனால் 05/10/1987 அன்று அவர்கள் அனைவரையும் கொழும்பு கொண்டுபோக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவததகவும், அப்படிக்  கொண்டுபோக நினைத்தால் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகவும் தங்களின் கடிதங்களைத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்கள் தளபதிகள்.   தங்களிற்கு சைனட் குப்பிகளை உடனே அனுப்புமாறு தகவல் அனுப்யிருந்தனர். 
குமரப்பா, புலேந்திரனை கொழும்புக்கு கொண்டு சென்றால் என்னென்ன  சித்திரவதைகள் செய்வார்கள் என்பது எமக்கு தெரியாத விடயம் அல்ல, அப்பொழுது மன்மதன் இல்லத்தில் நின்றவர்களிடம் குப்பி கேட்டு வேண்டப்பட்டது.  அடுத்து எனக்கும் பா. நடேசனிற்கும் சிங்களம் தெரியும் என்பதால் குப்பிகளை கொண்டு அவர்களிடம் கொடுக்கும் பொறுப்பை எங்களிடம் தலைவர் ஒப்படைத்தார். அத்துடன் சங்கரும் நாங்கள் மூவரும் தயார் செய்யப்பட்ட  உணவுப் பொதிகளுடன் பலாலி நோக்கி விரைந்தோம்.  பலாலியில் சுற்றி வர இராணுவத்தினர்; ஒரு மண்டபத்திற்குள் போராளிகள் தங்கவைக்கப்பட்டுயிருந்தனர்,



“சங்கர்அண்ணா” இந்திய  அதிகாரிகளோடு  பேசிக் கொண்டிருக்க நானும்  நடேசனும் உள்ளே சென்று காவலில் நிற்கும் சிப்பாயிடம் சிரிச்சபடியே சாப்பாடு கொண்டு வந்திருக்கின்றோம் கொடுக்கலாமா? என்று கேட்டேன்.  அவனும் சிரித்தவாறு அனுமதித்தான், உள்ளே சென்று சாப்பாட்டுப் பையைக்  கையளித்தேன், கைகளையும்  பரிமாறிக்கொண்டோம்.
சேர வேண்டியவை அவர்களின் கைகளிற்குச் சென்று விட்டன. சிறிது நேரம் அவர்களோடு உரையாடிவிட்டு மீண்டும் தலைவரிடம் சென்று நடந்தவற்றை தெரியப் படுத்தினோம்,  அன்று மாலை அவர்களைக்  கொழும்பு கொண்டு செல்வதற்காக பலவந்தப் படுத்தி  விமானத்தில்  ஏற்ற  முயன்றபோது அவர்கள் குப்பிகளைக் கடித்து உயிர் நீத்து விட்டனர்; என்ற செய்தி தலைவருக்கு வந்ததும் அனைத்துப் போராளிகளும்  பெரும்சோகத்தில் இருந்தார்கள்.
தலைவரின் முகம் ஆத்திரத்தின் உச்சமாக மாறியதை அவரது முகத்தை வைத்தே எம்மால் சொல்ல முடியும். நாங்கள் பலாலி சென்று இரவு அவர்களின் உடல்களை பொறுப்பெடுத்தபோது  எங்களிற்கு அதிர்ச்சியாக இருந்தது.  புலேந்தி, குமரப்பா இருவரது முகங்கள் கத்தியால் கீறிக் கிழிக்கப் பட்டிருந்தது.  திருமலையில் புலேந்தி பேரைக் கேட்டால்  சிங்களவர்கள் நடுங்குவார்கள்.  நேருக்கு நேர் மோதத் தைரியம் இல்லாத சிங்கள வெறியர்கள் அவர்கள் மீது கோபத்தைக்  காட்டி விட்டார்கள். 

                                       தலைவரிடம் வந்து அந்தச் செய்தியை சொன்னபோது அவர் எரிமலையாக மாறிப்போனார்.  புலேந்திரனை பொறுத்தவரை தலைவருக்கு எதிரான சதிகள் உமா மகேஸ்வரனால் நிகழ்தப்பட்டபோதும்;  தலைவர் தனிமையாக இருந்த போதும் தலைவருக்கு பக்கத் துணையாக செயல்பட்ட ஒரு சிலரில் இவரும் முக்கியமானவராகயிருந்தவர்.  மறுநாள் தீருவில் வெளியில் மாவீரர்களின் வித்துடல்களிற்கு  தீயோடு சங்கமத்திற்க்காக  வைக்கப்பட்டபோது அங்கு வந்து தலைவர் அஞ்சலி செலுத்தினார்.  அவரின் முகம் கடுமையான கவலையில்  காணப்பட்டது.  05/10/1987 அன்று இரவு 12 தியாகிகளின் உடல்கள் பெருந்  திரளான மக்கள் முன் நிலையில் தீருவில்லில் வைத்து தீயோடுசங்கமம் ஆக்கப்பட்டது. 9ம் திகதி இரவு வேளையில் யாழில் உள்ள பத்திரிக்கை நிறுவனம் புலிகளின் குரல்” நிதர்சனம் ஒளிபரப்புச் சேவை “அலுவலகம் மீது சிறிலங்கா வான்படைத்  தாக்குதல் நடத்தியது. இது இப்படி இருக்க 10/10/1987 இந்தியா இராணுவம் கிராமங்களை நோக்கி  நகரத் தொடங்கி விட்டது. 


அடுத்து இந்திய இராணுவத்தின் விடுதலைப் புலிகள் மீதான் நடவடிக்கை பற்றி விரிவாகப் பார்ப்போம், தொடரும் அன்புடன் ஈழமதி

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *