ஈரானின் ஃபோர்டோ அணுஉற்பத்தி நிலையத்தை தகர்த்த “பங்கர் பஸ்டர்” வகை வெடிகுண்டுகளை பயன்படுத்து தொடர்பில் தனது ராணுவ ஆலோசகர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

சுமார் 30,000 பவுண்டுகள் எடை கொண்ட Massive Ordnance Penetrator (MOP) என்ற பெயரிலான “பங்கர் பஸ்டர்” வகை குண்டுகள் அமெரிக்க ஆயுதக் களஞ்சியத்தில் உள்ளன.ஆனால் இஸ்ரேலுக்கோ இந்த வகை குண்டுகளோ, அவற்றைப் பயன்படுத்த தேவையான பெரிய ரக விமானங்களோ இல்லை.

ஃபோர்டோ அணுஉற்பத்தி நிலையம் மிக ஆழத்தில், பாறை அமைப்புகளுக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இஸ்ரேலின் விமானத் தாக்குதல்களால் அதற்கு எந்த சேதத்தை ஏற்படுத்த முடியாது.

இந்த நிலையில், ஃபோர்டோ அணுஉற்பத்தி நிலையத்தை அழிக்க இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், இந்த MOP குண்டுகள் ஃபோர்டோவை அழிக்கக் கூடியவை என அமெரிக்க அதிகாரிகள் ட்ரம்பிடம் தெரிவித்துள்ள சூழலில் இஸ்ரேலுக்கு உதவுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

ஈரானை நோக்கி பாயப்போகும் அமெரிக்காவின் இரும்பு பறவை | Us Joins Fight Against Iran Middle East Conflict

இரண்டாம் இணைப்பு

ஈரானை தாக்கும் திட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப்(Donald Trump) ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் தாக்குதல் நடத்த உத்தரவிடுவதற்கு முன்பு ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடுமா என அவர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.   

முதலாம் இணைப்பு

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாகச் சேர்ந்துகொள்கின்றதா என்பது குறித்து நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ள பின்னணியில், தங்கள் பக்கம் நின்றதற்காக ட்ரம்பிற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.

தாங்கள் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் நேற்று இரவிலும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் மிகவும் நட்பான உரையாடல் நடந்தது எனவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் இழப்பு

அத்துடன், “இஸ்ரேல் தற்போது பல வலி தரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. எனினும், மக்கள் உறுதியுடன் இருக்கின்றனர், இஸ்ரேல் இதைவிட பலமாக இருக்கவில்லை என்றும்,” அவர் தனது நாளாந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஈரானை நோக்கி பாயப்போகும் அமெரிக்காவின் இரும்பு பறவை | Us Joins Fight Against Iran Middle East Conflict

மேலும், காசா பகுதியில் கடும் மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எல்லா பிணைக்கதிகளும் வீடு திரும்பும் வரை, ஹமாஸ் முற்றிலும் அழிக்கப்படும் வரை தாங்கள் தொடர்ந்து போராடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் வருகைக்கு சரியான நேரம்

இவ்வாறானதொரு பின்னணியில், சர்வதேச ஊடகங்கள் மேற்காட்டியுள்ள இஸ்ரேலிய உயர் அதிகாரிகள், அமெரிக்கா இந்த தாக்குதல்களில் இணைந்துவிடும் என உறுதியாக கூறியுள்ளனர்.

ஈரானை நோக்கி பாயப்போகும் அமெரிக்காவின் இரும்பு பறவை | Us Joins Fight Against Iran Middle East Conflict

“அமெரிக்கா இதில் பங்கேற்காமல் இருந்தால் அதிர்ச்சி ஏற்படும். இது ‘எப்போது’ என்ற கேள்வி மட்டுமே; ‘இல்லையா?’ என்ற கேள்வி அல்ல,” என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்காலிக வெற்றிகளை மேம்படுத்த விரும்புகின்றார் என்றும், தற்போதைய சூழ்நிலை அவர் பங்கேற்க ஏற்ற நேரமாக இருப்பதாக அவர் உணர்கிறார் எனவும் இஸ்ரேலிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *