இறுதியுத்தம் நடந்து 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் எத்தனை பேர் இந்த போராட்டத்திற்காக சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நேரடியாக தலையிடாமல் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து ஒரு உறவுபாலத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், எங்களுடன் கதைப்பதற்கு தடையுள்ளதாக நாங்கள் பார்க்கவில்லை, எனினும் அதற்கும் பயப்படுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களுக்கான தீர்வு எவ்வாறு கிடைக்கும், என கேள்வியெழுப்பினார்.
இந்த விடயங்கள் தொடர்பிலும், ஜெனிவா விவகாரம்,மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடு அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி…