பாகம் மூன்றின் ஒன்பதாவது தொடர்

என்ன நடந்தது என்பது பற்றி போராளி காசன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,

அப்பொழுது நாங்கள் மேஜர் பசிலன் அவர்களின் தலைமையில் மணலாற்றுப் பகுதியில்  கடமையாற்றிக் கொண்டிருந்தோம். அப்பொழுது பசீலன் திடீரென என்னை “வோக்கி டோக்கியில்” அழைத்தார், அப்பொழுது என்னோடு அவர் கதைத்தார், புதிதாக ஒரு குறூப் வருவதாகவும்; பொடியலையும் கூட்டிக்கொண்டு மணலாற்றுக் காட்டில் உயிர்ந்த காடுகள் உள்ள இடமாகப் பார்த்து ஒரு15 பேர் தங்கக் கூடியவாறு ஒரு “ரென்ட் கொட்டில்” போடுமாறு சொன்னார், அதற்கு நான் “மஞ்சள் ரென்ட் தான் என்னிடம் உள்ளது பச்சை நீலம் போன்ற ரென்ட் இல்லையென தெரிவித்தேன்,”
கதை சொல்ல வேண்டாம்! உடனே போய் செய் என கட்டளை வழங்கினார். உடனே நான் என்னோடு நின்ற போராளிகளான 01) லெப்.கேணல், சூட்டி 02)பிரிகேடியர் பால்ராஜ், 03) நாயகம்,  04) கேணல் அன்ரன், 05) மேஜர் கமல்,  06) ஜீவன், 07) மாவீரன் சாள்ஸ், இவர்களக்கூட்டிக்கொண்டு உடனே அங்கே சென்றேன்.இதுதான் மணலாற்றில் அமைக்கப்பட்ட முதலாவது பாசறையாகும், தரவைக்குப் பக்கத்தில் உள்ள உலத்து வெளி என்ற இடத்தில் அங்கே சென்று ஒரு “மஞ்சள் ரென்ட்” கொட்டிலை அடித்தேன்.

பின்னர் கீழே உள்ள காடுகளை சுத்தம் செய்தோம், பின்னர் வருபவர்களிற்குத் தேவையான தண்ணீர் உணவுக் களஞ்சியப் பொருட்கள் அனைத்தையும் வன்னியில் இருந்து தோள்களில் சுமந்துகொண்டு இன்னொரு சிறிய ரெண்ட் கொட்டில் அடித்து அப்பொருட்களை அதற்குள் வைத்தோம். அடுத்து சமைப்பதற்கான பாத்திரங்களும் கொண்டு வந்து அங்கே வைத்தோம், இதைச் செய்வதற்கு எமக்கு 5 நாட்கள் பிடித்தது.பின்னர் பசிலனிற்கு தொடர்பு எடுத்து “அனைத்தும் செய்து விட்டேன் “என அறிவித்தேன்.  எனக்கு நன்றி  தெரிவித்தார். இது நடந்து முடிய 25/10/ 1987 அன்று இரவு 7 மணிக்கு லெப். கேணல் நவம் அவர்கள் தலைவரோடு 30 திற்கு மேற்பட்ட போராளிகளக் கூட்டிக் கொண்டு கொம்பாஸ் உதவியோடு  நடையில்  வந்தார் அன்று இரவு தலைவர் அங்கே தங்கினார். 

இப்படி இருக்க யாழ்பாணத்தில் நின்ற போராளிகளுக்கு என்ன நடந்தது என்று அங்கே நின்ற போராளி தூயாமணி  பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,

பரிசூட் தரை இறக்கதத்தை திறமையாகச் செய்த  நாங்கள் பின்னர் கோண்டாவில் பக்கம் சந்தோஸ் மாஸ்ட்டரின் தலையில் கடுமையாக இந்திய இராணுவத்திற்கு எதிராகச் சண்டையிட்டுக் கொண்டுயிருந்தோம், ஆனால் இராணுவமும் எங்களிற்கு எதிராக கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தது அச்சண்டையில் எங்களை வழீ நடத்திய பொறுப்பாளரான லெப் கோணல் சந்தோஸ் மாஸ்ட்டர் அவர்கள்   21//10/1987 அன்று காலை 09 மணியளவில் அவர் வீரச்சாவு அடைந்தார்

இவரின் வீரச்சாவிற்குப் பின்னர்  சண்டையிடுவதற்கான எங்களின் கட்டமைப்பு முற்றாக உடைந்தது அங்கு இருந்த ஒரு போராளி சொன்னான் இனி ஒன்றாகவிருந்து செயல்பட்டால் எங்களை இந்திய இராணுவம்  அழித்து விடுவான் அதனால் இங்கே நிக்கும் போராளிகள் அனைவரும் உங்கட மாவட்ட அணிகளோடு போய்ச் சேர்ந்து இயங்குமாறு அவன் ஆலோசனை வழக்கினான், அதை அனைவரும் ஏற்றுக் கொண்டர்கள் தொடர்ந்து அனைவரும் வலிகாமத்தில் இருந்து தென்மராட்சிக்கு வந்தோம் அங்கு இருந்து திருமலை, மன்னார், மட்டு, வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகள் அனைவரும் அவரவர் மாவட்டங்களிற்குச் சென்று விட்டார்கள்,

நான் சாவகச்சேரியில் இயங்கிக் கொண்டுயிருந்த யாழ்மாவட்ட அணியான தமிழ்செல்வன் அல்லது தினேஸ் என்பவரின் அணியில் இணைந்து கொண்டேன், தொடர்ந்து பிரிகேடியர் தமிழ்செல்வன் என்னை  லெப்கேணல் செல்வராசா அவர்களின் அணியில் இனைத்துவிட்டார்,  அன்றிலிருந்து நான் அவரோடு கடமையாற்றினேன், எங்களின் கடமை இந்திய இராணுவத்தின் வாகணங்களிற் குண்டுகளை எறிந்துவிட்டு வேகமாக மறைவிடங்களிற்குச் சென்று விடுவதாகயிருந்தது. அப்படி இருந்தும் மாற்று இயக்கங்களை சேர்ந்த உறவினர்கள் நாங்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை இந்திய இராணுவத்திற்கு  கொடுப்பதால் பாரிய சுற்றிவழைப்புக்களைச் செய்து எங்களைப் பிடிக்கவரும்போது உயிருடன் பிடிபடாமல் குப்பி கடித்து பலர் வீரச்சாவு அடைந்துகொண்டிருந்தார்கள்

 தொடர்ச்சியாக இந்திய இராணுவம் சுற்றி வளைத்து தேடுதல் நடத்துவதால் ஒழுங்கான சாப்பாடு குளிப்பு என்பன எங்களிற்குக் கிடையாது இப்படிய எங்களின் போராட்ட வாழ்கை சென்றது, அடுத்து 1988 நடுப்பகுதியில் அங்கே சொர்ணம் வந்து எங்களில் 30 போராளிகளை தலைவரின் பாதுகாப்பிற்கு என கூட்டிக்கொண்டு வன்னிக்காட்டிற்குச் சென்றார் அன்றில் இருந்து மணலாற்றுக் காட்டில் தலைவரின் பாதுகாப்பு அணியில் நீண்ட காலம் இருந்ததாக தூயாமணி குறிப்பிட்டர். அடுத்து தலைவர் மணலாறு சென்று தொடர்ச்சி அங்கே இருந்ததும் ஒரு புது இடமாகவே தலைவருக்கு இருந்தது ஏனெனில் ஆரம்பகாலத்தில் புளியங்குளம் மன்னார், போன்ற காடுகளே தலைவருக்கு பழக்கமாகவிருந்தது.


ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மன்னார் வவுனிய போன்ற பெரும் காடுளிலே வாழ்ந்தார்கள் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன், 1983 ற்குப்பின்னர் லெப் கேணல் நவம் அவர்களின் அப்பா எமது தலைவர் மற்றும் மூத்த உறுப்பினர் வேபி அண்ணைக்கு மிகவும் நெருங்கிய நண்பாராகவிருந்தார்,  அதனால் அவரின் ஆலோசனைக்கு அமைவாக1883ற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அனைத்துக்காடுகளிலும் வாழ்ந்தாலும் அனைத்தும் பாதுகாப்பான இடமாகவே கருதப்பட்டது, ஆனால்12/10/1987ற்கு  பின்னர் அதாவது இந்தியா இராணுவம் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் தலைவரை கொலை செய்வதற்காக நடத்திய தாக்குதலிற்குப் பின்னர் முன்னர் நாம் வாழ்ந்த இடங்கள் பாதுகாப்பானதாகவிருக்காது என்பதே சில குறிப்பிட்ட மூத்த போராளிகளின் நம்பிக்கையாகயிருந்தது, 
இந்திய இராணுவத்துடன் கடும்மையாகக் சண்டையிட வேண்டிய துர்ப்பாகிய நிலை எமது இயக்கத்திற்கு கண்டிப்பாக ஏற்பபடும் எனவும்அப்படி சண்டையிடுவதாக இருந்தால் தலைவர் தப்பிச் சென்று   ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும் அப்படியிருந்தால் தான் போராட்டத்தை நடத்த முடியும் இதுவே மூத்த போராளிகளின் நிலைப்பாடாகவிருந்தது,.

அப்பொழுது ஒரு சில மூத்த போராளிகள் சொன்னார்கள் வவுனியாக்காடு நல்லம் என்று ஒரு சிலர் சொன்னார்கள் மன்னார் சிறந்தகாடு என்று ஆனால் இது இரண்டு இடங்களும் 1976ம் ஆண்டில் இருந்து சிறிலங்கா ஆரசாங்கத்திற்கு தெரிந்த இடம் அதனால் இவ் இரு இடங்களையும் இந்திய இராணுவத்திற்குப் பிடிப்பது இலகுவாக இருக்கும் என்பதை விளங்கிக்கொண்ட தலைவர் லெப் கேணல் நவம் அவர்களின் அப்பாவிடம் சென்று ஆலோசனை கேட்டார், 
ஏன் இவரிடம் கேட்டார் இவரின் திறமை என்ன இவர் ஒரு சிறந்த வேட்டைக்காரனும் மணலாற்று காடுபற்றிய முழுமையான அறிவும் உடையவர் என்பதும் குறிப்படத்தக்கது  அதைவிட  அவரின் மகன் லெப் கேணல் நவம் அவர்கள் எமது இயக்கத்தில் மிகவும் விசுவாசமான போராளியாகவும் எமது போராட்டத்தின் வழர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்தவர் அத்தோடு அவரின் அப்பா Dady அவர்களும் எமது அமைப்புப் பற்றியும் தலைவர் பற்றியும் மிகவும் நம்பிக்கையும் விசுவாசமும் உள்ளவர், அதனால் அவர்களின் அப்பா அவருடைய மகனான லெப் கேணல் நவம் அவர்களிற்கு மணலாறு பொருத்தமான இடம் என்று முன்கூட்டிய சொல்லி வைத்திருந்தார், அவரின் ஆலோசனைக்கு அமைவாகவே தலைவர் அங்கே செல்வதற்கு முடிவு எடுத்தார் தலைவர் சென்றதற்கு பின் குறிப்பிட்ட  6 மாதத்திற்குப் பின்னர்அவரும் அவருடைய இரண்டு நாய்களுடன் அங்கே  போய் நின்று வழிகாட்டியாகவும்  அவர்களோடு மணலாற்றுக் காட்டிலே வாழ்ந்தும் உள்ளார். அவர் எம்மவர்களை விட்டுப் பிரியும்போது  மையில் குஞ்சு என்ற சிறந்த பாதை காட்டியையும் அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றுள்ளார்,

அங்கே சென்றதும் தலைவர் என்ன மாற்றங்களைக் கொண்டுவந்தார் என்பது பற்றி போராளி காசன் அவர்கள் குறிப்பிடுகையில்,

உதயம் என்றால் ஆரம்பம் என்பதைக் குறிக்கும் உதயபீடம் இந்த முகாமிற்கு ஆரம்பத்தில் தேவன்  சமுத்துரன், அடுத்து மேஜர் அரவிந்தன், இவர்கள் அம்முகமிற்குப் பொறுப்பாகவிருந்தனர், இங்கே போராளிகளை உருவாக்குதல் சண்டைக்கான பயிற்சிகள் சூட்டுப்பயிற்சிகள் தலைவரின் சந்திப்பு முகாமாகவும் இது இருந்தது, அடுத்தது நீதிதேவன் இதற்கு கேணல் சங்கர் அவர்கள் பொறுப்பாகவிருந்தார்,  அங்கே கேணல்கிட்டு மற்றும் பிரிகேடியர் சொர்ணம் போன்ற முக்கிய பொறுப்பாளர்கள் அங்கே சென்று வருவார்கள் ஏணைய போராளிகள் அங்கே செல்ல முடியாது, அங்கே தவறு விடும் போராளிகளை விசாரித்து நீதி வழங்குதல் கடுமையான தவறு விடுபவர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களிற்கு சாவொறுப்பு அங்கே வைத்து வழங்கப்படும்,

வசந்த நாடு என ஒரு முகாம் இருந்தது அங்கே வெளி ஆட்களைச் சந்திக்கும் இடமாக அது இருந்தது பிரமதாசாவோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பேச்சுவார்த்தைக்கு கொழும்பிற்கு சென்று  யோகிஅண்ணை  ஏணயவர்கள் அங்கிருந்துதான் கெலிக் கொப்டர் மூலமாக போய் திரும்பி வரும். இடமாக அது இருந்தது, அதே காலப்பகுதியில் புனித பூமியில் இருந்துகிட்டு அண்ணையை கிழச்சேசில்  நாலு போராளிகள் தூக்கிச் செல்ல பல போராளிகள் பாதுகாப்பு வழங்கிச் சென்று அங்கே இறக்கி  வைத்தனர்  பின் கெலி வந்ததும் அவரின் கண்ணால் கண்ணீர் வழிந்தது கண்ணீரைத் துடைத்துவிட்டு போராளிகற்குக்கை காட்டிக்கொண்டு கிட்டு அண்ணை கொழும்பிற்குக் சென்றார் கெலி 100 மீற்றர் பறந்து கொண்டுயிருக்கும் போதே கையைக்காட்டிக்கொண்டே சென்றார் அதைப்பார்த்த போராளிகளும் கண்ணீர் விட்டு அழுதார்கள்,,  அங்கு இருந்து பின்னர் லண்டனிற்குப் போனார்,

அமுதகானம் இதற்கு சிவா பொறுப்பாகவிந்தார் அடுத்து கப்டன் தீபன் பொறுப்பாக இருந்தார்,,இது களஞ்சி முகாமாகவிருந்தது.இங்கே தான் அனைத்து உணவுப் பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டுயிருந்தது அனைத்து முகாம்களில் இருந்து போராளிகள் இங்கே வந்து தான் தக்களிற்கான சமைப்பதற்கான பொருட்கள், பரமரிப்பு பொருட்களான  சோப்,  சம்போ மற்றோம் உடுப்புக்களையும் வேண்டிக் கொண்டு செல்வார்கள்,, இதற்குப் பக்கத்தில்தான் வெதுப்பகவும் அமைக்கப்பட்டிருந்தது அதற்கு பிரிகேடியர் காடாபி அண்ணையின் அப்பா அவ் வெதுப்பகத்தை நடத்தி வந்தார் அவர் அனைத்துப் போராளிகளிற்கும் சுவையான பாண்களை செய்து வழங்கினார், மகனும் ஒரு சிறந்தபோராளி ஆனால் தகப்பனும் ஒரு போராளி போன்றே  கடமையாற்றினார், புனித பூமி அங்கேதான் தலைவர் இருந்தார் அதற்கு தியாகு பொறுப்பாகவிருந்தார் ,தலைவரின்கண்காணிப்பில்தான் பெண் போராளிகளும் இருந்தார்கள், அவரின் பாதுகாவலர்களும் அவரைச் சுற்றி இருந்தார்கள்

அவரின் முகாமிற்குப் பக்கதில் பெண் போராளிகளின் முகாமும் இருந்தது. அவர்களுக்குப் பொறுப்பாக மேஐர் சோதியா, அவர்கள் இருந்தார், அவருக்குக் கீழே பல பெண் போராளிகள் இருந்தார்கள், அங்கே ஒரு கிணறு இருந்தது அதற்கு நேர அட்டவனை போட்டு ஒரு நாள் அண் போராளிகள் அதைப்பயன்படுதுவார்கள் அடுத்த நாள் பெண் போராளிகள் அதைப்பயன்படுத்துவார்கள் அங்கே இருந்தவர்களை அவர் குறிப்பிடும்போது பிரிகேடியர் சொர்ணம் .பிரிகேடியர் கடாபி. மேஜர் றோவட், கரும்புலி மேஜர் காந்தரூபன், கரும்புலி கப்டன் கொலின்ஸ், போராளி காசன், மேஜர்சேரன், கப்டன் அந்தோனி, லெப் பூவதி, கப்டன் நிவாஸ், கேணல் அன்ரன், இவர்கள் அனைவரும்  அங்கே இருந்ததாகக் குறிப்பட்டுள்ளார், வேறு சிலரும் ஆரம்பத்திலே அமைப்பில் இருந்து விலகி வெளிநாடுகளில் வாழ்வதாகக் குறிப்பிட்டார்.

நாசகாரி என ஒரு முகாம் இருந்தது அதற்கு போராளி டானியல் பொறுப்பாக இருந்தார், அங்கே செபமாலை,, போராளி கிறிஸ்தோபர் என பல போராளிகள் அங்கே இருந்தார்கள் அங்கேதான் போராளிகளுக்கான சூ உற்பத்தி செய்யப்பட்டது, இத்தேவையை முன்கூட்டிய அறிந்த தலைவர் வல்வெட்டித்துறையில் இருந்து சூ தைப்பதில் அனுபவம் பாய்ந்த இரண்டு பேரை அங்கே இருந்து ஏற்றிக்கொண்டு எமது முகாமிற்குக் கொண்டுவந்தனர், அடுத்து அதற்கான அடிப் பாதங்கள் அதற்கு பயன்படுத்தப்படும் மாட்டுத்தோல் பிளாஸ்ரிக் உதிரிகள் ஒட்டும் பசைகள் அனைத்தும் கொழும்பில் இருந்து பெரும் தொகையாக வேண்டப்பட்டது, அடுத்து கிறிஸ் தோமரின் தலைமையில் 15 போராளிகளைவிட்டு அவ்வேலையை பழக்கியதோடு மட்டும் இன்றி ஆயிரக்காணக்கான சூக்கள் அங்கே செய்யப்பட்டது, 

