கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு பிராந்திய வைத்தியசாலையில், ஆம்புலன்ஸ் சாரதி ஒருவர், ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பிராந்திய வைத்தியசாலையில் இருந்து கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இளம் பெண்ணை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியர் வந்ததாகவும், வைத்தியசாலையில் இருந்து திரும்பி வரும் போது ஓட்டுநர் வெறிச்சோடிய இடத்தில் அவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சக ஊழியர் | Female Healthcare Worker Sexually Abused Ambulance

இந்த சம்பவம் தொடர்பாக பெண் சுகாதார ஊழியர் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை. சாரதியின் அச்சுறுத்தல் காரணமாகவே அவர் முறைப்பாடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்தியர் சேனக தலகலவை தொடர்பு கொண்டபோது, பெண் சுகாதார ஊழியர் பொலிஸில் நேற்று முறைப்பாடு அளித்துள்ளார்.

முறைப்பாடு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக கம்பளை வைத்திசாலைக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments