கரந்தெனிய காவல் பிரிவின் கொட்டாவ பகுதியில் தாயும் மகனும் வெட்டிக் கொல்லப்பட்டனர். வீட்டினுள் இருந்தபோது இந்தக் கொலை நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர்கள் 75 வயதுடைய பெண் மற்றும் 25 வயதுடைய இளைஞர்.
குறித்த இளைஞர் பாடசாலை பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் என்றும் கூறப்படுகிறது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
எனினும், கொலைக்கான காரணம் அல்லது கொலையை யார் செய்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து கரந்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