அடுத்து அங்கேதான் மிதிவெடிகளும் அதாவது ஜொனிமிதிவெடி ஏனைய கிளைமோர் வெடி பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டது, தளபதி மாத்தையா அவர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம், இந்தியா இராணுவத்தோடு சண்டையிட விரும்பாத போராளிகளில் தளபதி மாத்தையாவும் ஒருத்தர், என்பதும் இந்தியாவினுடைய றோவிற்கு நன்கு தெரியும்.பிரமதாசா அரசுக்கும் விடுதலைப் புலிகளிற்கும் இடைய ஏற்பட்ட உறவு நிலையை றோ அறிந்து விட்டது, அதனால் மிக விரைவாகத் தலைவரைக் கொலை செய்து அவர்களின் போராட்டத்தை முற்றாக அழிப்பதின் ஊடாக தாங்கள் தான் விடுதலைப் புலிகளை அழித்த நாங்கள் தமிழர்களை பாது காற்கவேண்டிய பொறுப்பு எங்களிற்கு இருக்கின்றது என சொல்லி மாத்தையா போன்றவர்களை விடுதலை புலிகளின் தலைவராக்கி நிரந்தரமாகவே இலங்கை அதாவது தமிழர் பகுதியில் இருப்பதே அவர்களின் திட்டமாகவிருந்தது,

அதற்கு தலைவர் எங்கே இருக்கின்றார் என்பதை சரிகாக அறிய வேண்டிய தேவை இந்தியா அரசபடைகளிற்கு இருந்தது,  1987ல் தலைவர் இந்தியாவிற்கு பேச்சுவார்த்தைக்குச் செல்லும் போது தனக்கு ஏதாவது நடந்தால் தனது இடத்திற்கு மாத்தையாவை நியமித்த பின்னரே  சென்றார் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன் அதனால் தலைவர் இல்லை என்றால் தான்தான் தலைவர் என்ற  நம்பிக்கை மாத்தையாவிற்கும இருந்தது, அதனால் தலைவர் மணலாற்க்குக் காட்டில் தளம் அமைத்து இந்திய படைகளோடு சண்டையிடுவதற்கு தயார் ஆகயிருந்தார், ஆனால் அக்காலப் பகுதியில் மாத்தையாவும் அவரின் பாதுகாவலர்களும் நெடுங்கேணியில் இருந்தார்கள்,

ஆனால் மாத்தையாவைப்பிடிக்க வேண்டிய தேவையோ அல்லது கொல்ல வேண்டிய தேவையோ இந்திய படைகளிற்கு இருக்கவில்லை அவர்களின் இலக்குப் பிரபாகரனாகவே இருந்தது, அதனால் எப்படியாவது பிரபாகரன் இருக்கும் இடத்தை அறிய வேண்டும் என்பதற்காக இந்தியாவின் உளவு நிறுவனமான றோ தலைமைத்துவப் போட்டி காரணமாக பிரபாகரனிக்கும் மாத்தையாவிற்கும் நடந்த கைத்துப்பாக்கிச் சண்டையில் பொருத்தமான இடத்தில் வெடிப்பட்டு பிரபாகரன் அவ் இடத்திலே கொல்லப்பட்டதாக இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்திலும் செய்தி பரப்பப்பட்டது, அவர்கள் எதிர்பார்த்தது இருவரும் பக்கத்தில் நின்று ஒரு படத்தை வெளியிட்டால் இருவரும் இருக்கும் இடம் வன்னி என்பதை உறிதிப் படுத்தலாம் என்பதே அவர்களின் திட்டமாகயிருந்தது,

ஆனால் மாத்தையா இருக்கும் இடம் முன்னரே இந்தியப்படைகளிற்குத் தெரியும், ஆனால் இதை அறிந்த வடகிழக்குத்தமிழர்கள் கண்ணீர் விட்டு அழுதினார்கள். கிழக்கு இலங்கையைச் சேர்ந்த பிறேஸ்காட் சின்னத்தம்பி என்பவர் தலையில் மண் அள்ளிவைத்து மாத்தையாவை சுட்டுக் கொல்லுங்கோ என்று ஒப்பாரிவைத்தார். இதுதான் வடகிழக்கு தமிழர்களின் நிலையாக இருந்தது.இதை அறிந்த விடுதலைப்புலிகள் தலைவரின் புனிதபூமி முகாமில் இருந்து தலைவரின் மேற் பாதுகாவலர்களின் ஒருதர் ஆன தளபதி சொர்ணம் அவர்களின் தலைமையில் 20 போராளிகள் நெடுங்கேணிக்குச் சென்றார்கள் அங்கே சென்றதும் அவரின் பாதுகாவலர்களோடு மாத்தையா ஒரு இடத்திற்கு வந்தார், அவ் இடத்தில் இருந்து தளபதி மாத்தையா அவர்களை மட்டும் நாங்கள் எடுத்துக்கொண்டு அவரின் பாதுகாவலர்களை முகாமில் போய் நிற்குயமாறும் பின்னர் அவரை உங்களிடம் கொண்டு வந்து ஒப்படைப்பதாகச் சொல்லி விட்டு புனித பூமியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்

அவர் மிகவும் களைப்பாகக் காணப்பட்டார், இடைக்கிட இருந்து இருந்து மெதுவாக நடந்து வந்தார், அங்கே சென்றதும் தலைவரும் மாத்தையாவும் சிறிது நேரம் கதைத்ததும் இருவரும் ஒன்றாக நின்று படம் எடுத்தார்கள் அதை அடுத்து அவரைக் கூட்டிக்கொண்டு போய் நெடுங்கேணியல் விட்டிட்டு வந்ததாகப் போராளி தூயாமணி குறிப்பட்டார் தலைவரும் மாத்தையாவும் ஒன்றாக நின்று எடுத்த ஒரு படத்தை வெளியிட்டு தலைவரிக்கும் மாத்தையாவிற்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை இது போலியானது. இதில் எவ்விதமான உன்மையும் இல்லையென மக்கள் இதை நம்ப வேண்டாம் என்று இலங்கை வீரகேசரியில் இச்செய்தி வெளியானது.

