தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

பாகம் மூன்றின் எட்டாவது தொடர்
விடுதலைப் புலிகளை யாழில் இருந்து முற்றாகக் கலைப்பது அல்லது அழிப்பது என பல இராணுவ நடவடிக்கைகளுற்கான திட்டங்களைப் போட்டுக் கொண்டேயிருந்தது இந்திய இராணுவம்.
10/10/1987 மாலதியின் எதிர் நடவடிக்கை

உலகதின் நாலாவது வல்லரசான இந்தியா படைகளுடன் எமது தமிழீழப் பெண்களான தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் படையணி சண்டையிடுவதற்குத் தயார் ஆனாது1985ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி முதலாவது இராணுவப் பயிற்சியை இந்தியாவில் பெற்றாலும், அவர்களிற்கு சண்டை ரீதியான அனுபவம் மிகக்குறைவாகவே இருந்தது. ஏனெனில் ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகளின் நிர்வாக வேலைகளை திறமையாக தமிழகத்திலும் வன்னிக் காட்டிலும் செய்து வந்தார்கள்.
சில குறிப்பிட்ட தாக்குதலிற்கு அவர்கள் சென்றாலும் ஆண் போராளிகளிற்கு உதவியாகவே சென்றிருக்கின்றார்கள். ஆனால் இது முற்றிலும் வேறுபட்டதாகயிருந்தது.
தலைவரை இலக்குவைத்து இந்தியா இராணுவம் பல நடவடிக்கைகளை செய்யத் திட்டமிட்டுக்கொண்டி ருந்தமையால் தலைவரைப் பாதுகாப்பதா? அல்லது பெண் போராளிகளோடு சேர்ந்து அவர்களை வழி நடத்துவதா? அதை விட ஆழணிப் பற்றாக்குறை ஒரு பக்கம் என பொட்டுஅம்மான் மிகவும் குழம்பிய நிலையில் இருந்தார்.
அந்தப் பதட்டமான சூழ்லைநிலையை விளங்கிக் கொண்ட பெண் போராளிகளில் முதல் நிலைத் தளபதியாக தன்னை இனம் காட்டிய 2ஆம் லெப். மாலதி அவர்கள்….
அவசர அவசரமாக பெண் போராளிகளை அழைத்து ஒரு தாக்குதல் அணியை உருவாக்கினார். நாவற்குழிப் படைத்தளத்திலிருக்கும் இந்திய இராணுவம் முன்னேறினால் அதனை தடுத்து நேரடி மோதல் செய்வதென கோப்பாயில் பதினைந்து பேர் கொண்ட பெண்களணி தயாரானது. கைகளில் இரண்டொரு நாட்களின் முன் அவசர அவசரமாக வழங்கப்பட்ட AK 47, ஒரேயொரு ரவைக்கூட்டுடன் அதுகூட எல்லோரிடமுமில்லை. ஏனையவர்கள் ரவைகளைத் துணி முடிச்சில் கட்டியபடி, குண்டுகளுடன். தாக்குதலிற்கு தாயார் ஆகியிருந்தார்கள். திட்டமிட்டாற் போல் இந்திய இராணுவம் 10/10/அன்று 1087 ச யுத்த டாங்கிகள் சகிதம் முன்னேறி வந்தது, அப்பொழுது களத்தில் நின்றவர்களில் ஒரு சிலரைக் குறிப்பிடுகின்றேன்.
2ஆம் லெப் மாலதி, 2ஆம் லெப் கஸ்தூரி, வீரவேங்கைகள் விஜி, ஜெனா, தயா, ரஞ்சி தம்மிடம் உள்ளவற்றுடன் தயார் நிலையில்; முன்னேறிவந்த இந்தியப் படைகளுக்கும், இவர்களுக்கும் சண்டை ஆரம்பித்தது. கடும் சண்டை. ரவை முடிய முடிய நிரப்பி நிரப்பிச் சண்டை அப்போது, பெரும் பலத்துடன் பெருந் தொகையில் வந்து நின்ற உலகின் அன்றைய நான்காம் வல்லரசுப் படைகளோடு நின்று சண்டையிட முடியாத களநிலைமை. எம்மவர்கள் கோப்பாய்ச் சந்திநோக்கி சண்டையிட்டவாறு பின்னகர்ந்து கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தோம்,.
கள நிலமை முற்றிலும் மாறுபட்டு எதிரிக்குச் சாதகமாக வந்து கொண்டுயிருந்தது, மாலதிக்குத் தொண்டையில் பெருங்காயம். நடக்கமுடியவில்லை. விஜி மாலதியை இழுத்துச் செல்ல முயற்சி செய்தார், ஆனால் அவரும் காயப்பட்டார்,
இராணுவமோ நெருங்கிக்கொண்டிருந்தது. விஜி முயற்சித்துக் கொண்டிருந்தார் முடியவில்லை. வல்லரசுப் படைகளுடனான போரில் தன்னால் இழப்பு வரக்கூடாது என்று முடிவெடுத்த மாலதி சயனைட்டை அருந்தினார்.
“என்னை விட்டிட்டு ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடு” என்றபடி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் மாவீரரானார். இதுதான் பெண் போராளிகள் தனியாக நின்று சண்டையிட்ட ஆரம்ப கால வரலாற்று சமராக பதியப்பட்டுள்ளது.
12/10/1987 தலைவரைப் பிடிக்க இந்தியப்படை தரையிறக்கம். களத்தில் நின்ற போராளி தூயாமணி பின் வருமாறு குறிப்பிடுகின்றார்

…… இது இப்படி நடக்க பொட்டுஅம்மான் தலைமையில் இந்தியஇராணுவத்துடன் கடுமையான சண்டை நடைபெற்றது . இக்காலத்தில் சண்டையிடக்கூடிய குமரப்பா, புலேந்திரன் போன்ற தளபதிகளை இழந்து மிகவும் பலயீனமாகயிருந்தது எமது இயக்கம்.ஆனால் இந்திய இராணுவம் எதிர்பார்த்தது போல் தலைவர் அங்கே தான் நின்று பொட்டு அம்மானுக்கு கட்டளை வழங்கிக் கொண்டுயிருந்தார்.
இந்திய இராணுவத்தின் தரையிறக்கத்தை முறியடித்து சண்டையிட்டு வானில் இருந்து தரையிறக்கப்பட்ட இராணுவத்தினரின் உடல்களை எடுத்து மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. சண்டை முடிந்தும் 3 நாட்கள் தலைவர் அங்கேதான் நின்றார். இருந்தும் மூத்த போராளிகள் வேறு இடம் செல்லுங்கள் என அழுத்தம் கொடுத்த காரணத்தால் தலைவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
தலைவரின் போராட்ட வரலாற்றில் மக்களைக் கூடுதலாக நம்பி இருந்த சம்பவங்கள் நிறையேவே உள்ளன. மக்களும் தலைவரைக் கைவிடவில்லை தலைவரும் மக்களை ஏமாத்தவும் இல்லை. யாழ் பல்கலைக் கழகத்துக்கு அருகில் கொக்குவில் பகுதியில் பிரம்படி வீதியில் விடுதலைப் புலிகளின் முக்கியத தலைவர் நிலை கொண்டிருப்பதாக அவர்களின் ரேடியோ தொலைத் தொடர்பை ஒட்டுக் கேட்ட இலங்கை இராணுவத்தின் உளவுத்துறை இந்திய அமைதிப் படைக்குத் தகவல் கொடுத்தது.
தலையை அகற்றி விட்டால் புலிப் போராளிகள் சீர் குலைந்து, மனம் தளர்ந்து எதிர்பைக் காட்டாமல் சரணடைந்து விடுவார்கள் என்று இந்தியா அரசு நம்பியது.விமானப்படையின் முழு பலத்துடன் ஒரு கொமாண்டோ தாக்குதல் நடத்துவது என இந்தியா அரசால் திட்டம் தீட்டப்பட்டது. அதற்கு அமைவாக தலைவர் தங்குமிடத்தை அவர்கள் தேர்ந்து எடுத்தார்கள்,
இந்திய இராணுவத்துடன் நடைபெற்ற சண்டை பற்றி போராளி தூயாமணி குறிப்பிடுகையில்

09/10/1987அன்று இந்திய இராணுவத்துடன் முதலாவது சண்டையிடுவதற்காக நிராயத பாணிகளாக இருந்த எங்களை அப்பொழுது எங்களிற்குப் பொறுப்பாகயிருந்த லெப் கேணல் சந்தோஸ் மாஸ்ட்டர் அவர்கள் உடனடியாக எங்கள் எல்லோரையும் கோல்ப்பாக் என்ற இடத்திற்கு வருமாறு சொல்லியிருந்தார், உடனே நாங்கள் அவ் இடத்திற்கு 25 ந்திற்கு மேற்பட்ட போராளிகள் வந்து நின்றோம்,
அங்கே ஒரு வானில் சந்தோஸ் மாஸ்டர் வந்து இறங்கினார் உள்ளே கிறிஸ் வைக்கப்பட்டு பொழுத்தினால் சுத்தப்பட்ட ஆயுதங்கள் வாகனத்தில் வந்திருந்தது அதில் RPG உந்துகணை செலுத்தி உட்பட AKLGகளும் வந்து இருந்தது ஒவ்வொரு போராளிகளையும் கூப்பிட்டு ஒவ்வொருதராக ஆயுதங்களை மாஸ்ட்டர் எடுத்துக் கொடுத்தார் நாங்கள் அனைவரும் மண்ணண்ணையால் கிறிஸ்சைக் கழுவி சுத்தம் செய்தோம்,அதில் எனக்கு ஒரு ஓட்டோ SLR துப்பாக்கி ஒன்றும் மேலதிக ரவையாக 100 தரப்பட்டது ஆனால் கோழ்சர் எதுகும் தரப்படவில்லை, அதனால் நான் சாரத்தில் சுற்றி இடுப்பில் கட்டினேன், அனைவரும் எனது நடைமுறையைத்தான்பின்பற்றினார்கள்,
அப்பொழுது எங்களைக்கொண்டுபோய் கோட்டைப்பக்கமாகயிருந்த வேம்படி பகுதியில் எங்களை விட்டார்கள்,கோட்டையில் இருந்து வரும் இந்திய இராணுவத்தை தாக்குவதற்காக நிலையடுத்து தயாராகியிருந்தோம், அமைதியா இருந்த இடம் திடீரென யுத்த டாங்கி இரையும் சத்தம் கேட்டது, கோட்டைப்பக்கமாக பார்த்துக் கொண்டிருந்தோம், யுத்த டாங்கி முன்னால் வர இரண்டு பக்கமும் இந்திய ஆமி நடந்து வந்து கொண்டுயிருந்தான், அதற்குப்பின்னாலும் நிறைய ஆமி வந்துகொண்டுயிருந்தார்கள் அவர்களை, நாங்கள் கண்டதும் குறிபார்துப்பார்துச்சுட்டுக் கொண்டிருந்தோம், சுட சுட நிறைய இராணுவம் தரையில் விழுந்தது.
ஆனால் அவர்கள் முன்னேற்றத்தை நிறுத்தவில்லை காயப்பட்டவர்களை ஒரு பக்கம் போட்டுவிட்டு இராணுவம் முன்னேறிவந்துகொண்டிருந்தது,
RPG அடி அடி என போராளிகள் கத்திக் கொண்டிருந்தார்கள், ஒரு போராளி குறிபார்த்து RPG ஆல் அடித்தான் அது டாங்கில்பட்டு வெடித்தது அதனால் கத்திக்கொண்டு சிறிது தூரம்பின் வாங்கியது இராணுவம்,, அத்தோடு தங்களின் முன்னேறைகையை அவர்கள் நிறுத்தினார்கள். அடுத்து சித்தங்கேணிப் பக்கம் முன்னேறுவதாக எக்களிற்குத் தகவல் கிடைத்ததால் குறிப்பட்ட போராளிகளை அவ்விடத்தில் வீட்டிட்டு சந்தோஸ் மாஸ்ட்டறின் தலைமையில் நாங்கள் வேகமாக அங்கே சென்றோம்.

அங்கே இருந்த போராளிகள் நாங்கள் அழைக்கும் (பண்டிக்குட்டி) அதாவது பெரிய கிளைமோர் என்பதே இதன் பொருள் அவர்கள் முன்னேறி வந்த இராணுவ வாகனத்திற்கு கிளைமோர் தாக்குதல் நடத்தி வாகனம் ஒன்றை பிரட்டி விட்டார்கள் அது பிரண்டுகிடந்தது, அவ் இடத்தில் 5 இந்திய இராணுவத்தின் பொடியும் நிறைய பழ ரின்களும் ஆயத ரவைகளும் கிடந்தது மற்றும் சாப்பாடுகளும் பரவிக் கிடந்தது, நாங்கள் போனதும் கடுமையான பசியாகயிருந்தமையால் அவ் பழ ரின்களை வெட்டி சாப்பிட்டோம்,, பின்னர் மருத்துபபீட மைதானதில் விமானத்தில் இருந்து தரையறக்கப் போறார்கள் என்ற தகவல் எமக்குக் கிடைத்து அங்கே சென்றோம் உடனே வேகமாக எங்களின் சந்தோஸ் மாஸ்டரின் அணி அங்கே சென்றது நாங்கள் சென்றதும் கல்லூரரி மைதானம் பக்கமாகயிருந்த 3சந்திப்பகுதியை அண்மித்து மைதானத்தில்தான் அவர்களின் தரையிறக்கம் நடக்கலாம் என எதிர்பார்த்து நின்றோம்,
நாங்கள் எதிர்பார்த்தது போல் அவர்களின் நடவடிக்கை அமைந்தது, அதைச் செயல் படுத்தும் விதமாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்குப் பக்கத்தில் அமைந்திருந்த விலையாட்டு மைதானத்தை இலக்காக வைத்து இந்திய இராணுவதினுடைய சீக்கிய பரசூட் கொமாண்டோக்கள் ஒன்றில் 19 பேர் படி இரண்டு கெலிக்கொப்டர்களில் 38பேரைக் ஹெலியில் இருந்து “பரசூட்” மூலம் மைதானத்தை நோக்கிக் குதித்தார்கள் சீக்கியக் கொமாண்டோக்கள்.மூத்த போராளி பொட்டம்மான் எங்களிற்கு அவ் நடவடிக்கைக்கு பொறுப்பாகயிருந்தார் லெ.கேணல் சாந்தோஸ்மாஸ்ட்டர் இருந்தார்
நான் உட்பட என்னோடு நிறையப் போராளிகளையும் முதல் வந்து நின்றதால் நாங்கள் சண்டையிடுவதற்கான இடவசதியை எங்களிற்கு ஏற்றவாறு அமைத்துக் கொண்டோம். அப்பொழுது நான் சண்டையிடுவதற்கு தயாராக நின்றமையால்”. நான் பல்கலைக்கழக முன்பக்கம் நின்றேன். மூன்று சந்தியும் அப்பக்கம் தான் இருந்தது, எனது கையில் ஓட்டோ S.L.R இருந்தது. இவ் நடவடிக்கைக்கு பொட்டம்மானே பொறுப்பாகயிருந்தார். ஆனால் நான் சந்தோசம் மாஸ்டரின் அணியுல் இருந்தேன்.
அப்பொழுது விடிகாலை 4 மணியிருக்கும் என நினைகிறேன்; ஆகாயத்தில் பேரிரைச்சலோடு ஹெலிச் சத்தம் கேட்டது. வானத்தைப் பார்த்தேன் சிறு ,சிறு வெளிச்சங்கள் தெரிந்தன. சண்டை தொடங்கி விட்டது வானத்தில் இருந்து நிறையப் பொதிகள் வருவது போல் எங்களிற்கு தெரிந்தது. நாங்கள் அப் பொதிகளை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தோம்;
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஹெலி போய்விட்டது. இராணுவம் மைதானத்திற்குள் இறங்கி விட்டதும் ஒரு சிலர் பொடியாக கீழ விழுந்தாங்கள். ஒரு சிலர் கீழே விழுந்ததும் பொய்ஷன் அமைத்து எங்களை நோக்கிச் சுட்டுக்கொண்டுயிருந்தார்கள். நாங்கள் பின் பக்கமாகச் சென்றவுடன் முதலாவதாக பொட்டுஅம்மான் R.P.G யால் தாக்குதல் நடத்திவிட்டு செறிவாக எங்களைச் சுடுமாறு கட்டளை வழங்கினார். நாங்கள் அவர்களை நோக்கிச்சுட்டுக் கொண்டுயிந்தோம்;
அதை அடுத்து மேல் மாடிகளிற்கு மேல் ஏறி போராளிகள் சுட்டுக்கொண்டிருந்தார்கள். எங்களிற்கு பக்கத்தில் நின்று கடாபியும் சுட்டுக்கொண்டு இருந்தார்.

இது இப்படி நடந்துகொண்டிருக்க சத்துருக்கனின் தலைமையில் ஒரு அணி குறோலில் சென்று இராணுவத்திற்குக் கிட்டே நெருங்கியது, ஆனால் நாங்கள் இராணுவத்தை தலை தூக்க விடவில்லை. மேல் மாடியிலிருந்து சுட்டுக்கொண்டேயிருந்தோம். எங்கட ஆட்கள் கிட்டே நெருங்கியதும் கைக் குண்டுகளை எறிந்து விட்டு உள்ளே இறங்கிச் சுட்டுக்கொண்டு சென்றார்கள்.
கைகலப்புச் சண்டையும் ஏற்பட்டது. அதில் பொட்டம்மான் காயப்பட்டார். ஹெலியில் இறக்கப்பட்ட 38 இராணுவத்தில் சுமார் 37 பொடிகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஒரு இராணுவம் உயிரோடு பிடிபட்டாரென போராளி தூயாமணி குறிப்பிட்டார்.
இது அந்தப் பக்கம் நடந்து கொண்டிருக்கத் தலைவர் இருந்த இடம் நோக்கித் தரை வழியூடாக வந்தது இந்திய இராணுவம். அதில் சம்மந்தப்பட்ட போராளி ஜெயராஜ் குறிப்பிடுகையில் …….

12/10/1987அன்று இரவு சண்டையிடுவதற்கான விடுதலைப் புலிகளின் திட்டத்தை அறிந்துகொண்ட இந்தியா இராணுவம் யாழ் நல்லூர் பகுதியைத் திடீரென முற்றுகையிடுவதற்கு தங்களைத் தயார்ப் படுத்திக் கொண்டேயிருந்தது இந்திய இராணுவம். அக்காலப்பகுதியில் தேசியத்தலைவர் நல்லூர்ப் பகுதியில் பிரம்படி என்ற இடத்தில் இருந்தார். தலைவரின் மனைவி கைக் குழந்தையுடன் அங்கேதான் இருந்தார். நல்லூரடியில் தலைவர் இருக்கின்றார் என்ற தகவல் இந்திய இராணுவத்திற்குத் தமிழ் ஒட்டுக் குழுக்கலூடாகத் தீயாய்ப் பறந்தது. தகவலறிந்த இராணுவம் பாரிய முற்றுகை ஒன்றைச் செய்து எப்படியாவது பிரபாகரனைக் கைதுசெய்வது அல்லது, கொலை செய்து விட்டால் இவர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்று இந்தியாவின் அதிபர் ராஜீவ்காந்தி நம்பினார். அதனால் மேலிடத்தில் இருந்து உடனே பிரபாகரனைக் கைது செய்யுமாறு அவர்களுக்கு அனுமதி வந்தது. இந்திய இராணுவம் உடனே இரவு 1 மணிக்கு நல்லூரடியைச் சுற்றிவளைப்பதாகத் திட்டமிட்டுக் கொண்டேயிருந்தது…….
இதை முன்கூட்டியே அறிந்த விடுதலைப்புலிகள், இது தொடர்பாக அதில் சம்பந்தப்பட்ட போராளி ஜெயராஜ் அவர்கள் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்…! “அப்பொழுது எங்களின் முகாம் வலிகாமத்தில் உள்ள பிரம்படியில்தான் இருந்தது. அங்கே தான் தலைவரும் அவரின் மனைவியும் இருந்தார்கள். அப்பொழுது அவரின் மனைவிக்கு ஒருகைக் குழந்தையும் இருந்தது. அனைவரும் நாங்கள் அங்கே இருக்கையில் திடீரென சண்டை ஆரம்பமானது
புகை மண்டலமாகவும் பெரும் வெடிச் சத்தமாகவும் அவ்விடம் பெரும் பதட்டமாகயிருந்தது . சனநெரிசலான இடம் என்றமையால் ஒரு குறிப்பிட்ட மக்கள் பதுங்குகுழியில் இருப்பதை அவதானித்தேன். அவரின் பாதுகாப்பிற்கு என நான் உட்பட 33 ற்கும் மேற்பட்ட போராளிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக் கொண்டுயிருந்தோம், அப்பாதுகாபிற்குப் பிரதான பொறுப்பாளராக லெப் .கேணல் இம்ரான் அண்ணையிருந்தார்.
அதே நேரம் பாடசாலை மைதானத்தில் இந்திய இராணுவம் பரசூட்டில் தரையிறக்கப்பட்டுக் கொண்டிருந்தது, அதனால் அங்கே கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது .அங்கே அது நடக்க, வரைபடத்தைப் பயன்படுத்தி ஏழிற்கு மேற்பட்ட இந்திய இராணுவம் எமது முகாம் சுடலைப்பக்கமாக கால்நடையூடாக முகாம் பின்பக்கம் நுழைந்து விட்டார்கள். இதைப் போராளி ரெட்னராஜ் (ரெட்டி) முதலில் கண்டு தாக்குதலை ஆரம்பித்து விட்டார். பின்னர் நானும் போராளி சற்குருவும் இன்னும் ஒரு சில போராளிகளும் வந்து இராணுவத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். அதேவேளை லெப். கேணல் இம்ரான் அண்ணையின் தலைமையில் பிரிகேடியர் சொர்ணம், பிரிகேடியர் கடாபி, மேலும் 20 போராளிகள் பாதுகாப்பாக நடந்து தலைவர் மற்றும் கைக்குழந்தையுடன் அவரின் மனைவி அனைவரையும் கூட்டிக்கொண்டு நல்லூர்ப் பகுதியில் இருந்த மன்மதன் இல்லம் என அழைக்கப்படும் எமது முகாமிற்கு பாதுகாப்பாகச் சென்றார்கள்.
