இலங்கை போக்குவரத்து சபைக்கு 450 ஓட்டுநர்கள் மற்றும் 300 நடத்துனர்களை நியமிக்கப் போவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதோடு இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண்கள் நடத்துனர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் பெண்களைப் பணியமர்த்த அமைச்சு எதிர்பார்க்கின்றதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
விமானப் பணிப்பெண்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற சீருடைகளை பெண் நடத்துனர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.