பின் இந்திய ஊடகங்களிலும் இச்செய்தி பரவியது, ஏன் இந்தச்செய்தியை றோ பரப்பியது மாத்தையா மீது விடுதலை புலிகளின் தலைவர் சந்தேகப்படுகின்றாரா? இல்லையா என்பதை உறுதிப்படுத்தவே றோ இந்தத்தகவலைப் பரப்பியதுஅடுத்து தலைவர் வன்னியில் உள்ளார் என்பதை அறிவதே அவர்களின் திட்டமாகயிருந்தது ஆனால் விடுதலைப் புலிகளின் அறிக்கைக்கும் பின்னர் விடுதலை புலிகளின் தலைவரோ அல்லது தளபதிகளோ மாத்தையாமீது சந்தேகப்படவில்லை என்பதையும், அவர் வன்னியில்தான் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்தவே லெப் கேணல் ஜொனி அனுப்பப்பட்டார் .தொடர்ந்து இந்தியாவிற்கும் தளபதி மாத்தையாவிற்கும் இரகசியத்தொடர்வு நடந்துகொண்டுயிருந்தது இதின் விளைவு எப்படி இருந்தது என்பதை அந்தந்த ஆண்டுகள் வரும் போது குறிப்பிடுகின்றேன்

அப்பொழுது ஒப்ரேசன் பவான் நடவடிக்கை ஒன்றை செய்வதற்கு இந்தியா இராணுவம் திட்டமிட்டுக் கொண்டிருந்த காலம் அது

தலைவரைக் கொல்வது  அல்லது கைது செய்வது இதுவே அவர்களின் திட்டமாகவிருந்தது அதை முறியடிக்கத்தான் தலைவர் ஜொனி அவர்களின் பேரில் இந்த மிதிவெடியை உருவாக்கி முன்னேறிவரும் இந்திய இராணுவத்தை அழிப்பதே அவரின் திட்டமாகவிருந்தது,

ஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்க வைத்த சொல்.!
ஜொனி மிதிவெடியை தவிர்த்து, தமிழரின் போரியல் வரலாறு முழுமை பெறாது.!
இந்த மிதிவெடி உருவாக்கிய போது புலிகளமைப்பில் 650 க்கு மேற்பட்ட போராளிகள் விரச்சாவு அடைந்திருந்த வ போதிலும் ஏன்?  இந்த மாவீரரின் பேரை  தலைவர் தேர்ந்து எடுத்தார்,?


இதை அறிவதற்கு ஜொனி அண்ணையின் வரலாற்றையும், மிதிவெடி உருவான வரலாற்றையும் அறிய வேண்டும்.!
லெப். கேணல்.ஜொனி அண்ணை 1980களின் ஆரம்பத்தில் தனது பல்கலைக்கழக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தன்னை போராட்டத்தில் இணைத்திருந்தார். இவரது ஆரம்பகால போராட்டவாழ்க்கை கிட்டண்ணையுடனேயே ஆரம்பித்தது.இந்த நேரத்தில் தான் இந்திய அரசு புலிகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் ஆயுதப் பயிற்சியளிக்க முன்வந்தது.இந்திய இந்த பயிற்சிக்கு முன்னரே புலிகளமைப்பு சுயமாகவே ஆயுதப் பயிற்சியை உருவாக்கி, தங்களை வளர்த்திருந்தனர்.
இந்த பயிற்சிக்கு முன்னரே சிங்கள இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதலை புலிகள் செய்திருந்தனர்.

அதில், இந்த உலகையே திருப்பிப் போட்ட திருநெல்வேலிதாக்குதலும் அடங்கும்.இந்திய அரசின் முதலாவது பயிற்சிக்காக ஜொனி அண்ணையும் தமிழ்நாடு சென்றார். அங்கு அவர் இராணுவப் பயிற்சிக்கு செல்லாமல் இந்திய அரசு அளித்த தொலைத்தொடர்பு பற்றிய பயிற்சி ஒன்றுக்கு தலைவரால் அனுப்பி வைக்கப்பட்டார்.
உலக இராணுவப் பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது, இந்திய இராணுவம் வழங்கிய பயிற்சிகள் தரம் குறைந்ததாகவே வழங்கப்பட்டது. ஏனெனில் அவர்களுக்கு புலிகள் மீதோ எமது மக்கள் மீதோ எந்தவித கரிசனையும் இல்லை.
ஒரு கட்டுக்கோப்பான அடிப்படைப் பயிற்சியின் ஆறிமுகத் தேவை கருதியே புலிகள் அன்றைய பயிற்சியில் பங்கெடுத்தனர்.


இன்னொன்றையும் இதில் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். இந்திய இராணுவத்தின் ஆயுதங்களால் புலிகளமைப்பு வளர்க்கப்பட்டதான குற்றச் சாட்டையும் நான் மறுக்கவே செய்வேன்.
ஏனெனில், இந்திய இராணுவத்திடம் SLR, 303 போன்ற “ஒரு சூட்டுத் துப்பாக்கிகள்” (இப்போதும் தானியங்கி SLR துப்பாக்கி மற்றும் போலீஸ் 303 துப்பாக்கி பாவனையில் உள்ளது) பாவனையில் இருக்கும் போது, அந்த நேரத்தில் புலிகளிடம் AK-47, AK.MS, M-16, M-16.203, RPG, M-60.LMG போன்ற, அன்றைய அதி நவீன ஆயுதங்கள் புலிகளிடமிருந்தன.
சரியாக சொல்வதானால் சிங்கள அரசிடம் கூட இந்த ஆயுதங்கள் அப்போது இருக்கவில்லை.

புலிகளின் தொலைத்தொடர்பை பற்றி உலகறியும். அன்றைய நேரத்து அதிநவீன தொலைத்தொடர்பு வசதிகள் புலிகள்வசம் இருந்தது. இந்திய அரசு பயிற்சி என்ற பெயரில் கொடுத்தது   அதில் தங்கள் முயற்சியால் ரோடு போட்டது புலிகளே. அதன் வெளிப்பாடே புலிகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளும், அதன் மூலம் கிட்டிய சாதனைகளும்.
ஜொனியண்ணை பயிற்சியின் பின் கிட்டண்ணையுடனேயே பயணித்தார். 1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணையால் கொண்டு வரப்பட்டது.


கிட்டண்ணையால் சிங்களப்படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட, வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனியண்ணை முன்னின்று களமாடினார்.இந்திய–இலங்கை ஒப்பந்தம் உருவான போது கிட்டண்ணையுடன் தமிழகம் சென்றார். அங்கிருக்கும் போதே தாயகத்தில் இந்திய இராணுவத்திற்கு எதிராக புலிகள் சண்டையிட ஆரம்பித்திருந்தனர். இதனால் கிட்டண்ணையுடன் ஜொனி அண்ணையையும் சேர்த்து சில போராளிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதே நேரத்தில் இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் கடும் யுத்தம் மூண்டிருந்தது. சண்டையின் ஆரம்பத்திலேயே சந்தோசம் மாஸ்டர் உட்பட முக்கிய போராளிகளை நாம் இழந்திருந்தோம். அப்போது யாழில் இருந்து தலைவர் பத்திரமாக வன்னிக்கு நகர்ந்திருந்தார்.


இந்திய இராணுவத்தினருக்கு தலைவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாது குழம்பி நின்றனர். இந்திய இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கிய TELO, EPRELF, ENDELF போன்ற சமூக வீரோதக் கும்பல்களும் தலைவர் பற்றிய தகவல் அறிவதற்கு மக்கள் மீது பெரும் அட்டூழியத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருந்தது.
அப்போது சிங்கள அரசின் உதவியையும் நாடினர். அதனைத் தொடந்து சிங்கள உளவுத்துறையினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கிய புளொட் அமைப்பும் தங்கள் பங்குக்கு மக்களையே வதம் செய்தனர். கடைசிவரை தலைவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியாமல் முழித்தனர்.


இதே நேரத்தில் வீட்டுக் காவலில் இருந்த கிட்டண்ணை குழுவினருக்கு வெளித்தொடர்பை நிறுத்தி, இந்திய அரசால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளே இவர்களுக்கு கூறப்பட்டது. அதில் போராளிகள் அழிகின்றார்கள், இன்னும் சிறிது காலத்துக்குள் தலைவரை கொன்றுவிடுவார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டதால் கிட்டண்ணை குழுவினர் மனம் கலங்கினர்.
ஒரு பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த கிட்டண்ணை முடிவெடுத்து, இந்திய அரசுடன் பேசினார். இதைத்தான் அவர்களும் விரும்பினர். போரை நிறுத்துவதற்கு தலைவரின் அனுமதியை கேட்பதற்கு ஜொனியண்ணையை தூதுவராக அனுப்ப முடிவானது.


சில இழுபறிகளுக்கு பின் வவுனியா வரை ஜொனியண்ணையை இவர்களது உலங்குவானூர்தியில் கொண்டுபோய் விடுவதென்றும், அதுவரை போர் நிறுத்தம் ஒன்றை செய்வதாகவும் இந்திய அரசு அறிவித்தது. அவர் தலைவரை சந்தித்தபின் மீண்டும் குறிப்பிட்ட இடமொன்றில், ஜொனியண்ணையை இவர்கள் சந்திப்பதென்பதும் முடிவாகி இருந்தது.
அதன்படி ஜொனியண்ணை 1988ம் ஆண்டு இரண்டாம் மாத இறுதியில் வவுனியா நெடுங்கேணியில் இறக்கி விடப்பட்டார்.
இவரை அங்கு விடுவதற்கு முன்னர் இந்திய உளவுத்துறையினரின் ஏற்பாட்டில், இந்திய இராணுவத்தினரும் அவர்களின் கூட்டாளிகளான மாற்றுக்குழுவினரும் அவரை பின் தொடர்ந்து கண்காணிக்க ஊரெல்லாம் இறக்கி விடப்பட்டனர்.


இந்திய இராணுவத்தினர் தலைவர் இருக்குமிடமென மன்னார்க்காடு, மணலாற்றுக்காடு, அல்லது திரிகோணமலைக்காடு ஆகிய மூன்றில் ஒன்றில் தான் அவர் இருக்க வேண்டும் என்று ஊகித்திருந்தனர்.
அவர்களுக்கு தேவை மூன்றில் எது என்பது உறுதியாக தெரியவேண்டும்.
அதற்காக ஜொனியண்ணையின் பாதத்தை பின் பற்றி தொடர ஆரம்பித்தனர். இந்திய உளவுத்துறைகளின் கபட நோக்கத்தை முன்னமே புலிகளும் ஊகித்திருந்தனர். அதனால் அவர்களின் கண்ணில் மண்ணைத்தூவ புலிகளும் ஆயத்தமாகினர்.
அதன்படி குறிப்பிட்ட இடமொன்றுக்கு வந்து சேர்ந்த ஜொனியண்ணையை, கின்னியண்ணை அணியினர் அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைவரைக்கும் அழைத்து வந்தனர்.

இந்திய இராணுவத்தினர் தமிழர் தேசமெங்கும் கரையான் புத்துகள் போன்று பரவியிருந்தனர். இதனால் புலிகள் பயணிக்கும் போது குறிப்பிட்ட ஊரைக்கடப்பதற்கு அங்கு மறைப்பில் இருந்து போராடும் போராளிகளின் உதவி நாட்டப்படும்.
ஏனெனில் அவர்களுக்கு தான் இந்திய இராணுவத்தின் நடமாட்டம் நன்கு தெரியும். அவர்கள் போய்வருவதற்காக பாதுகாப்பான பாதை ஒன்றை உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்த பாதைகளை உபயோகித்து பாதுகாப்பாக புலிகள் நகர்வார்கள். கிட்டத்தட்ட தடி கொடுத்து (றிலே) ஓடுவதுபோல் அது இருக்கும்.
ஜொனியண்ணையை அழைத்து வருவதற்கு ஜோகியண்ணையையும் அவர்ட்கு உதவியாக மேஜர்.தங்கேஸ் அண்ணையையும் தலைவர் அனுப்பினார்.

அவர்களை சந்தித்த ஜொனியண்ணை இரகசியமாக பயணப்பட்டு தலைவரிடம் வந்து சேர்ந்தார்.
தலைவரிடம் வந்ததும் தலைவர் அவரிடம் தலைக்காயம் எப்படி இருக்கென்று நலம் விசாரித்தார். ஏனெனில் நெற்றியில் பட்டு காதுவழியே துப்பாக்கி ரவை ஒன்று சென்றதால் நெற்றியில் ஒரு இடத்தில் கடினமில்லாது மென்மையாக இருக்கும். இதனால் அவர் அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுவார். இது தான் தலைவர் எதுவுமே மறக்காது நினைவில் வைத்திருப்பார்.
தலைவரிடம் வந்தபின் தான் இந்திய இராணுவத்திற்கு எதிரான புலிகளின் வெற்றிகரத் தாக்குதலை அறியமுடிந்தது. அப்போதுதான் இந்திய அரசு தங்களுக்கு பொய்களை மட்டுமே கூறியது அவருக்கு புரிந்தது.


