செம்மணி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் எனக் கோரி, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும், பல வெளிநாட்டு தூதரகங்களுக்கும் இந்த கோரிக்கைகள் முறையாக வலியுறுத்தப்பட்டன.

தமிழ் ஏதிலிகள் பேரவை வெளியிட்ட அறிக்கையில், இலங்கை அரசால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை மீண்டும் செம்மணி புதைகுழிகளால் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தது.