நாங்கள் சண்டையிட்டு உள் நுழைந்த அனைவரையும் சுட்டு விட்டோம். பின்னர் ரவி அண்ணை வந்து மோட்டார் சைக்கிலில் என்னை ஏற்றிக்கொண்டு மன்மதன் இல்லத்தில் விட்டார், அங்கே தலைவர் மற்றும் மனைவி இருவரும் இருந்தார்கள்,.அடுத்து ஒரு சில நாட்களில் தலைவரின் உறவினர்களின் வீட்டிற்கு தலைவரின் மனைவியும் கைக்குழந்தையும் சென்றுவிட்டார்கள். பின் தலைவர் மட்டுமே எங்களோடு நின்றார். சண்டைகள் அனைத்தும் முடிந்த பின்னர் 15 / 10 / 1987 அன்று இரவு எப்படியாவது தலைவரை வேறு இடம் கொண்டுபோக வேண்டும் என இம்ரான் அண்ணை யோசித்துக் கொண்டிருந்தார்,
ஆனால் தலைவரும் இங்கு இருந்து வெளியேறப் போவது இல்லை எனவும், தான் செத்த பின்னர் தமிழக மக்கள் இந்திய இராணுவத்திற்குப் பாடம் படிப்பிப்பார்கள் என தமிழக மக்களை அதிகம் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் எப்படியாவது அவ்விடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே இம்ரான் அண்ணையின் திட்டமாகயிருந்தது. இது இப்படி இருக்க முதலாவது நடவடிக்கை தோற்கத் தன்மானப்பிரச்சனையில் இருந்தனர் இந்திய அதிகாரிகள். எப்படியாவது இரண்டாவது பாரிய நடவடிக்கை செய்துதலைவரைப் பிடிப்பதற்கு இந்திய இராணும் தன்னைத் தாயார் படுத்திக் கொண்டிருந்தது. இதை முன்கூட்டியே அறிந்த விடுதலைப் புலிகள் காலை 4 மணிக்கு அடிக்க வேண்டியே நல்லூர் கோயில் மணியை இரவு 1 மணிக்கு அடித்து மக்களை ஒன்று கூட்டினார்கள். இரவோடு இரவாக விடுதலைப் புலிகளிற்கு ஏதோ ஆபத்து நடக்கப் போகின்றது என்பதை விளங்கிக் கொண்ட மக்கள் உடுத்த உடுப்போடு கோயிலிற்கு ஓடிவந்தார்கள்.
நல்லூரடி மக்கள் வெள்ளமாக மாறியது, ஆனால் தமிழ் ஒட்டுக்குழுக்களும், இந்தியா இராணுவமும் நல்லூரை முற்றுகையிடுவதற்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டுயிருந்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தார்கள் பிரபாகரன் ஏதோ மக்களோடு பேசப்போகின்றார் அதில் வைத்து அவரைப் பிடிப்பது, அல்லது கொலை செய்வது இதுவே அவர்களின் திட்டமாகயிருந்தது. ஆனால் அச்சூழலையும், சன நெரிசலையும் சாதகமாகப் பயன்படுத்திய

லெப். கேணல் இம்ரான் அவர்கள் ஒரு “ரெலிக்கா “வானை ஒட்ட அதில் பிரிகேடியர் சொர்ணம்- பிரிகேடியர் கடாபி ,மேஜர் ரெட்டி, மற்றும் தலைவர் இவர்கள் பாதுகாப்பாக முன்னால் சென்று கொண்டிருக்க அடுத்த வாகனத்தில் அனைத்துப் போராளிகளும் தலைவருக்குப் பாதுகாப்பு வழங்கிய வண்ணம் இரண்டாவது வாகனத்தில் போய்க் கொண்டிருந்தோம். எங்களுடைய வாகனம் எமக்கு முன்னர் இருந்த பழை முகாம் ஒன்றிக்குச் சென்றது, அங்கே சென்றதும் எமது இரண்டாவது வாகனமும் எங்களோடு வந்து சேர்ந்தது. போன களைப்பில் பால் தேனீரும் போட்டு சிற்றுண்டிகளும் அனைவரும் சாப்பிட்டோம், எங்களோடு 33 போராளிகள் இருந்தார்கள்.
அவர்களில் எனக்கு ஞாபகம் உள்ளோர். 01) லெப். கேணல் இம்ரான், 02) பிரிகேடியர் சொர்ணம், 03)மேஜர் றோபட் (வெள்ளை) , 04) மாவீரன், 05).வீமன், 06),லெப் .கேணல் சுபன், 07) மேஜர் அரவிந்தன், 08) செபமாலை, 09) நசிர், 10)மேஜர் ரெட்னராஜ், 11)லெப் .கேணல் சிவாஜி, 12) பிரசாத், 13) டேவிற், 14) சக்குறு, 15) மேஜர் கைலன், 16) ஜெயராஜ், 17)லெப் ,கேணல் குட்டிச்சிறி, 18) பிரிகேடியர் கடாபி இதில் நிலை போட்ட அனைவரும் விரச்சாவு அடைந்துள்ளனர். நிலை போடாமல் உள்ளவர்கள் இது எழுதிக்கொண்டிருக்கும் போது உயிரோடு உள்ளனர், இதில் போராளி சக்குறு இயக்கக்கட்டுப்பாட்டை மீறினார் என்பதை உறுதிப் படுத்தியமையால் 1990 கடசிப்பகுதியில் இவருக்குச் சாவொறுப்பு வழங்கப்பட்டது,
அடுத்து 15 /10/1987 அன்று இரவு ஒரு பெரிய லொறியில் லெப். கேணல் இம்ரான் அவர்கள் லொறியை ஓட்ட தலைவர் அவருக்கும் பக்கத்தில் இருக்க அவருக்குப் பக்கத்தில் சொர்ணம் பாதுகாப்பு வழங்கிக் கொண்டுயிருந்தார், நாங்கள் 30 போராளிகளும் லொறிக்கு உள்ளே இருந்தோம். நாங்கள் பளையில் இருந்து கொம்படியூடாக சுண்டிக்குளம் போய்க் கொண்டிருந்தோம். இடையில் அவ் லொறி சேத்தில் புதைந்து விட்டது. பின்னர் அனைவரும் இறங்கி கால் நடையாக மீண்டும் பளை முகாமிற்கு திரும்ப வந்து அங்கே தங்கினோம். அடுத்து17 /10/1987 அன்று இரவு குட்டி அண்ண ஒரு பெரிய லொறியைக் கொண்டுவந்து எங்கள் அனைவரையும் பளையில் இருந்து ஏற்றிக்கொண்டு கொம்படி ஊடாக விசுவமடு சுண்டிக்குளம் போய் சேர்ந்தோம். அங்கு இருந்து 3 வாகனத்தில் எமது பயணம் ஆரம்பமானது. அதாவது தலைவர் சென்ற வாகனத்தை லெப். கேணல் இம்ரான் அவர்கள் ஒட்டிச் சென்றார் அதில் சொர்ணம், கடாபி, ஜெயராஜ், றோபேட், லெப். கேணல் குட்டிச்சிறி

இவர்கள் இருந்தார்கள், முதலாவது வாகனத்தை சுசிலன் 10ற்கு மேற்பட்ட போராளிகளோடு சென்று கொண்டிருக்க மூன்றாவது வாகனத்தை குட்டி அண்ணை ஒட்டிபின்னால் வந்து கொண்டிருந்தார். அதில் மிகுதி அனைத்துப் போராளிளும் வந்து கொண்டிருந்தார்கள், நாங்கள் போய்க் கொண்டிருக்கும் போது ஒன்பதாம் | கட்டையில் ஒரு வாகனம் காற்றுப் போய் விட்டது, அதைத் திருத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தோம். இடையில் லெப். கேணல் நவம் அவர்களும் தலைவர் சென்ற வாகனத்தில் வந்து ஏறிக்கொண்டார். அனைவரும் சென்று ஒட்டிசுட்டான் காட்டுபகுதியில் உள்ள ஒரு முகாமில் குறிப்பிட்ட நாட்கள் அங்கே தங்கினோம், இவர்கள் இடையில் வந்து கொண்டுயிருக்க மணலாற்றுக் காட்டுக்குள் அடுத்து தலைவர் எங்கே சென்றார் என்பதை விரிவாகப் பார்ப்போம்

தொடரும் அன்புடன் ஈழமதி
thaarani