அவருக்கு அங்கேயே தலைவருடன் தங்கிவிட விருப்பம். ஆனால் தலைவரோ, இந்திய அரசின் தூதுவராக வந்துள்ளீர், அவர்களுக்கு எமது பதிலைக் கூறவேண்டும். ஆகவே திரும்பவும் அங்கு சென்று
பதிலைக் கூறிவிட்டு, அவர்களுக்கு தெரியாமல் மீண்டும் திரும்பவும் இங்கு வரும்படி கட்டளை இட்டார். இதன் மூலம் இந்திய அரசின் வஞ்சகத்தையும்,தலைவரின் நேர்மையையும் நீங்கள் அறியமுடியும்.!
அதன் படி சூட்டியண்ணையுடன் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர்களுக்கு உதவியாக லெப்.கேணல்.சந்திரண்ணை இடையில் வைத்து உதவினார். இவர்கள் புதுக்குடியிருப்பு கடந்து தேராவில் பகுதிக்கு வரும் போது, அங்கு பதுங்கியிருந்த இந்திய இராணுவத்தினர் தங்கள் வாக்குறுதியை மீறி நயவஞ்சகமாக ஜொனியண்ணை மீது தாக்குதல் மேற்கொண்டனர்.


இதில் அவர் வீரச்சாவடைந்தார். இதன் மூலம் இந்திய இராணுவத்தினர், புலிகளின் முக்கிய தளபதி ஒருவரை கொன்றும், தலைவரின் இருப்பிடப்பகுதியையும் குத்துமதிப்பாக இனம் கண்டனர்.
ஜொனியண்ணை மீதான தாக்குதல் தலைவரை சினம் கொள்ள வைத்தது. இந்திய இராணுவத்தினர் தலைவரின் இருப்பிடம் தெரிந்ததும் “செக்மேட்” என்றனர். அடுத்து இந்திய இராணுவத்தினரின் தாக்குதல் சில வாரங்களில் தொடங்கும் என்பதை தலைவர் உணர்ந்தார்.
அப்போது மணலாற்றில் குறைந்தளவான போராளிகளே இருந்தனர். மேலதிக போராளிகள் அவசர அவசரமாக மணலாற்றுக்கு வரவழைத்து, சண்டைக்குரிய சாதகமான இடங்கங்கள் ஆராயப்பட்டு, அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதே நேரம் குவியல், குவியல்களாக வரவிருக்கும் ,பல்லாயிரம் இந்திய இராணுவத்தை, சில நூறு போராளிகளுடன் எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியே இரவு பகலாக

தலைவர் யோசித்துக்கொண்டிருந்தார்

.

ஒருநாள் அதிகாலை எழுந்த தலைவர் நேராக இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் முகாமுக்கு சென்று ராஜூஅண்ணை, மற்றும் மணியண்ணையை (பசிலன்) கூப்பிடு, தனது எண்ணத்தில் தோன்றிய மிதிவெடியை பற்றி கூறி, அதை உருவாக்கக் கட்டளை இட்டார்.
அதன்படி 6இஞ்சி நீளமும் 3இஞ்சி அகலமும், 2இஞ்சி உயரமும் கொண்ட பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது.
பின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி (டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது.
இப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தரையப்பட்டது. (புரியா விட்டால் மிதிவெடியின் படத்தை பாக்கவும்) இதே போல கீழேயும் தகடு வைக்கப்பட்டது.


அதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. (இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும்) இது தான் அந்த பொறி முறை இது சாதாரணமாக சிலருக்கு தோன்றலாம்.?
இது பெரும் சேதத்தை எதிரிக்கு அன்று கொடுத்தது.!

ஆம், தலைவர் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டே அந்த மிதிவெடியை தயாரித்தார். பல கட்ட சோதனைக்கு பின் மிதிவெடி இறுதி வடிவம் பெற்றது. பகுதி பகுதியாக செய்யப்பட்டு பின் ஒன்றாக்கி முழுமையான தயாரிப்பில் எல்லோரும் பங்களித்தனர்.
அந்த மிதிவெடிக்கு காரணப் பெயராக ஜொனியண்ணையின் பெயரையே தலைவர் சூட்டினார்.!
அப்போது மிதிவெடியை புதைக்க ஆயத்தமான போது பெரும் பிரச்னை ஒன்றை நாம் அப்போது எதிர்கொண்டோம்.!
அதாவது மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும். அப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும்.
எல்லோருக்கும் குழப்பத்தில் இருக்கும் போது, தலைவரிடமிருந்தே அதற்கான தீர்வு வந்தது.!


மிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர்.
இதற்காகவே சில போராளிகளை தெரிவு செய்து, இதற்கான பயிச்சிகளைக் கொடுத்து, இரவோடு இரவாக இராணுவம் வரும் பாதைகள் எங்கும் புதைக்கப்பட்டது.
தனக்கான மரணக்குழி வெட்டப்பட்டது தெரியாது, இந்திய இராணுவத்தினர் “ஒப்ரேஷன் பவான்”எனப் பெயரிட்டு தலைவரை அழிக்கும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இந்த நடவடிக்கை 1,2,3 என வருடக்கணக்கில் நீண்டபோதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.


ஆனால், ஜொனியண்ணையின் பாதத்தைப் பின்பற்றி வந்த இந்திய இராணுவத்தினர் நூற்றுக்கணக்கில் தங்கள் பாதங்களை இழந்தனர்.!
இராணுவரீதியாக போரில் ஒருவரைக் கொல்வதை விட காயப்படுத்துவது உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும். அவர்களின் மரண ஓலம், போரிடும் இராணுவத்தின் உளவுரணைச் சிதைத்து போரிடும் வேகத்தை குறைக்கும்.
அன்று இந்த ஜொனி மிதிவெடியினால் இந்திய இராணுவம் சின்ன பின்னமாகி கதிகலங்கியது. அன்றைய தலைவரின் இராணுவ ஆளுமை எம் போராட்டத்தை காத்து நின்றது. பின்னைய நாளில் அந்த மிதிவெடி நவீனமயப்படுத்தி, எதிரிக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணியது.!
தாயகப்போராட்டத்தில் எல்லாத் துறைகளிலும் தலைவரின் ஆளுமையும், நெறியாழ்கையும் தங்கு தடையின்றி இருந்தது.! வரலாற்றுடன் துரோணர்.!!

வெடி பொருட்கள் உற்பத்தி பற்றி அறிந்து இருப்பீர்கள் அடுத்து1988 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஒப்பிரேசன் பவான் நடவடிக்கை இந்திய இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டது அதில் பங்கு பற்றிய போராளி ஜெயராஜ் குறிப்பிடுகையில்,. அப்பொழுது இந்திய இராணுவம் சிறு சிறு குழுக்களாக எமது பாசறைகளை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்பொழுது ஆண் போராளிகளும் பெண் போராளிகளுமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியான எமது புனிதபூமிக்குப்பக்கத்தில் இருந்த ஒரு இடத்தில் இந்திய இராணுவத்தின்வருகையை

எதிர்பார்த்துக்கொண்டு காவல்

கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருநதோம். அப்பொழுது ஏனைய போராளிகள் இலகு ஏந்திரத் துப்பாக்கிகள் வைத்து இருந்தார்கள் ஆனால் என்னிடம் ஒரு கைத்துப்பாக்கி மட்டும்தான் இருந்தது, ஏனெனில் அப்பொழுது ஆயுதங்கள் அனைத்தையும் இத்திய இராணுவத்திடம் ஒப்படைத்தமையால் எமக்கு ஆயுதப் பற்றாக்குறையும் இருந்தது, அதனால் கைதுப்பாக்கி மட்டும் என்னிடம் இருந்தது திடீரன நாங்கள் எதிர்பார்க்கவில்லை இந்திய இராணுவம் எங்களை நோக்கிச்சுடத் தொடங்கிவிட்டது

எங்களோடு நின்ற ஆண் பெண் இருபகுதியினரும் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தார்கள். பெண் போராளிகளின் தரப்பில் போராளி சஞ்சிகா . போராளி செல்வி, போராளிஅருந்ததி, என ஆண் போராளிகளில் 7ளிற்கு மேற்பட்ட போராளிகள் நின்று சுட்டுக் கொண்டிருந்தோம் . சண்டை நடந்துகொண்டிருக்க முதலாவது போராளி சத்தியன் அவர்கள் காயம் அடைந்தார். அது சிறு காம் அதை அவர் பெரிதுபடுத்தவில்லை தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.அதை அடுத்துலெப், கேணல் நவம் அவர்கள் நெஞ்சில் காயப்பட்டார். ஆனால் அது சிறு காயமாகயிருந்தபடியால் அவர் பின்னால் போகவில்லை சண்டையிட்டுக் கொண்டிருந்தார், அதையடுத்து நான் இரண்டு இராணுவச் சிப்பாய்களைக் கண்டு எனது கைத்துப்பாக்கியால் 7 ரவைகள் அவர்களை நோக்கிச  சுட்டேன். கடுமையான வெடிச்சத்தம் காது அடைப்பது போல் இருந்தது அடுத்து  இரண்டு சிப்பாய்கள் பெண் போராளிகளின் பக்கம் ஒடுவதைப் பார்த்தேன், திடீரென எனது இடுப்புப் பக்கம் சுளுக் என தீண்டினாப்போல் இருந்தது. குனிந்து பார்த்தேன் இரண்டு கால்களும் இரத்தததால் நனைந்து கொண்டுயிருந்தது,  அச்சண்டையின் போது சுரேஸ் என்ற மட்டக்களப்புப் மாவட்டத்தைச் சேர்ந்த  போராளி சிறிது நேரம் முன்னர் விரச்சாவு அடைத்தார் 

நானும் விரச்சாவு அடையப் போகின்றேன் என நினைத்தேன் ,நான் மயக்கத்தில் நிலத்தில் இருந்தேன் உடனே ஒரு ஆண் போராளி என்னத்தூக்கினார் ஆனால் அவரால் தூக்க முடியாமல் இருந்தது. அதைப் பார்த்த பெண்போராளி சஞ்சிகா . விடுதம்பி நான் தூக்கின்றேன் என சொல்லிஎன்னை அவரின் தோழில் தூக்கிக்கொண்டு குழந்தையைக் கொண்டுபோவதுபோல் 3 கிலோ மீட்டர் நடந்து எங்களின் தற்காலிக மருத்துவமனையில் ஒப்படைத்தார், என்னை ஒப்படைக்கும்போது அவரின் உடைகள் எல்லாம் இரத்தத்தால் நனைந்து காணப்பட்டார், பின்னர் அவர் விடைபெற்றுச் சென்றார் ,அங்கே வேறு இடத்தில் நடந்த சண்டையில் பிரிகேடியர் எஸ்சோ அவர்களும் காயம் அடைந்து அங்கே நின்றார்.

தலைவருக்குப்பக்கத்தில் தளபதி சூசை / எஸ்சோ

இருவரையும் வோட்டில் ஏற்றி மருத்துவச் சிகிச்சைக்காக எங்களை இந்தியயா அனுப்பினார்கள்.

நாங்கள் மூன்று நாட்களில் இத்திய போய்ச் சேர்ந்தோம் என அவர் குறிப்பட்டார்.அடுத்து களத்தில் நின்றபோராளி காவேரி குறிப்பிடுகையில் தொடர்ந்து சண்டை நடந்தமையால் தளபதி சொர்னம்,  தளபதி ஜேம்ஸ், என நிறையப் போராளிகள் அங்கே வந்து விட்டார்கள், அதனால் சண்டை எமக்கும் இந்திய இராணுவத்திற்கும் கடுமையாக நடந்தது. அதில் சத்தியன் மிகவும் திறமையானவர். இவர் இந்திய நாலாவது பயிற்ச்சி முகாமில் பயிற்சி எடுத்தவர் கிளி மாவட்டத்தைச் சேர்ந்தவர், அச்சண்டையில் இவர் குறி பார்த்து  10 இந்திய இராணுவத்தைச் சுட்டு விட்டார், அதில் பத்து இந்திய இராணுவத்தின் உடல்களையும் காயம் அடைந்த ஒரு இந்திய இராணுவத்தையும் உயிரோடுபிடித்தோம், எமது தரப்பில் இரு போராளிகள் விரச்சாவு அடைந்தனர் அதில் போராளி கோபி மிதிவெடி வைக்கச்சென்ற வேளை இராணுவத்தின் சூட்டில் வீரச்சாவு அடைந்தார், என அவர் குறிப்பிட்டார். அதில் திறமையாகச் செயல்பட்ட சத்தியன் என்பவரை அவர்களின் வீட்டில் கடுமையான கஸ்டம் என்பதால் தலைவரால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார், அத்தோடு அவரின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக தேசியத் தலைவரால் அவருக்கு உழவு இயந்ந்திரம் ஒன்றும் வேண்டிக் கொடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்,

அடுத்து எந்த இறுக்கமான சூழ்நிலையிலும் தலைவரின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை விரிவாகப்பார்ப்போம்

தொடரும் அன்புடன்
ஈழமதி

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *